புதன், 7 ஆகஸ்ட், 2013

பிறந்த குழந்­தையை இறந்து விட்­ட­தாக தெரி­வித்து ஆட்­க­டத்­தல்­கா­ரர்­க­ளிடம் விற்ற மருத்­துவர் (படங்கள் இணைப்பு)

புதி­தாக பிறந்த ஆண் குழந்தை இறந்து விட்­ட­தாக தாயிடம் தெரி­வித்து அதனை ஆட்­க­டத்­தலில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மருத்­துவர் ஒருவர் விற்ற சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஷாங்ஸி மாகா­ணத்தைச் சேர்ந்த மகப்­பேற்று வைத்­தி­ய­ரான ஸாங் லின் என்­ப­வரே இவ்­வாறு குழந்­தையை அப­க­ரித்து விற்­றுள்ளார்.

அவர் குழந்­தையின் உடல் நலம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­ததால் அது பிறந்­த­வுடன் இறந்து விட்­ட­தாக குழந்­தையின் தாயாரான டொங் வானிற்கு (31 வயது) தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து மருத்துவர் அந்தக் குழந்­தையை 3000 ஸ்ரேலிங் பவு­ணுக்கு குழந்­தை­களை கடத்­து­வதில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு விற்­றுள்ளார்.

பிறந்த போது ஆரோக்­கி­ய­மாக இருந்த குழந்தை சில மணி நேரத்தில் நோய் பாதிப்பால் இறந்து விட்­ட­தாக மருத்­துவர் தெரிவித்ததால் சந்­தேகம் கொண்ட குழந்­தையின் தாயான டொங் வானும் தந்­தை­யான லெயி குபோ­பெங்கும் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் மருத்­துவர் குழந்­தையை விற்­றி­ருப்­பதை கண்­ட­றிந்து அவரைக் கைது செய்­துள்­ளனர்.

குழந்தை ஷாங்ஸி மாகா­ணத்­தி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான மைல் தொலை­வி­லுள்ள ஹெனான் மாகா­ணத்தில் ஆட்­க­டத்­தல்­கா­ரர்­களால் விற்­கப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், இந்த குழந்தையின் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தற்போது குழந்தை அதனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல