ஒபாமாவின் மானசீக குருக்கள் இருவர், ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், இன்னொருவர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. மார்ட்டின் லூதர் கிங் பிறந்த பூமியிலிருந்து காந்தி பிறந்த பூமிக்கு வந்துள்ள ஒபாமா, காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு இன்று காலை சென்றபோது மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அங்கு உரையாற்றிய அவர், உலகத்தையே மாற்றியமைத்த பிதாமகன் காந்தியடிகள். அவர் போதித்த அமைதி, சகிப்புத்தன்மை, பிறர் மீது அன்பு காட்டுவது ஆகியவை மிக உயர்ந்த தத்துவங்கள். அவற்றைப் போதித்த அந்த ஆத்மாவை எப்போதும் நாங்கள் நினைவு கூருவோம் என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக