வியாழன், 13 ஜனவரி, 2011

முன்னாள் காதலியின் புதிய காதலன் காதை கடித்து துண்டாக்கிய நபர்

தனது முன்னாள் காதலியின் புதிய காதலரின் காதைக் கடித்து துண்டாக்கிய நபரொரு வருக்கு இரு வருட சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

வட அயர்லாந்திலுள்ள அர்மாஹ் நகரைச் சேர்ந்த ஷான் ஓநெயில் (23 வயது) என்ற இளைஞருக்கே மேற்படி தண்டனையை விதித்து பெல்பாஸ்ட்டிலுள்ள நியூறி கிறவுண் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவ தினம் குடிபோதையில் தனது காதலியின் வீட்டிலுள்ள அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞரை தேடி வந்த ஷான் ஓநெயில், இளைஞர் மீது சினத்துடன் பாய்ந்து அவரது காதைக் கடித்து துண்டாக்கியுள்ளார். துண்டாக்கப்பட்ட காதின் பாகம் பின்னர் மருத்துவமனையில் தைத்து ஒட்டப்பட்டது.

ஞாபகமறதி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஓநெயில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நடந்த சம்பவத்தை நினைவு கூர சிரமப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல