வெள்ளி, 23 மார்ச், 2012

இலங்கை அரசின் முதலாவது சரண்

எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கை – அடங்கிப்போனது சிறிலங்கா!

அமெரிக்காவின் அழுத்தத்தை தொடர்ந்து, ஈரானிடமிருந்து கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு ஓமானிடமிருந்து கச்சாய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கை ஒன்றில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.



ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என 12 நாடுகளுக்கு அமெரிக்க எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்தது. இந்த எச்சரிக்கையை மீறினால் கடும்விளைவுகளை சந்திப்பதுடன் பொருளாதார தடைகளையும் சந்திப்பீர்கள் என இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

இலங்கை 93 வீதமான கச்சாய் எண்ணெய்யினை ஈரானிடமிருந்தே இறக்குமதி செய்கிறது.கச்சாய் மற்றும் பெற்றோலிய பொருட்களை ஓமானிடமிருந்து இறக்குமதி செய்வதற்கு கைச்சாத்திட்டுள்ளதாக இன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல