வியாழன், 30 டிசம்பர், 2010

முதலிரவில் மூச்சுத் திணறி புதுமணத் தம்பதி மரணம்

முதலிரவு அறையை வெப்பமூட்டுவதற்கு பயன்பட்ட எரிவாயு வெப்ப மூட்டியிலிருந்து வெளிப்பட்ட காபனீரொட்சைட்டு புகை காரணமாக மூச்சுத் திணறி புதுமணத் தம்பதியொன்று பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஜோர்தானில் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

வடமாகாணமான ஸர்கா எனும் இடத்தைச் சேர்ந்த 24 வயது மணமகனும் 16 வயது மணமகளுமே இவ்வாறு உயிழந்துள்ளனர்.
ஜோர்தானில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விலைகுறைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வெப்பமூட்டிகளை பயன்படுத்துவது வழமையாகும்.

கடந்த வருடம் எண்ணெய் மற்றும் எரி வாயு வெப்பமூட்டிகளை பயன்படுத்துவதால் இடம்பெற்ற 60 விபத்துகளில் 8 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல