திங்கள், 5 ஜூலை, 2010

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்: 91 வயது பெண்ணின் காலை வெட்டினார்கள்

ஆஸ்திரியா நாட்டின் மேற்கு மாகாணமான திரோல் நகரில் செயின்ட் ஜோகன் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு காலில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற 91 வயது பெண் வந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த ஒரு காலை மட்டும் ஆபரேஷன் மூலம் வெட்டி அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு அவர் சம்மதித்தார்.

இதைதொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 16-ந்தேதி ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது நோய் பாதித்த காலுக்கு பதிலாக நல்ல நிலையில் இருந்த காலை வெட்டி டாக்டர்கள் அகற்றினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆபரேசன் நடத்தப்பட்டது.

அப்போது, நோய் பாதித்த கால் அகற்றப்பட்டது. டாக்டர்களின் தவறான ஆபரேசனின் மூலம் தற்போது அப்பெண் 2 கால்களையும் இழந்து தவிக்கிறார்.

நடந்த சம்பவத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மருத்துவத்தில் ஏற்பட்ட குளறுபடியால் இது போன்ற தவறு நடந்துவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த தவறுக்கு காரணமான டாக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இது போன்ற தவறுகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. கடந்த 2005-ம் ஆண்டு டாக்டர்களால் தவறானமருந்து கொடுக்கப்பட்ட ஒரு நபர் இறந்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல