வெள்ளி, 19 நவம்பர், 2010

உரும்பிராய்-மருதனார்மடம் வீதியில் மினிபஸ்-மோ.சைக்கிள் விபத்து ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம்

உரும்பிராய்-மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற மினி பஸ்-மோட் டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இப்பரிதாப சம்பவத்தில் சுன்னாகம் சபாபதி முகாமைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந் திரன் (வயது 30) என்பவரே உயிரிழந்தவராவார்.

மற்றொருவரான சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.கோபு (வயது 30) என்ப வர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உரும்பிராய்-மருதனார்மடம் வீதியில் ஒழுங்கை ஒன்றில்இருந்து வந்த மினிவானுடன் மருதனார்மடம் வீதியூடாக உரும்பிராய்ச் சந்தி நோக்கிப் பயணி த்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதன் போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து 200 மீற்றர் தூரம் இழுத் துச் சென்று மினிவானுடன் விபத்துக்குள்ளான தாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல