1991ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் 2001ஆம் ஆண்டில் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் கிரேக்கம் இணைந்து கொண்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகளும் நாணயக் கட்டமைப்பில் 19 நாடுகளும் இருக்கின்றன. இரண்டிலும் இணையும்போது கிரேக்கம் தனது பொருளாதாரம் தொடர்பான தகவல்களைத் திரித்துக் கூறியிருந்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
யூரோ நாணயக் கட்டமைப்பில் இருப்பதால் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமான மாற்றங்களால் ஏற்படும் பாதகங்கள் குறைவடைகின்றன. நாணயக் கட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு போன்றவை இலகுவாக நடக்கும். நாணயக் கட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு தனது உள்நாட்டுப் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப நாணயத்தின் பெறுமதியை மாற்றியமைக்க முடியாது.
2007 ஆம் ஆண்டிலிருந்து கிரேக்கம் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் மூன்று
பொருளாதார வீழ்ச்சிகளை அது சந்தித்துள்ளதுடன், அதன் கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 180 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கிரேக்கத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக் கேற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும், யூரோ வலய வட்டி வீதமும் யூரோ நாணயத்தைத் தமது நாணயமாகக் கொண்ட கிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்துவரவில்லை. இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம். தற்போது கிரேக்கத்தில் வேலையில்லாப் பிரச்சினை 26 விழுக்காடாகவும் இதில் 25 வயதிற்குக் குறைந்தோர் மத்தியில் இந்த விழுக்காடு 50 ஆகவும் இருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளுக்கு ஏற்ப அயர்லாந்தும் போர்த்துக்கலும் தமது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக சீரமைத்துள்ளன. சைப்பிரஸ் தேசமும் இவ்வாறே தேறிக் கொண்டிக்கின்றது. சிக்கன நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்த ஸ்பெயின் இப்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகும்.
கடன்பட்டு கடன் நிலுவை கொடுக்க முயன்ற கிரேக்கம்
தான் பட்ட கடன்களுக்கு உரிய தவணைமுறைக் கொடுப்பனவுகளைக் கிரேக்கம் கொடுக்க முடியாமல் போகும் போதெல்லாம் அதற்கு கடன் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மைய வங்கி, ப.நா.நிதியம் ஆகியவை கிரேக்க அரசு சிக்கன நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தித்தன. இதனால் சமூகநலக் கொடுப்பனவுகள் பாதிக்கப்பட்டன. அரசின் செலவீனங்கள் குறைந்ததால் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் அரச சிக்கன நடவடிக்கைக்கு எதிரான அலை கிரேக்கத்தில் எழுந்தது.
ஜேர்மனிக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்
நான்கு ஆண்டுகள் அரச சிக்கன நடவடிக்கைகளால் சலிப்படைந்த கிரேக்க மக்கள், அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான தீவிர இடதுசாரிக் கட்சியான சிரிஸாவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறை என்றபடியால் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியான சுதந்திர கிரேக்கக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சிரிஸா ஆட்சியைக் அமைத்துக் கொண்டது. இது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியண்ணன் ஜேர்மனியுடன் கடன் பிரச்சினையில் மோதிக் கொண்டிருக்கும் கிரேக்கத்தின் தலைமை
அமைச்சர் பதவியை ஏற்றவுடன் அலெக்ஸிஸ் சிப்ரஸ் முதல் செய்த வேலை, இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியர்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியமையே.
அத்துடன் அவர் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தமை ஐரோப்பாவின் பல நாடுகளின் பாதுகாப்புத் துறையினரை அதிர வைத்துள்ளது. கிரேக்கத்தில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான சிரிஸா கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப சிக்கன நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகியதுடன் அக் கட்சிகளும் புதிய உத்வேகம் பெற்றுள்ளன.
பன்னாட்டு நாணய நிதியம்
அரசுகள் சமூகக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதும் அதற்கான பணத்தை வரி அதிகரிப்பின் மூலம் அறவிடுவதும் இடதுசாரிகள் செய்பவை. இதன் மூலம் வசதி குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தலாம் என்பது அவர்களின் கொள்கை. ஆனால், இது பொருளாதாரத்திற்கு ஒத்துவராது என்பது முதலாளித்துவப் பொருளியலாளர்களின் நம்பிக்கை. இப்படிப்பட்ட இடதுசாரிகள் எந்த நாட்டிலாவது ஆட்சியில் இருப்பதைப் பன்னாட்டு நாணய நிதியம் விரும்புவதில்லை. கிரேக்கம் அதிகம் கடன் பட்டது, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மைய வங்கி பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிடமிருந்தாகும்.
கிரேக்கத்தின் விடாப்பிடி
ஏற்கனவே சோமாலியா, சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகள் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனை மீளக் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் ஒரு வளர்ச்சியடைந்த நாடு, ஓர் ஐரோப்பிய நாடு ப.நா.நிதியத்தின் கடன் நிலுவையைக் கொடுக்க முடியாமல் போவது இதுதான் முதற்தடவை. ஆனால் கடன் நிலுவை கொடுக்கத் தவறும் நாடுகளுக்கு முப்பது நாள் கால அவகாசம் வழங்கப்படுவதுண்டு.
ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவிற்கு முன்னர் கிரேக்கம் தான் மீளச் செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகையான 1.6 பில்லியன் யூரோவைச் செலுத்துவதற்குப் புதிய கடனாக 32பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தனக்குக் கடன் கொடுத்த ப.நா. நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மைய வங்கி ஆகிய மூன்று தரப்பினரிடமிருந்தும் கோரியது. அதற்கு அந்த மூன்று தரப்பினரும் கிரேக்கம் அரச ஊழியர்களினது ஊதியத்தையும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளையும் குறைக்கும் படியும் விற்பனை வரிகளை அதிகரிக்கும் படியும் குறைந்த ஓய்வூதியம் பெற்பவர்களுக்கான சமூகநல கொடுப்பனவுகளை நிறுத்தும் படியும் நிபந்தனைகள் விதித்தன.
அரச ஊழியத்தையும் ஓய்வூதியத்தையும் குறைக்க கிரேக்க அரசு மறுத்தது. மருந்துகளுக்கான விற்பனை வரி அதிகரிப்பிற்கும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் காத்திரமான கடன் நிவாரணத்தையும் கிரேக்கம் கோரியிருந்தது. கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினதும், ஐரோப்பிய மைய வங்கியினதும் பன்னாட்டு நாணய நிதியத்தினதும் நிபந்தனைகள் தொடர்பாக கிரேக்க மக்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இது அந்த மூன்று தரப்பினரையும் ஆத்திரப்படுத்தியதுடன் உலக நாடுகளிலும் உலக நிதிச் சந்தையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் புதிய கடன்கள் கிரேக்கத்திற்கு வழங்க அந்த மூன்று தரப்பினரும் மறுத்தனர். இதனால் ஜூன் 30ஆ-ம் திகதி கொடுக்க வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவை கிரேக்க அரசால் செய்ய முடியாமல் போனது.
இதைக் கடன் கொடுக்கத் தவறியமை என ப.நா. நிதியம் கருதாமல் நிலுவைப் பணத்தைக் கொடுக்கப் பிந்தியது என அறிவித்தது. முதலில் கிரேக்கத்திற்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப் பட்டிருந்தது.
மிரட்டப் போய் வாங்கிக் கட்டிய கிரேக்கம்
நாடுகளின் கடன்படு திறனைத் தரப்படுத்தும் முகவரகங்களில் ஒன்றான ஃபிட்ச், கிரேக்கத்தின் தரத்தை "சிசிசி" இலிருந்து "சிசி"இக்குக் குறைத்துள்ளது. நாடுகளின் கடன்படு திறன் குறையும் போது அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும். ஆனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருப்பதால் யூரோ நாணயத்தின் மீது தாக்கம் ஏற்பட்டது. கிரேக்கத்தின் அரச கடன் முறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கிரேக்கம் தனது கடன்களைச் செலுத்த முடியாமல் போனால் அது யூரோ நாணயக் கட்டமைப்பிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் விலகும் நிலை ஏற்படலாம். அப்படி விலகுவதால் கிரேக்கத்திற்குக் கடன் கொடுத்த நாடுகளுக்கு இழப்பீடு ஏற்படும்.
ஜேர்மனிக்கு 61 முதல் 84 பில்லியன் யூரோக்கள் இழப்பீடு ஏற்படலாம். இதை மனதில் கொண்ட கிரேக்கத் தலைமை அமைச்சர் அலெக்சிஸ் சிப்ரஸ் எப்படியாவது ஜேர்மனி இறுதியில் இறங்கி வந்து தனது வேண்டுகோள்களுக்குச் சம்மதிக்கும் என நம்பினார். தனது இறுதி மிரட்டலாக அவர் அறிவித்த கருத்துக் கணிப்பை எடுத்து விட்டார். அது அவருக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு ஆத்திரத்தை கூட்டியது.
ஜூன் 30 ஆம் திகதி கிரேக்கம் ப.நா. நிதியத்திற்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க முடியாமல் போகும் என்றவுடன் பல மாற்றங்கள் கிரேக்கத்தில் நிகழ்ந்தன. வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தமது பணத்தை மீளப்பெறப் பல முயற்சிகள் செய்தனர். 29ஆம் திகதியே வங்கிகள் இழுத்து மூடப்பட்டன. அரச நிதிப் பற்றாக்குறையினால் முன்னாள் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொ டுப்பனவு அரைவாசியாக்கப்பட்டது.
நிலைமை மோசமாகப் போய்க் கொண் டிருப்பதை அவதானித்த கிரேக்கத் தலைமை அமைச்சர் அலெக்சிஸ் சிப்ரஸ் மீண்டும் ஜுலை முதலாம் திகதி ஒரு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் கடன் கொடுத்தோர் ஜூலை 5ஆம் திகதி அலெக்சிஸ் சிப்ரஸ் செய்யவுள்ள கருத்துக் கணிப்பின் பின்னர் பேச்சு வார்த்தை செய்யலாம் என மறுத்து விட்டன.
கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப் பிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் விலகினால் என்ன பாதிப்புக்கள் இந்த இர ண்டுக்கும் நடக்கும் என்பதைச் சரியாக எதிர்வு கூற முடியாமல் இருக்கின்றது.
கிரேக்கம் யூரோவில் இருந்து விலகி தனது பழைய நாணயமான டிரச்மாஸை மீண்டும் அறிமுகம் செய்து, அதை ஒரு மலிவான நாணயமாக்கினால் அதன் ஏற்று மதி அதிகரித்து பொருளாதாரம் வளர வாய் ப்புண்டு.
வேல் தர்மா
யூரோ நாணயக் கட்டமைப்பில் இருப்பதால் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமான மாற்றங்களால் ஏற்படும் பாதகங்கள் குறைவடைகின்றன. நாணயக் கட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு போன்றவை இலகுவாக நடக்கும். நாணயக் கட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு தனது உள்நாட்டுப் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப நாணயத்தின் பெறுமதியை மாற்றியமைக்க முடியாது.
2007 ஆம் ஆண்டிலிருந்து கிரேக்கம் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் மூன்று
பொருளாதார வீழ்ச்சிகளை அது சந்தித்துள்ளதுடன், அதன் கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 180 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கிரேக்கத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக் கேற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும், யூரோ வலய வட்டி வீதமும் யூரோ நாணயத்தைத் தமது நாணயமாகக் கொண்ட கிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்துவரவில்லை. இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம். தற்போது கிரேக்கத்தில் வேலையில்லாப் பிரச்சினை 26 விழுக்காடாகவும் இதில் 25 வயதிற்குக் குறைந்தோர் மத்தியில் இந்த விழுக்காடு 50 ஆகவும் இருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளுக்கு ஏற்ப அயர்லாந்தும் போர்த்துக்கலும் தமது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக சீரமைத்துள்ளன. சைப்பிரஸ் தேசமும் இவ்வாறே தேறிக் கொண்டிக்கின்றது. சிக்கன நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்த ஸ்பெயின் இப்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகும்.
கடன்பட்டு கடன் நிலுவை கொடுக்க முயன்ற கிரேக்கம்
தான் பட்ட கடன்களுக்கு உரிய தவணைமுறைக் கொடுப்பனவுகளைக் கிரேக்கம் கொடுக்க முடியாமல் போகும் போதெல்லாம் அதற்கு கடன் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மைய வங்கி, ப.நா.நிதியம் ஆகியவை கிரேக்க அரசு சிக்கன நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தித்தன. இதனால் சமூகநலக் கொடுப்பனவுகள் பாதிக்கப்பட்டன. அரசின் செலவீனங்கள் குறைந்ததால் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் அரச சிக்கன நடவடிக்கைக்கு எதிரான அலை கிரேக்கத்தில் எழுந்தது.
ஜேர்மனிக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்
நான்கு ஆண்டுகள் அரச சிக்கன நடவடிக்கைகளால் சலிப்படைந்த கிரேக்க மக்கள், அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான தீவிர இடதுசாரிக் கட்சியான சிரிஸாவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறை என்றபடியால் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியான சுதந்திர கிரேக்கக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சிரிஸா ஆட்சியைக் அமைத்துக் கொண்டது. இது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியண்ணன் ஜேர்மனியுடன் கடன் பிரச்சினையில் மோதிக் கொண்டிருக்கும் கிரேக்கத்தின் தலைமை
அமைச்சர் பதவியை ஏற்றவுடன் அலெக்ஸிஸ் சிப்ரஸ் முதல் செய்த வேலை, இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியர்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியமையே.
அத்துடன் அவர் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தமை ஐரோப்பாவின் பல நாடுகளின் பாதுகாப்புத் துறையினரை அதிர வைத்துள்ளது. கிரேக்கத்தில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான சிரிஸா கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப சிக்கன நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகியதுடன் அக் கட்சிகளும் புதிய உத்வேகம் பெற்றுள்ளன.
பன்னாட்டு நாணய நிதியம்
அரசுகள் சமூகக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதும் அதற்கான பணத்தை வரி அதிகரிப்பின் மூலம் அறவிடுவதும் இடதுசாரிகள் செய்பவை. இதன் மூலம் வசதி குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தலாம் என்பது அவர்களின் கொள்கை. ஆனால், இது பொருளாதாரத்திற்கு ஒத்துவராது என்பது முதலாளித்துவப் பொருளியலாளர்களின் நம்பிக்கை. இப்படிப்பட்ட இடதுசாரிகள் எந்த நாட்டிலாவது ஆட்சியில் இருப்பதைப் பன்னாட்டு நாணய நிதியம் விரும்புவதில்லை. கிரேக்கம் அதிகம் கடன் பட்டது, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மைய வங்கி பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிடமிருந்தாகும்.
கிரேக்கத்தின் விடாப்பிடி
ஏற்கனவே சோமாலியா, சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகள் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனை மீளக் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் ஒரு வளர்ச்சியடைந்த நாடு, ஓர் ஐரோப்பிய நாடு ப.நா.நிதியத்தின் கடன் நிலுவையைக் கொடுக்க முடியாமல் போவது இதுதான் முதற்தடவை. ஆனால் கடன் நிலுவை கொடுக்கத் தவறும் நாடுகளுக்கு முப்பது நாள் கால அவகாசம் வழங்கப்படுவதுண்டு.
ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவிற்கு முன்னர் கிரேக்கம் தான் மீளச் செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகையான 1.6 பில்லியன் யூரோவைச் செலுத்துவதற்குப் புதிய கடனாக 32பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தனக்குக் கடன் கொடுத்த ப.நா. நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மைய வங்கி ஆகிய மூன்று தரப்பினரிடமிருந்தும் கோரியது. அதற்கு அந்த மூன்று தரப்பினரும் கிரேக்கம் அரச ஊழியர்களினது ஊதியத்தையும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளையும் குறைக்கும் படியும் விற்பனை வரிகளை அதிகரிக்கும் படியும் குறைந்த ஓய்வூதியம் பெற்பவர்களுக்கான சமூகநல கொடுப்பனவுகளை நிறுத்தும் படியும் நிபந்தனைகள் விதித்தன.
அரச ஊழியத்தையும் ஓய்வூதியத்தையும் குறைக்க கிரேக்க அரசு மறுத்தது. மருந்துகளுக்கான விற்பனை வரி அதிகரிப்பிற்கும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் காத்திரமான கடன் நிவாரணத்தையும் கிரேக்கம் கோரியிருந்தது. கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினதும், ஐரோப்பிய மைய வங்கியினதும் பன்னாட்டு நாணய நிதியத்தினதும் நிபந்தனைகள் தொடர்பாக கிரேக்க மக்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இது அந்த மூன்று தரப்பினரையும் ஆத்திரப்படுத்தியதுடன் உலக நாடுகளிலும் உலக நிதிச் சந்தையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் புதிய கடன்கள் கிரேக்கத்திற்கு வழங்க அந்த மூன்று தரப்பினரும் மறுத்தனர். இதனால் ஜூன் 30ஆ-ம் திகதி கொடுக்க வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவை கிரேக்க அரசால் செய்ய முடியாமல் போனது.
இதைக் கடன் கொடுக்கத் தவறியமை என ப.நா. நிதியம் கருதாமல் நிலுவைப் பணத்தைக் கொடுக்கப் பிந்தியது என அறிவித்தது. முதலில் கிரேக்கத்திற்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப் பட்டிருந்தது.
மிரட்டப் போய் வாங்கிக் கட்டிய கிரேக்கம்
நாடுகளின் கடன்படு திறனைத் தரப்படுத்தும் முகவரகங்களில் ஒன்றான ஃபிட்ச், கிரேக்கத்தின் தரத்தை "சிசிசி" இலிருந்து "சிசி"இக்குக் குறைத்துள்ளது. நாடுகளின் கடன்படு திறன் குறையும் போது அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும். ஆனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருப்பதால் யூரோ நாணயத்தின் மீது தாக்கம் ஏற்பட்டது. கிரேக்கத்தின் அரச கடன் முறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கிரேக்கம் தனது கடன்களைச் செலுத்த முடியாமல் போனால் அது யூரோ நாணயக் கட்டமைப்பிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் விலகும் நிலை ஏற்படலாம். அப்படி விலகுவதால் கிரேக்கத்திற்குக் கடன் கொடுத்த நாடுகளுக்கு இழப்பீடு ஏற்படும்.
ஜேர்மனிக்கு 61 முதல் 84 பில்லியன் யூரோக்கள் இழப்பீடு ஏற்படலாம். இதை மனதில் கொண்ட கிரேக்கத் தலைமை அமைச்சர் அலெக்சிஸ் சிப்ரஸ் எப்படியாவது ஜேர்மனி இறுதியில் இறங்கி வந்து தனது வேண்டுகோள்களுக்குச் சம்மதிக்கும் என நம்பினார். தனது இறுதி மிரட்டலாக அவர் அறிவித்த கருத்துக் கணிப்பை எடுத்து விட்டார். அது அவருக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு ஆத்திரத்தை கூட்டியது.
ஜூன் 30 ஆம் திகதி கிரேக்கம் ப.நா. நிதியத்திற்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க முடியாமல் போகும் என்றவுடன் பல மாற்றங்கள் கிரேக்கத்தில் நிகழ்ந்தன. வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தமது பணத்தை மீளப்பெறப் பல முயற்சிகள் செய்தனர். 29ஆம் திகதியே வங்கிகள் இழுத்து மூடப்பட்டன. அரச நிதிப் பற்றாக்குறையினால் முன்னாள் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொ டுப்பனவு அரைவாசியாக்கப்பட்டது.
நிலைமை மோசமாகப் போய்க் கொண் டிருப்பதை அவதானித்த கிரேக்கத் தலைமை அமைச்சர் அலெக்சிஸ் சிப்ரஸ் மீண்டும் ஜுலை முதலாம் திகதி ஒரு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் கடன் கொடுத்தோர் ஜூலை 5ஆம் திகதி அலெக்சிஸ் சிப்ரஸ் செய்யவுள்ள கருத்துக் கணிப்பின் பின்னர் பேச்சு வார்த்தை செய்யலாம் என மறுத்து விட்டன.
கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப் பிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் விலகினால் என்ன பாதிப்புக்கள் இந்த இர ண்டுக்கும் நடக்கும் என்பதைச் சரியாக எதிர்வு கூற முடியாமல் இருக்கின்றது.
கிரேக்கம் யூரோவில் இருந்து விலகி தனது பழைய நாணயமான டிரச்மாஸை மீண்டும் அறிமுகம் செய்து, அதை ஒரு மலிவான நாணயமாக்கினால் அதன் ஏற்று மதி அதிகரித்து பொருளாதாரம் வளர வாய் ப்புண்டு.
வேல் தர்மா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக