இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை யின் 1267ம் மற்றும் 1373ம் பிரகடனங்களின் படி சொத்துக்களை சுவீகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரகடனங்களை அமுல்படுத்து வதில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்களுக்கு சர்வதேச நாணய நிதியம் தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை யின் 1267ம் பிரகடனத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாதிகள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை முடக்குதல்,பயணக் கட்டுப்பாடு விதித்தல்,ஆயுதக் கொடுக்கல் வாங் கல்களைத் தடை செய்தல் போன்ற நடவடிக் கைகளை மேற்கொள்ள முடியுமென இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக