ஞாயிறு, 5 ஜூலை, 2015

உங்­க­ளுக்கு வியாழ மாற்றம் எப்­படி அமையும்?

ஜாதக கிரக நிலையில் ஒரு­வரின் ஆளு­மைத்­தி­ற­னுக்கும் உயர்ந்த ஆய்வு நிலைக்கும், சமூக அந்­தஸ்­து­டைய கெள­ர­வ­மான வாழ்­விற்கும் முக்­கிய கார­ணி­யாக அமை­பவர் பிர­கஸ்­பதி எனப்­படும். குரு­ப­கவான். இவர் வரு­டத்­திற்கு ஒரு முறை ஒவ்­வொரு ராசி­யாக சஞ்­சாரம் செய்­பவர். அதன் மூல­மாக பன்­னிரு ராசி­க­ளுக்கும், பலா­ப­லன்கள் நன்மை, தீமை என அமை­வ­துண்டு. அந்த வகையில். வாக்­கிய பஞ்­சாங்க கணி­தப்­படி நேற்று ஞாயிறு பின்­னி­ரவு 11 மணி 41 நிமிட நேர­ம­ளவில் கட­க­ரா­சியில் இருந்து தனது நட்பு வீடான சிம்­ம­ரா­சிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்தப் பெயர்ச்­சியின் மூலம் நல்ல அதிர்ஷ்டம், சுமா­ரான பலன், மத்­திம பலன் என பலா­ப­லன்கள் ஏற்­படும்.



எனவே அதற்­கு­ரிய வழி­பாடு, செயற்­பாடு என்­பன எம்மைக் காத்து நிற்கும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை. நாம் எல்­லோரும் எங்கள் மனங்­க­ளிலே அன்பு, அறம், அடக்கம், கொண்டு செயற்­பட்டால் இறை­யருள் எமக்குள் இருக்கும். பெரும் துன்­பங்கள் எம்மை அணு­காமல் காத்­திடும். எனவே இறைவன் தந்த இந்த அற்­பு­த­மான மனி­தப்­பிறப்பில் “மனிதம்” எனும் மேன்­மையை மறந்து செயற்­ப­டு­கின்ற எமக்கு கிர­கங்கள் விதி­வ­ழி­யாக வந்து எமக்கு அறி­வுரை தரு­கின்­றன. தமது பலன் மூல­மாக இதை நன்கு உணர்ந்து நாம் செயற்­பட்டு வாழ்­வி­யலை வள­மாக்­குவோம்.

மேடம்

(அஸ்­வினி, பரணி,

கார்த்­திகை 1ஆம் பாதம்)

மேட­ராசி அன்­பர்­களே!

உங்­க­ளுக்கு அமையப் போகும் குருப் பெயர்ச்சி அமோ­க­மா­ன­தா­கவே இருக்கும். பஞ்­ச­மஸ்­தானம் எனப்­படும் 5ஆம் இடம் குரு­ப­கவான் அமை­கின்றார். எல்லா வித­மான சிறப்­பு­க­ளையும் பெறக்­கூ­டிய நிலை அமையும். எதிர்­பார்ப்­பு­களில் நல்ல வெற்­றிகள் கிடைக்கும். தொழில் நிலையில் முன்­னேற்­ற­க­ர­மான பலன்கள் அமையும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மான நிலையில் அமையும்.குடும்­பத்தில் மகிழ்வும் சுப­கா­ரிய நிலை­களும் அமையும். உங்­களின் நீண்ட நாள் பிரச்­சி­னைகள் தீரு­கின்ற நிலை அமையும். புதிய முயற்­சி­களில் நல்ல வெற்­றிகள் அமையும் நிலை உண்டு. கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் சுமு­க­மான நிலைகள் அமையும். குடும்ப உறுப்­பி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் பெறக்­கூ­டிய நிலைகள் அமையும். பிள்­ளை­களின் மூலம் அனு­கூ­லங்கள் அமையும். உங்­களின் ராசிக்கு அட்­ட­மத்து சனியின் சஞ்­சாரம் நடை­பெ­று­வதால் இடை­யி­டையே சிறு சிறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைகள் அமை­யலாம். இருப்­பினும் பெரும் சிர­ம­மான பலன்­க­ளுக்கு இட­மில்லை. மன­தில் இருக்­கின்ற சுமைகள் நீங்­கக்­கூ­டிய நிலை இருக்கும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் மற்றும் குழந்தைப் பேறு போன்ற பலா­ப­லன்­களை எதிர் கொள்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­போது நிறை­வு­டை­ய­தாக கிடைக்கும் நிலை உண்டு. பெண்­க­ளுக்கு மகிழ்வும் மாண­வர்­க­ளுக்கு கல்­வியில் நல்ல மேன்­மையும் அமையும் நிலைகள் உண்டு. எனவே எல்லா வகை­யிலும் இந்தக் குருப் பெயர்ச்­சியின் மூல­மாக நீங்கள் நன்­மை­களைப் பெறலாம். எதை­யுமே தீர்க்­க­மாக சிந்­தித்து செயற்­ப­டு­கின்ற ஆற்­றலும் நல்ல ஆளுமை நிறைந்த நிர்­வா­கத்­தி­றனும் கொண்ட நீங்கள் இந்தக் குருப் பெயர்ச்­சியின் மூல­மாக உங்­களின் உண்­மை­யான உழைப்­பிற்குரிய உன்­னத பலன் பெறு­வீர்கள்.

இட­ப­ம்

(கார்த்­திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1ஆம், 2ஆம் பாதம்)

இட­ப­ராசி அன்­பர்­களே!

உங்­க­ளுக்கு அமையும் குருவின் பெயர்ச்சி பலன்கள் ஓர­ள­விற்கு அனு­கூலம் தரு­வதாய் அமையும். தொழில் நிலை­களில் சற்று அலைச்சல் நிலைகள் அமைந்­தாலும் தொழில் சார்ந்த முன்­னேற்றம் அமையும். குடும்ப நிலையில் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன் ஏற்­படும். இருப்­பினும் தாயா­ருடன் சிறு சிறு மனச்­சஞ்­சல நிலைகள் இடை­யி­டையே ஏற்­பட்டு மறையும். எதிர்­பா­ரா­த­வகை திடீர் மருத்­துவச் செல­வு­களும் அமையும் நிலை இருக்கும். புதிய முயற்­சி­களில் சற்று பொறுமை நிதா­னத்­துடன் செயற்­ப­டவும். கடன் பிரச்­சி­னைகள் சற்று இழு­பறி நிலை­களைக் கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் பொறு­மை­யாக செயற்­ப­டவும். பொது­வா­கவே எதிர்­பா­ராத வகையில் திடீர் சிக்கல் நிலை­களும் மனச்­சஞ்­சல நிலை­களும் இடை­யி­டையே ஏற்­ப­டு­கின்ற நிலை இருக்கும். திரு­மணம், வெளி­நாட்டுப் பிர­யாணம் போன்ற விட­யங்­களை எதிர் கொள்­கின்­ற­வர்­கட்கு சற்றுச் சிர­மங்­களும் இழு­பறி நிலை­களும் ஏற்­படும். எனவே அதற்கு ஏற்­பு­டை­ய­தான பொறு­மை­யான நிதா­ன­மான செயற்­பாடு கொள்­வதே மிகவும் நல்­லது. மாண­வர்­களைப் பொறுத்­த­வரை கல்வி நிலை­யிலே அனு­கூ­ல­மான பலன்கள் அமையும் நிலை இருக்கும். பொது­வாக நீங்கள் எடுக்­கின்ற முயற்­சி­க­ளில் சற்று அலைச்­சலும் இழு­பறி நிலையும் தொடரும். எல்லா விட­யங்­க­ளிலும் தனித்­து­வ­மான ஒரு போக்­கையும் மற்­ற­வர்­களின் மனதை புரிந்து கொள்ள முடி­யாத இறுக்­க­மான இத­யமும் கொண்ட நீங்கள் எதையும் ஆளு­மை­யுடன் செயற்­ப­டுத்தும் ஆற்றல் கொண்­ட­வர்கள். எனவே சாதுர்­ய­மாக செயற்­பட்டு உங்கள் தேவை­களை அடை­வீர்கள்.

மிது­ன­ம்

(மிரு­க­சீ­ரிடம் 3ஆம் 4ஆம் பாதம்,

திரு­வா­திரை, புனர்­பூசம் 1ஆம் 2ஆம்

3ஆம் பாதம்)

மிது­ன­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் ஜெயஸ்­தானம் எனப்­படும் மூன்றாம் இடம் சஞ்­ச­ரிக்­கின்றார். எனவே பெரும் நன்­மை­களை நீங்கள் எதிர்­பார்க்க முடி­யாது. எதையும் சற்று நிதா­ன­முடன், பொறு­மை­யுடன் செயற்­ப­டு­வதே உங்­க­ளுக்கு மிக நல்­லது. தொழில் நிலை­களில் தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­வரும். வேலைப்­பளு சற்று அதி­க­மாக அமையும். எதிர்­பார்ப்­பு­களில் தடை, தாமத நிலைகள் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப செயற்­ப­டவும். குடும்ப நிலையில் சகோ­த­ரர்­க­ளுடன் மனஸ்­தாபம் ஏற்­படும். தொழில் நிலையில் பத­வி­களில் சிக்கல் நிலை இருக்கும். மன நிலையில் அதி­க­மான யோச­னை­களும், சஞ்­சல நிலை­களும் இருக்கும். திரு­மணம், வெளி­நாட்டுப் பயணம் என்­ப­ன­வற்றில் தடை, தாமத நிலைகள் இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­கவே அமையும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் நிதானம் தேவை. உங்­களின் ராசி நிலைக்கு சனீஸ்­வரன் 6ஆம் இடம் அமை­வது மிகவும் அனு­கூ­ல­மான நிலை­யாகும். பெரும் சிர­மங்­க­ளையோ கஷ்ட நிலை­க­ளையோ ஏற்­ப­டுத்­தாது இருப்­பினும் வியா­ழக்­கி­ழ­மை­களில் குரு­ப­க­வா­னுக்கு மஞ்சள் நிற புஷ்­பத்தால் அர்ச்­சனை செய்­வ­தோடு கடலை மாலையும் அணி­வித்து வழி­பட்டு வரு­வது மிகவும் நல்­லது. ரக­சி­யங்­க­ளையும் சாணக்­கி­ய­மான குறுக்­கு­வழி செயற்­பா­டு­க­ளையும் அதிகம் உங்கள் மன­நி­லையில் கொண்­டுள்ள நீங்கள் எதையும் சமா­ளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் கொண்­ட­வர்கள். இதனால் இந்தக் குருப்­பெ­யர்ச்சி பலனை நன்கு உணர்ந்து அதற்­கேற்ப வெற்றி பெறும் ஆளு­மையை கொண்­டி­ருப்­பீர்கள்.

கட­கம்

(புனர்­பூசம் 4ஆம் பாதம், பூசம்,

ஆயி­லியம்)

கட­க­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் சஞ்­சாரம் தனஸ்­தானம் எனப்­படும் இரண்டாம் இடம் அமை­வது மிகவும் சிறப்­பான பலா­ப­லன்­களைக் கொடுக்கும். எடுக்­கின்ற முயற்­சி­களில் நல்ல வெற்­றிகள் அமையும். தொழில் நிலையில் மேன்­மை­யான முன்­னேற்ற பலன்கள் அமையும் நிலை உண்டு. குடும்­பத்தில் மகிழ்வும் உற­வி­னர்­களின் மூலம் நன்­மை­களும் அமையும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மாக அமையும் நிலை­யுண்டு. எதையும் திட்­ட­மிட்டு செய்­யக்­கூ­டிய ஆற்றல் அமை­கின்ற நிலை ஏற்­படும். தொழில் சார்ந்த பதவி உயர்­வு­களும் வெளி­நாட்டுப் பிர­யா­ணங்­களும் அமையும் நிலை இருக்கும். திரு­மணம் குழந்­தைப்­பேறு போன்ற பலா­ப­லன்­களை எதிர் பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் நிறை­வு­டை­ய­தாக அமையும். பொது­வாக உங்­களின் நீண்ட நாள் பிரச்­சி­னைகள் சுமு­க­மாக தீரும் நிலை அமையும். உங்­களின் வழக்கு விவ­கா­ரங்­களில் வெற்­றிகள் அமையும். புதிய முயற்­சி­களில் எதிர்­பார்க்­கின்ற வெற்­றிகள் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும். எனவே உங்­களின் தொழில் நிலை­களில் நீங்கள் நினைக்கும் புதிய திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்திக் கொள்­ளலாம். மாண­வர்­களின் கல்வி நிலையில் முன்­னேற்­ற­க­ர­மான பலன் அமையும். பரீட்­சை­களில் நல்ல பெறு­பேறு பெறலாம். பொது­வா­கவே கல­க­லப்­பாக எல்­லோ­ரு­டனும் பழகும் குண இயல்பை பெற்­றுக்­கொண்ட நீங்கள் மற்­ற­வர்­களின் வளர்ச்­சியை தாங்கிக் கொள்ள மாட்­டீர்கள். இதனால் பல­வி­ட­யங்­க­ளிலும் மற்­ற­வரை விட முன்­னி­லையில் இருக்க வேண்டும். என்­கின்ற துடிப்பு உங்­க­ளிடம் மிக அதி­க­மி­ருக்கும். இந்தக் குருப் பெயர்ச்­சியும் உங்­க­ளுக்கு மிகவும் சாத­க­மான பலன்­களைக் கொடுக்கும்.

சிம்­ம­ம்

(மகம், பூரம், உத்­தரம்

1ஆம் பாதம்)

சிம்­ம­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு ஜென்­ம­குரு எனும் நிலையில் உங்­களின் ராசிக்கு குரு­ப­கவான் அமை­கின்றார். எனவே எடுக்­கின்ற முயற்­சி­களில் நிதா­ன­மாக பொறு­மை­யாக செயற்­பட வேண்டும். தொழில் நிலை­களில் தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­களை எதிர் கொள்ள வேண்டி வரும். தொழில் நிலையில் வீண் அலைச்சல் நிலையும் பதவி பறி­போகும் நிலை­களும் அமையும். எனவே நீங்கள் உண்டு உங்­களின் வேலை உண்டு என இருப்­பதே உங்­க­ளுக்கு மிக மிக நன்மை தரும். குடும்­பத்தில் மனச்­சஞ்­ச­லமும் தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­களும் அமையும். உற­வி­னர்­க­ளுடன் மனஸ்­தாபம் ஏற்­படும். உடல் நிலையில் சிறு சிறு சுக­யீ­னங்கள் ஏற்­பட்டு மறையும். மருத்­துவ செல­வு­களும் அமையும். எதையும் திட்டம் தீட்டி செய்ய முடி­யாத நிலை இருக்கும். எனவே பொறு­மையும் நிதா­னமும் மிகவும் முக்­கியம். கடன் பிரச்­சி­னை­களில் இழு­பறி தாமத நிலைகள் அமையும். மாண­வர்­களின் கல்வி நிலையில் மந்த நிலை­களும் இழு­பறி நிலை­களும் அமையும். எனவே ஊக்­கத்­துடன் செயற்­பட வேண்டும். பொது­வா­கவே மன­துக்­குள்ளே ஒரு திட்டம் வைத்துக் கொண்டு வெளியில் வேறு வித­மாக பேசிக் கொள்ளும் குண இயல்பு கொண்­ட­வர்கள். வைராக்­கி­யமும் பிடி­வா­தமும் மிகவும் முதன்­மை­யாகக் கொண்டு செயற்­படும் குணம் உங்­க­ளிடம் மேலோங்கி இருக்கும். இத­னா­லேயே பல­வித பகை­மை­களை தேடிக் கொள்­வீர்கள். உங்­க­ளுக்கு அமையும் குருப் பெயர்ச்­சியும் மத்­தி­ம­மா­கவே அமையும். எனவே பொறுமை நிதா­னத்­துடன் செயற்­ப­டவும்.

கன்­னி­

(உத்­தரம் 2,3,4ஆம் பாதம் அத்தம்,

சித்­திரை 1ஆம் 2ஆம் பாதம்)

கன்­னி­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் விர­யஸ்­தானம் எனப்­படும் 12ஆம் இடத்­திலே அமை­கின்றார். எதிர்­பா­ரா­த­வ­கையில் திடீர் செல­வுகள் அமையும் நிலை இருக்கும். சுப­வி­ரயம் எனப்­ப­டு­கின்ற நல்ல விட­யங்­க­ளுக்கு உரிய செல­வு­க­ளா­கவே இவை அமை­கின்ற நிலையும் இருக்கும். தொழில் நிலை­களில் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலா­ப­லன்கள் அமையும் நிலை இருக்கும். இருப்­பினும் தொழில் சார்ந்த நிலை­களில் எடுக்கும் தீர்­மானம் முடிவு என்­ப­ன­வற்றில் சற்றுக் குழப்ப நிலைகள் அமையும் நிலை இருக்கும். குடும்ப நிலையில் குழப்­ப­மான சில தொந்­த­ர­வுகள் ஏற்­பட்டு மறையும். பண­வ­ரவு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மாக அமையும். உற­வினர் நண்­பர்­க­ளுடன் வாக்குவாதங்கள் ஏற்­ப­டு­கின்ற நிலையும் இருக்கும். திருத்­தல யாத்­தி­ரைகள் செல்லக் கூடிய நிலை­களும் அமையும். திரு­மணம், வெளி­நாட்டுப் பிர­யாணம் போன்ற பலன்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­கட்கு அப்­பலன் சற்று சுமா­ரான நிலை­யி­லேயே அமையும். மாண­வர்கள் தங்­களின் கல்வி நிலை­யில் கூடு­த­லான நிலைப்­பா­டு­டைய முயற்சி எடுக்க வேண்டும். பரீட்­சை­களில் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும். எந்த விட­ய­மாக இருந்­தாலும் சற்று இழு­பறி தாமத நிலை­களில் பின்­னரே அனு­கூ­ல­மான பலன்கள் அமையும். பொது­வா­கவே எதை­யுமே அலசி ஆராய்ந்து செயற்­ப­டு­கின்ற குண­மு­டைய நீங்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்­டீர்கள். உங்­க­ளு­டைய செயலும் முடி­வுமே இறு­தி­யானதாக இருக்கும். எனவே நிதா­ன­மாக வெற்­றி­பெ­றுக!.

துலாம்­

(சித்­திரை 3ஆம் 4ஆம் பாதம்,

சுவாதி, விசாகம்

1ஆம் 2ஆம் 3ஆம் பாதம்)

துலாம் ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் லாபஸ்­தானம் எனப்­படும் 11ஆம் இடம் அமை­கின்றார். எல்லா வகை­யிலும் அனு­கூ­ல­மான சிறப்­பான பலன்கள் அமை­கின்ற நிலை உண்டு. எடுக்­கின்ற முயற்­சி­களில் நல்ல வெற்­றிகள் அமையும். தொழில் நிலையில் மேன்­மை­யான சிறப்­பான முன்­னேற்­றங்கள் அமையும். பதவி உயர்வும் தொழில் சார்ந்த வெளி­நாட்டுப் பய­ணங்­களும் அமையும் நிலை உண்டு .குடும்­பத்தில் குதூ­க­ல­மான நிலைகள் அமையும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் அமை­கின்ற நிலை உண்டு. திரு­மணம், குழந்தைப் பேறு போன்ற பலன்­களை எதிர் கொள்­கின்­ற­வர்­க­ளுக்கு நிறை­வான நல்ல அனு­கூல பலன் அமையும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மாக அமையும். கொடுக்கல் வாங்­கல்­களில் சுமு­க­மான நிலை அமையும். வழக்கு விவ­கா­ரங்கள் வெற்­றி­யைத்­தரும். நீங்கள் எதிர் பார்க்­கின்ற நீண்ட நாட் கன­வுகள் பலி­த­மாகும் நிலை இருக்கும். புதிய தொழில் முயற்­சிகள் வெற்­றி­க­ளையும் அனு­கூல பலன்­க­ளையும் கொடுக்கும். மாண­வர்­க­ளுக்கு கல்வி நிலையில் நல்ல முன்­னேற்­றமும் பரீட்­சை­களில் சிறப்­பான பெறு­பே­று­களும் கிடைக்கும் நிலை இருக்கும். உங்­க­ளுடன் எதிர் முனையில் போட்டி போட்டுக் கொண்டு இருந்­த­வர்கள் உங்­க­ளிடம் சமா­தா­ன­மாக வரு­வார்கள். துவ­ளாத மனமும் நேர்­மை­யான நல்ல செயற்­பாடும், சமூக அக்­க­றையும் தெய்வ பக்­தியும் அதிகம் உழைக்கும் செயலும் கொண்ட உங்­க­ளுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி சகல வழி­க­ளிலும் நன்மை தரும்.

விருச்­சி­க­ம்

(விசாகம் 4ஆம்

பாதம், அனுசம், கேட்டை)

விருச்­சி­க­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் ஜீவ­னஸ்­தானம் எனப்­ப­டு­கின்ற பத்தாம் இடம் அமை­கின்றார். சற்று மத்­தி­ம­மான பலனே அமையும் நிலை இருக்கும். தொழில் நிலை­க­ளில் மிகவும் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும். திடீர் பிரச்­சி­னைகள், பதவி மாற்றம், இட­மாற்றம் போன்ற பலன்கள் அமையும் தேவை­யற்ற வீண் தலை­யீ­டு­களை தவிர்த்து உங்­களின் செயற்­பாட்­டுடன் இருப்­பதே மிகவும் நல்­லது. எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலையில் தடை­களும் தாமத நிலை­களும் அமையும். பண­வ­ரவு சற்று சுமா­ரா­ன­தா­கவே அமையும். குடும்­பத்தில் மந்­த­மான நிலை­களும் மனச்­சஞ்­ச­லங்­களும் அமையும் நிலை இருக்கும். எதிர்­பா­ரா­த­வ­கையில் திடீர் செல­வுகள், அலைச்சல் நிலைகள் என்­பன அமையும். திரு­மணம் போன்ற சுப­கா­ரிய நிலை­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு இழு­பறி, தாமத நிலைகள் இருக்கும். கடன் பிரச்­சி­னைகள் மந்­த­மா­கவே இருக்கும். கொடுக்கல் வாங்­கல்­களில் மிகவும் நிதானம் தேவை. வழக்கு விவ­கா­ரங்­களில் இழு­பறி தாமத நிலை­களைக் கொடுக்கும். மாண­வர்­களின் கல்வி நிலையில் ஊக்­க­முடன் செயற்­பட வேண்டும். பரீட்­சை­களில் நிதானம் தேவை. எல்லா விட­யங்­க­ளிலும் மிகவும் நிதா­ன­மாக சிந்­தித்து உங்­களின் அனைத்து விட­யங்­க­ளிலும் நன்­மை­களைப் பெற்றுக் கொள்ளும் ஆற்­றலும் உங்கள் நலனில் பின்பே மற்­றவர் விட­யங்கள் பற்றி சிந்­திக்கும் குண இயல்பும் கொண்ட நீங்கள் இந்த குருப்­பெ­யர்ச்­சியில் மத்­திம பலன் பெறலாம்.

தனு­சு­

(மூலம், பூராடம், உத்­த­ராடம்

1ஆம் பாதம்)

தனு­சு­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு பாக்­கி­யஸ்­தா­ன­மா­கிய ஒன்­பதாம் இடம் குரு­ப­கவான் சஞ்­சாரம் அமை­கின்­றது. மிகவும் சிறப்­பான அனு­கூ­ல­மான நற்­ப­லா­ப­லன்கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலையில் நல்ல முன்­னேற்றம் ஏற்­படும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மான நிலையில் அமையும். குடும்­பத்தில் நல்ல மகிழ்வும் உற­வி­னர்­களின் மூல­மாக அனு­கூ­ல­மான பலன்­களும் ஏற்­ப­டு­கின்ற நிலை இருக்கும். எதையும் திட்டமிட்டு சிறப்­பாக செய்­யக்­கூடிய நிலை இருக்கும். புதிய முயற்­சி­களில் நல்ல வெற்­றிகள் அமையும். தொழில்­சார்ந்த பதவி உயர்­வு­களும் நல்ல இட­மாற்­றங்­களும் அமையும் நிலை இருக்கும். வெளி­நாட்டு பிர­யாண வாய்ப்­பு­களும் அமையும். திரு­மணம், சந்­தா­னப்­பேறு, போன்ற பலா­ப­லன்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் நிறை­வு­டை­ய­தாக கிடைக்கும். வழக்கு விவ­கா­ரங்­களில் சுமு­க­மான பலன் அமையும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் அனு­கூ­ல­மான பலன் அமை­யும். நீண்ட நாட் திட்­டங்­களை மிகவும் இல­கு­வாகச் செய்­யக்­கூ­டிய நிலைகள் அமையும். பொது­வா­கவே இந்தக் குருப் பெயர்ச்­சியின் மூலம் நீங்கள் நல்ல நிறை­வான பலா­பலன் பெறலாம். தன்­னம்­பிக்­கையும் விடா முயற்­சியும் உழைப்பும் கொண்­ட­வர்கள் நீங்கள். மற்­ற­வர்­களின் அறி­வு­ரை­களை பெரி­தாக ஏற்றுக் கொள்ள மாட்­டீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவே எல்லா விட­யத்­திலும் முதன்மை பெறும் நிலை­ இ­ருக்கும். எது­வா­யினும் வெற்றி உண்டு.

மக­ரம்

(உத்­த­ராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம்.

திரு­வோணம், அவிட்டம் 1ஆம் 2ஆம்

பாதம்)

மக­ர­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் அட்­ட­மஸ்­தா­ன­மா­கிய 8ஆம் இடம் அமை­கின்றார். எனவே சற்று சுமா­ரான மத்­தி­ம­மான பலன்­களே அமை­கின்ற நிலை இருக்கும். எடுக்கும் முயற்­சி­களில் நிதானம் தேவை. தொழில் நிலை­களில் அலைச்சல், வேலைப்­பளு என்­பன அதிகம் அமைந்­தி­ருக்கும். எதிர்பாராத வகையில் பிரச்­சி­னை­களை எதிர் கொள்ள வேண்­டிய நிலை இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மான நிலை­யி­லேயே அமையும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும். கடன் பிரச்­சி­னை­களில் சிக்கல் நிலை அமையும். எதிர்­பா­ராத வகை­யிலே குடும்­பத்தில் குழப்ப நிலைகள் அமையும். உடல் நிலையில் திடீர் சுக­யீ­னங்­களும் மருத்­துவ செல­வு­களும் அமையும். வழக்கு விவ­கா­ரங்­களை சந்­திக்க வேண்­டிய சூழல் ஏற்­படும். புதிய முயற்­சி­களில் பொறுமை நிதா­ன­த்துடன் செயற்­பட வேண்டும். தடை இழு­பறி தாமத நிலைகள் எடுக்கும் முயற்­சி­க­ளிலே தொடரும் நிலை இருக்கும். எந்த விட­ய­மா­கினும் சற்று சிந்­தித்தே செயற்­ப­டுத்த வேண்டும். மாண­வர்­க­ளுக்கு கல்வி நிலையில் மந்­த­மான பலன் இருக்கும். பரீட்­சை­க­ளிலே மிகவும் பொறுமை நிதா­ன­முடன் செயற்­ப­ட­வேண்டும். குரு வழி­பாடு மிகவும் நன்மை தரும். பொது­வா­கவே எதையும் பெரு­மை­யாக பேசு­கின்ற சுபாவம் கொண்­ட­வர்கள் நீங்கள். உங்­க­ளு­டைய செயற்­பா­டுகள் மூல­மாக நீங்­களே பிரச்­சி­னை­களை வாங்கிக் கொள்­வீர்கள். யாரா­கினும் முகத்­துக்கு நேரே நீங்கள் கூறும் விட­யங்கள் பல­வித பகை­மையை உரு­வாக்கும். எனவே இந்தக் குருப் பெயர்ச்­சியில் நிதா­ன­மாக செயற்­ப­டவும்.

கும்­ப­ம்

(அவிட்டம் 3ஆம் 4ஆம் பாதம், சதயம்,

பூரட்­டாதி 1ஆம் 2ஆம் 3ஆம் பாதம்)

கும்­ப­ராசி அன்­பர்­களே!

உங்­களின் ராசி நிலைக்கு குரு பகவான் களத்­தி­ரஸ்­தானம் எனப்­ப­டு­கின்ற ஏழாம் இடம் அமை­கின்றார். ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் அமையும் நிலை இருக்கும். எதையும் சமா­ளிக்கக் கூடிய நிலை குடும்­பத்­தில் ஏற்­படும். மனைவி வழி உற­வி­னர்கள், கணவன் வழி உற­வி­னர்கள் என இரு­வழி நிலை­யிலும் அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும் நிலை இருக்கும். திரு­மணம் சந்­தா­ன­வி­ருத்தி, போன்ற பலா­ப­லன்­களை எதிர் கொள்­கின்­ற­வர்­கட்கு அப்­பலன் நிறை­வு­டை­ய­தாக கிடைக்கும் நிலைகள் அமையும். மன நிலையில் மகிழ்வும் உத்­வே­கமும் ஏற்­படும். தொழில் நிலை­களில் சிறு சிறு சிர­மங்கள் இடை­யி­டையே ஏற்­பட்டு மறையும். சற்று பொறுமை கொண்டு செயற்­பட வேண்டும். எதிர்­பா­ரா­த­வ­கையில் திடீர் செல­வுகள் அமையும். அவை நல்ல சுப­கா­ரிய செல­வு­களாய் இருக்கும். உற­வி­னர்­க­ளிடம் இருந்து வர­வேண்­டிய வர­வுகள் உரிய நேரத்­தில் கிடைக்கும். வெளி­நாட்டுப் பிர­யா­ணங்கள் எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் ஓர­ள­விற்கு அனு­கூல நிலை தரக்­கூ­டி­யதாக இருக்கும். மாண­வர்­களின் கல்வி நிலையில் சற்றுக் கவனம் வேண்டும். இருப்­பினும் கல்வி நிலையில் பாதிப்­பான பலன் அமைய இட­மில்லை. பொது­வா­கவே அதிர்ஷ்டம் உங்­களைத் தேடி வர­வ­ழைக்கும் சூட்சுமம் தெரிந்தவர்கள் நீங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து உங்களின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்து கொள்ளும் திறன் உங்களின் பலம். இந்தக் குரு பெயர்ச்சியானது ஓரளவிற்கு உங்களுக்கு அனுகூலம் கொடுக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4ஆம் பாதம்,

உத்தரட்டாதி, ரேவதி)

மீனராசி அன்பர்களே!

உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமை­கின்றார். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு மந்தமான நிலை அமையும். தொழில் நிலையில் அலைச்சலும் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்படும் .குடும்பத்தில் சற்று மந்தமான மத்திம பலனே அமையும் நிலை இருக்கும். உங்களுக்கு எதிரிகளின் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் அமையும். எனவே நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும். தொழில் நிலையில் நஷ்ட நிலைகளும் விரயங்களும் ஏற்படலாம். அத்தோடு உடல் நிலையிலும் திடீர் சுகயீனங்களும் சத்திர சிகிச்சைகளும் அமையலாம். புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதை அறவே தவிர்த்துக் கொள்ளவும். திருமணம் போன்ற சுபகாரியம், வெளிநாட்டுப் பிரயாணம் போன்ற பலாபலன்களை எதிர்பார்க்கின்ற­வர்களுக்கு அப்பலன் சற்று மத்திமமானதாகவே அமையும் நிலை இருக்கும். அத்தோடு தொழில் நிலைகளில் சக உத்தியோகத்தர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும் நிலைகள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி மேற்கொள்ள வேண்டும். பரீட்சைப் பெறுபேறுகளில் சற்று மந்த நிலையான பலன் ஏற்படலாம். குரு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. எதையும். மிடுக்கான தொனியுடன் செயற்படுத்துகின்ற குணமும் எதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். என்கின்ற எண்ணமும் கொண்ட நீங்கள் எல்லோரும் உங்களை பணிய வேண்டும் என நினைப்பார்கள். எனவே மிகவும் பொறுமையாக செயற்பட்டு நன்மைபெறுக.

 ஜோதிட கலா­நிதி S.R.T. சர்மா வெள்­ள­வத்தை
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல