அமெரிக்காவை சேர்ந்த லின்ட்சே பிட்லர். ஒக்லஹோமாவில் உள்ள பார்லெஸ்வில்லியில் வசித்து வரும் இவருக்கு, 4 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன், மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு மேகி மே என்று பெயரிட்டுள்ளார். இருப்பினும் லின்ட்சேவுக்கு மேகியின் வரவு பிடிக்கவில்லை போலும். அதனால், யாருக்கும் தெரியாமல், வாஷிங் மெஷினில் அழுக்கு துணிகளோடு, பச்சிளம் குழந்தை மேகியையும் போட்டு, 40 நிமிடம் சலவை செய்துள்ளார். இதில் அக்குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
வாஷிங் மெஷினில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை பார்த்து, பயந்து போய் ஓடி வந்த மேகியின் அத்தை, வாஷிங் மெஷினை திறந்த பார்த்த போது தான் அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசாரும் மருத்துவ குழுவினரும் லின்ட்சே வீட்டுக்கு விரைந்து வந்தனர். வாஷிங் மெஷினில் பச்சிளம் குழந்தை கொடூரமான முறையில் சிதைந்து இருந்ததை பார்த்த, சில போலீசார் கண்ணீர் விட்டனர். உடனடியாக லின்ட்சேயை கைது செய்த போலீசார், அவர் வேண்டுமென்றே குழந்தையை கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக