வியாழன், 15 நவம்பர், 2012

பெற்றோரின் ஆசியுடன் இராணுவத்தில் இணையும் தமிழ் யுவதிகள்!

சுய விருப்பத்தின் பேரிலும், பெற்றோரின் சம்மதத்துடன் நூற்றுக்கும் அதிகமான தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைகின்றார்கள்.

இவர்களை இராணுவத்துக்குள் உள்வாங்குகின்ற சம்பிரதாய வைபவம் கிளிநொச்சியில் பாரதிபுரத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற உள்ளது. இவ்விழாவில் இவர்களின் பெற்றோர், குடும்ப அங்கத்தினர் ஆகியோரும் கலந்து கொள்வர். இந்து சமய பாரம்பரியப்படி விழா இடம்பெறும்.

இவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படைக்குள் சேர்க்கப்படுவார்கள். ஆறாவது படையின் மகளிர் பிரிவில் கடமைக்கு விடப்படுவார்கள்.

ஆரம்ப கட்ட இராணுவ பயிற்சிகளை முடித்த பிற்பாடு முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சிவில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல