அணிந்து கொள்வதால்தானே
இறப்பர் வளையல்களுக்கும்
மதிப்பு உயர்கிறது
அழகிய
தோடுகளை விடவும்
கறிவேப்பிலைக் குச்சி
காதுகளுக்கு அழகென
உனை பார்த்தபின்பே
உணர்ந்து கொண்டேன்
நீ பேசுவதால்தானே
அரைகுறைத் தமிழ்கூட
அகராதித் தமிழைவிட
அழகு பெறுகிறது
நீர்க்குடம் சுமப்பது
சுமையல்ல
அழகை அதிகரிக்கும்
அற்புத தருணம் அதுவென
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொருவரும்
ஒத்துக்கொள்வர்
எந்த மேக்கப்பும்
இட்டுக் கொள்ளாமலே
என்னமாய் ஜொலிக்கிறது
உந்தன் கறுப்பு வதனம்
கோடி பொருத்தமில்லா
மாறுபாடான பாதணிகளை
மங்கை உந்தன் பாதம்
மாட்டியிருப்பதை பார்த்தேன்
அடடா...........
வேறுவேறு காலணிகளும்
வித்தியாசமான அழகுதான்
உழைப்பின் எதிரியான
அப்பாவுக்குமாய்............
உடலில் நோயுற்ற
அம்மாவுக்குமாய்........
பத்து வயதையும்
தொட்டுவிடாத
மூன்று தங்கைக்குமாய்
தோளிலே கூடையேற்றி
துவளாமல் மலையேறி
கொழுந்து பறித்து
குடும்பம் காக்கும்
இப்போது வெளிச்சத்தில்
ஆனால்
உன் வாழ்வு மட்டும்.........
குடும்ப மரத்தின்
கிளைகளுக்காகவே
பணம் புரிவதை
மறுதலித்து நிற்கும்
மலைநாட்டு மங்கையே....
நித்தம் நீங்கள்
எரிந்து கொண்டிருப்பதால்
தேசமெனும் வீடு
உயர்ந்து கொள்கிறது
உங்கள் லயன்கள் மட்டும்
அப்படியே..............


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக