செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

காதல் என்றால்...!

உன்னைப் பற்றிய

கனவுகளால்

என் வாழ்க்கை

அழகாகிறது!

*

கனவுகள்

நிஜமாகும்

நிமிடங்களில்

நானே அழகாகிறேன்!

*

முன்பெல்லாம்

கவிதை எழுத

கற்பனை செய்வேன்

இப்போது

நீயே

என் கவிதையாகிறாய்!

*

சிலவேளை

மனதைத்

தைக்கிறாய்!

சிலவேளை

மனதால் தைக்கிறாய்!


எவருக்குமே தெரியாமல்

ஏற்படும் அந்தக் கணம்

இருவருக்கும் புரியாது!

*

நீண்டநாள் நட்பும்

நிமிடத்தில் காதலாகிறதே!

ஏனென்று

எவரென்று

எதுவும் அறியாது

உள்ளம் பறிபோகிறது!

சொன்னால் புரியாது

சுகப்பட்டால் முடியாது

*

தன்னை அறியாமல்

தடுமாறும்

ஜீவனையும்

கண்ணால் காணாமல்

காதல் வயப்படுத்தும்

என்ன காரணமோ

எதுவுமே இல்லாமல்

ஒன்றித்தான் போகிறது

உள்ளம்!

நீயின்றி நானில்லை

நானின்றி நீயில்லை

ஊண் உறக்கம்

ஒன்றும் அறியாமல்

விழித்திருக்கும் பொழுதுகளில்

நினைவெல்லாம்

விருந்தாகும்!

*

நடந்தால்

அமர்ந்தால்

என்னைவிட

எவர் உளார்

என்ற கர்வம்

எனக்கே பிறக்கிறது

தானாய் உதிரும்

புன்னகை!

உதடுகள் உரசும்

ஆயிரம் வார்த்தைகள்

உணர்வுகள் அறியும்

அர்த்தங்கள்!

*

நீ

அருகில் இருந்தால்

உயிரும் வேண்டாம்

அன்பாய் கிடந்து

ஆயுள் வளர்ப்போம்!

*

எந்தன் நிலைமை

எவருக்கும் தெரியும்

காதல் என்றால்

யுகமாய் வாழ்வேன்!

என்னை நீயும்

உன்னை நானும்

அருகில் பார்த்து

அர்த்தம் தேடுவோம்

வாழ்க்கைக்கு!

*

இப்போதுதான்

நான்

உண்மையாகச் சிரிக்கிறேன்

உண்மையாக

அழுகிறேன்!

அதையும் கற்றுத்தந்தது

நீதான்!

*

உடல் உள்ளம்

முழுவதுமாய்

நீதான்

நிறைந்திருக்கிறாய்!

அருகில் இருந்து

அழைப்பவர் யாரோ

உன்னால் நானும்

நானாய் இல்லை

என்னைத் தேடி

அலைகிறது மனது

எழுந்து நடந்தால்

கொஞ்சு முகத்துடன்

புன்னகை சிந்துகிறாய்

பண்பாய் அணைத்து

பதமாய் பயணிக்க

வழிகாட்டுகிறாய்!

*

ஓ....

காதல் என்றால்

நீதான் உயிரே!

உலகம் வேண்டாம்
நீயே போதும்!

இதய நிலா சுகன்ஜி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல