பங்களாதேஷை பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானியப் பெண் ணொருவர், அவரது செல்வ நிலையில் பொறாமை கொண்ட அவரது உறவினர்களால் கொல்லப்பட் டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிழக்கு லண்டனில் ஸ்டெப்னி எனும் இடத்தில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜையான ரெஹானா பேகம் (43 வயது), விடுமுறையைக் கழிப்பதற்காக தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் பங்களாதேஷிலுள்ள சுனம்கொன்ஜ் நகருக்குச் சென்ற போதே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
4 ஆண்களைக் கொண்ட குழுவொன்று ரெஹானா பேகத்திடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை அபகரித்துச் செல்வதற்காக அவரைத் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன்போது அந்தக் குழுவினர், ரெஹானா பேகத்தை காப்பாற்ற முயன்ற அவரது மருமகள்மார் மற்றும் மருமகன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ரெஹானா பேகத்தின் 15 வயது மருமகனது வலது கரம் மேற்படி குழுவால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரெஹானா பேகத்தின் அளவுக்கதிகமான செல்வத்தால் பொறாமை கொண்ட அவரது தூரத்து உறவுமுறையானவர்களே இந்தப் படுகொலையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிழக்கு லண்டனில் ஸ்டெப்னி எனும் இடத்தில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜையான ரெஹானா பேகம் (43 வயது), விடுமுறையைக் கழிப்பதற்காக தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் பங்களாதேஷிலுள்ள சுனம்கொன்ஜ் நகருக்குச் சென்ற போதே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
4 ஆண்களைக் கொண்ட குழுவொன்று ரெஹானா பேகத்திடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை அபகரித்துச் செல்வதற்காக அவரைத் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன்போது அந்தக் குழுவினர், ரெஹானா பேகத்தை காப்பாற்ற முயன்ற அவரது மருமகள்மார் மற்றும் மருமகன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ரெஹானா பேகத்தின் 15 வயது மருமகனது வலது கரம் மேற்படி குழுவால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரெஹானா பேகத்தின் அளவுக்கதிகமான செல்வத்தால் பொறாமை கொண்ட அவரது தூரத்து உறவுமுறையானவர்களே இந்தப் படுகொலையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக