கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீ ராமநாதன் மாவத்தையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
பொலிஸ் பிரேத அறையில் தற்போது குறித்த நபரின் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் புகைப்படம், அங்க அடையாளங்களை வைத்து அவர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத்தருமாறு கொட்டாஞ்சேனை பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகின்றனர்.
விபத்து இடம்பெறும் போது குறித்த நபர் கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் இளம் நீல நிற சேட்டும் அணிந்திருந்துள்ளதுடன் தலை முடி, தாடி ஆகியன சில நாட்களுக்கு முன் வெட்டப்பட்டதை போன்று காட்சியளிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இவர் 5 அடி 6 அங்குல உயரமானவர் என குறிப்பிடும் பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கு நேரடியாகவோ அல்லது 0112431861, 0112432898, 0112435653 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்தோ அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகின்றனர்.
பொலிஸ் பிரேத அறையில் தற்போது குறித்த நபரின் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் புகைப்படம், அங்க அடையாளங்களை வைத்து அவர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத்தருமாறு கொட்டாஞ்சேனை பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகின்றனர்.
விபத்து இடம்பெறும் போது குறித்த நபர் கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் இளம் நீல நிற சேட்டும் அணிந்திருந்துள்ளதுடன் தலை முடி, தாடி ஆகியன சில நாட்களுக்கு முன் வெட்டப்பட்டதை போன்று காட்சியளிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இவர் 5 அடி 6 அங்குல உயரமானவர் என குறிப்பிடும் பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கு நேரடியாகவோ அல்லது 0112431861, 0112432898, 0112435653 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்தோ அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக