வரவு செலவுத்திட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிரசீலியா கமானோ என்ற அப்பெண் உறுப்பினர் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான கன்கெல் என்பவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அதன் பிறகு அவர் வேகமாக நாடாளுமன்ற அறையை விட்டு வெளியேறியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சூடான வாதப்பிரதிவாதங்களே இச்சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பில் கமானோ கருத்து தெரிவிக்கையில்,
"கன்கெல் நீண்டநாட்களாக என்னைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றார். எனது சுயமரியாதையை பாதிக்கும் விடயங்களை நான் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை.
இதற்காக தான் நான் அவரைத் தாக்கினேன்" எனத் தெரிவித்தார்.
இச்சம்பவமானது அங்கு பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பில் கன்கெல் ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக