புதன், 7 ஆகஸ்ட், 2013

வளர்ப்புப் பிரா­ணிகள் கடை­யி­லி­ருந்து தப்­பிய மலைப்­பாம்பின் தாக்­கு­தலில் இரு சிறு­வர்கள் பலி

செல்­லப்­பி­ரா­ணி­க­ளுக்­கான கடை­யி­லி­ருந்து தப்பிச் சென்ற மலைப்­பாம்­பொன்று வீடு ஒன்றில் ஆழ்ந்து உறங்­கிக்­கொண்­டி­ருந்த 2 வயது மற்றும் 7 வய­து­டைய சகோ­த­ரர்­களை சுற்­றி­வ­ளைத்து நெரித்துக் கொன்ற சம்­பவம் கன­டாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி சம்­ப­வத்தில் கொன்னொர் நோவா என்ற இரு சின்­னஞ்­சிறு சகோ­த­ரர்­களே பலி­யா­கி­யுள்­ளனர். நியூ புரன்ஸ்­விக்கில் கம்­பெல்டன் எனும் இடத்­தி­லுள்ள ரெப்ரைல் ஓசன் வளர்ப்புப் பிரா­ணிகள் கடைக்கு மேலாக அந்த சிறு­வர்கள் தங்­கி­யி­ருந்த வீடு அமைந்­துள்­ளது.

இந்­நி­லையில் 100 இறாத்தல் நிறை­யு­டைய மேற்­படி இராட்­சத பாம்பு கடை­யி­லி­ருந்து வெளி­யேறி குடி­யி­ருப்பின் கூரைப் பகு­தியை சென்­ற­டைந்­துள்­ளது.

அதன் பின்னர் கூரைப் ­ப­கு­தியை உடைத்துக் கொண்டு வீட்­டினுள் விழுந்த அந்த மலைப்­பாம்பு, அங்கு உறங்­கிக்­கொண்­டி­ருந்த சிறு­வர்­களைத் தாக்­கி­யுள்­ளது.

சிறு­வர்கள் வளர்ப்பு பிரா­ணிகள் கடைக்கு மேலாக இருந்த தமது குடும்ப நண்பர் ஒரு­வ­ரது வீட்டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவுப் பொழுதை கழிக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

மறுநாள் திங்­கட்­கி­ழமை காலை அறையில் மலைப்­பாம்­பொன்­றுடன் சிறு­வர்கள் இரு­வரும் இறந்த நிலையில் காணப்­பட்­டுள்­ளனர்.

இந்தச் சம்­பவம் அந்தப் பிராந்­தி­யத்தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த வகையைச் சேர்ந்த மலைப்­பாம்­புகள் மனி­தர்­களைத் தாக்­கு­வது அபூர்­வ­மா­னது என நிபு­ணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி மலைப் பாம்பைக் கைப்பற்றியுள்ள கனேடிய பொலிஸார், இந்தச் சம் பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல