ஞாயிறு, 24 நவம்பர், 2013

புலிகளுக்கு நோர்வே போல அரசுக்குத் தென்னாபிரிக்கா?

கொமன்வெல்த் மாநாடு இலங்கை அர­சாங்கம் எதிர்­பார்த்­த­ள­வுக்கு வெற்­றியைத் தர­வில்லை என்­ப­துடன், எதிர்­மா­றான விளை­வுகள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

சர்­வ­தேச சமூகம், இந்த மாநாட்டைப் பயன்­ப­டுத்தி கிட்­டத்­தட்ட இலங்­கையை ஒரு வட்­டத்­துக்குள் சிக்க வைத்­துள்­ளதா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இந்த மாநாட்டை ஒட்டி நடந்­துள்ள பல நிகழ்­வுகள் தான் இந்த சந்­தே­கத்தை கிளப்­பி­யுள்­ளன. பொது­வா­கவே, சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர அரங்கில், இரண்டு வித­மான அணு­கு ­மு­றைகள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­துண்டு. முத­லா­வது கடும்­போக்கு அணு­கு­முறை, இரண்­டா­வது மென் கடும்போக்கு அணு­கு­முறை.

ஒரு நாட்டை முற்­றாக ஓரங்­கட்டி, ஒதுக்கித் தள்ளி, அதன் ஆட்­சியை மாற்ற வல்­லமை மிக்க நாடுகள் திட்­ட­மிட்டால், அதற்­காக கடும்போக்கை கடைப்­பி­டிக்கத் தவ­று­வ­தில்லை.

பொரு­ளா­தா­ரத்­தடை, ஆயுத ஏற்­று­மதித் தடை என்று அடுக்­க­டுக்­கான தடை­களை விதித்து, உச்­சக்­கட்­ட­மாக படை­களை அனுப்பி தமது இலக்கை அடை­வது அவற்றின் வழக்கம். ஈரான், வட­கொ­ரியா, கியூபா போன்ற நாடுகள் இத்­த­கைய தடை­களை இப்­போதும் எதிர்­கொள்­கின்­றன.

ஈராக், லிபியா போன்ற நாடு­களில் இத்­த­கைய தடைகள், படைத் தலை­யீடு வரை விரிந்­தது. இத்­த­கைய கடும்­போக்கை இலங்கை மீது செலுத்தும் திட்டம் ஏதும், தற்­போது வல்­லமை மிக்க நாடு­களின் கையில் இல்லை.

ஆனால், இலங்கை மீது மென் கடும்­போக்கு அணு­கு­மு­றையை கடைப்­பி­டிக்கும் திட்­டத்தை மேற்­கு­லக நாடுகள் கொண்­டி­ருப்­பது உண்மை. ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட இரண்டு தீர்­மா­னங்­களும் இதற்குச் சாட்சி.

அது­மட்­டு­மன்றி, இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­காவும், ஏனைய அதன் சார்பு நாடு­களும் கொண்­டுள்ள அல்­லது வெளிப்­ப­டுத்தி வரும் கருத்­துகள், இந்த நிலைப்­பாட்டை வலுப்­ப­டுத்­து­கின்­றன.

அதா­வது, இலங்­கையில் ஆட்­சி­ மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் அள­வுக்கு, செயற்­பா­டு­களை நேர­டி­யாக மேற்­கொள்­ளாது போனாலும், இலங்­கையை ஒரு வட்­டத்­துக்குள் கொண்டு வரு­வ­தற்கு –- தமது பிடிக்குள் சிக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு மேற்கு நாடுகள் முனை­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை.

அதற்­கான கடி­வா­ள­மா­கவே போர்க்­குற்ற விவ­கா­ரங்­களும், பொறுப்­புக்­கூ­றலும் அமைந்­துள்­ளன. இந்த விவ­கா­ரங்­களை வைத்து, மிரட்டி இலங்கை அர­சாங்­கத்தைக் கொண்டு சில காரி­யங்­களை நிறை­வேற்றச் செய்­வ­தற்கு சர்வதேச சமூகம் முனை­வ­தாக தெரி­கி­றது.

அதா­வது இலங்­கையை அடித்து முறிப்­பது அவர்­களின் நோக்­க­மல்ல, பய­மு­றுத்தி வளைப்­பது தான் அவர்­களின் இலக்­காகத் தெரி­கி­றது. கொமன்வெல்த் மாநாட்டில், மேற்­கு­லகின் ஆதிக்கம் குறைவு. ஏனென் றால், முக்­கி­ய­மாக அமெ­ரிக்கா அதில் இல்லை. அதன் கூட்­டா­ளி­க­ளான பிரான்ஸ் போன்ற ஏனைய பல ஐரோப்­பிய நாடு­களும் இல்லை.

ஆனால், பிரித்­தா­னியா, அவுஸ்­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, கனடா போன்ற மேற்­கு­லக நாடுகள் இதில் உள்­ளன. கன­டாவும், பிரித்­தா­னி­யாவும் இலங்­கைக்கு எதி­ரா­க கொமன்வெல்த் மாநாட்டில் வரிந்து கட்டிக் கொண்டு செயற்­பட்­டன. ஆனாலும், இந்த மாநாட்டில், மேற்­கு­லக நாடுகள் ஒன்­று­பட்டு ஒரே குர­லாக ஒலிக்­க­வில்லை.

சர்­வ­தேச அரங்கில், வழக்­க­மாக ஒரே குரலில் ஒலிக்கும்- – செயற்­படும் மேற்­கு­லக நாடுகள், கொமன்வெல்த் மாநாட்டில் இலங்­கைக்கு சார்­பா­கவும் எதி­ரா­கவும் நடந்து கொண்­டது புதி­ரான விடயம் தான்.

இந்த விட­யத்தில், இலங்­கைக்கு முற்­றிலும் சார்­பாக நடந்து கொண்­டது அவுஸ்­ரே­லியா, அதற்கு முக்­கி­ய­மான காரணம், அகதிப் பட­கு­களை தடுப்­ப­தற்கு இலங்கைக் கடற்­ப­டையின் உதவி தேவை. அதற்­காக, இலங்­கையின் மனி­த­உ­ரிமை மீறல்­க­ளை­யெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஆத­ரி க்கத் தயா­ரா­னது.

ஆனால் நியூ­ஸி­லாந்து, போர்க்­குற்­றங்­க­ளுக்கு சர்­வ­தேச விசா­ர­ணை­யெல்லாம் தேவை­யில்லை என்று குத்­துக்­க­ரணம் அடித்­ததன் பின்­னணி மர்­ம­மா­கவே உள்­ளது. இவ்­வாறு மேற்­கு­லகம் முரண்­பட்டுக் கொண்­டி­ருக்க, இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங், மாநாட்­டிற்கு வராமல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

எத்­த­கைய சூழலில் அவர் வராது போயி­ருந்­தாலும், அதற்கு அடிப்­படை மனி­த ­உ­ரிமை மீறல்கள் தான் என்­பதில் சந்­தே­க­மில்லை. அந்­த­ வ­கையில், அவ­ரது எதிர்ப்பு இலங்­கைக்கு சார்­பா­ன­தாக கரு­தப்­ப­டத்­தக்­க­தல்ல. அது­மட்­டுமல்ல, கன­டாவைப் போலவே, வெளிப்­ப­டை­யான புறக்­க­ணிப்பை வெளிப்­ப­டுத்­திய ஒரே நாடு மொரி­சியஸ்தான்.

கனே­டியப் பிர­த­மரைப் போன்றே, மொரி­சியஸ் பிர­தமர் நவீன் சந்­திர ராம் கூலம், கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்­க­ணிப்­ப­தாக அறி­வித்தார். இலங்­கையின் மனி­த­உ­ரிமை மீறல்­களை சுட்­டிக்­காட்டி அவர் கொழும்பு மாநாட்டை புறக்­க­ணித்­தது முக்­கி­ய­மா­னது.

இலங்­கையை எதிர்த்­த­மையால், கன­டாவோ, பிரித்­தா­னி­யாவோ எதையும் இழக்கவில்லை. ஆனால், மொரிசியஸ் பிர­தமர், இந்த மாநாட்டைப் புறக்­க­ணித்­ததால், அடுத்து மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிட்­டது.

அர­ச­ த­லைமை கொழும்­புக்கு வந்தால் தான், அடுத்த மாநாட்டை நடத்த முடியும் என்று கொமன்­வெல்த் ­செ­யலர் கமலேஷ் சர்மா மிரட்டிப் பார்க்க, கொழும்­புக்கு வந்து தான், மாநாட்டை நடத்தும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால் அத்­த­கைய வாய்ப்பு தமக்கு வேண்டாம் என்று அந்த வாய்ப்­பையே தூக்கி வீசி­யி­ருந்தார் மொரி­சியஸ் பிர­தமர் நவீன் சந்­திர ராம்­ கூலம்.

அதா­வது, குறிப்­பிட்ட சில நாடுகள் கொமன்வெல்த் மாநாட்டைப் பயன்­ப­டுத்தி இலங்­கைக்கு அழுத்தம் கொடுத்­தன. சில நாடுகள் ஆத­ரவு தெரி­வித்­தன. இன்­னும் சில நாடுகள் எதிர்க்­கா­மலும், ஆத­ரிக்­கா­மலும் வந்து போயின. அவ்­வாறு வந்து போன நாடு­களில் ஒன்று தான் தென்­னா­பி­ரிக்கா.

நவ­நீ­தம்­பிள்­ளையின் தாய்­நா­டான தென்­னா­பி­ரிக்கா, அண்­மைக்­கா­லத்தில் இலங்­கையின் மனிதஉரிமை மீறல்­களுக்கு எதிராக அதிகம் வாய்­தி­றக்­காமல் இருந்து வருகிறது.

மொரிசியஸைப் போன்றே தமி­ழர்கள் உள்­ளிட்ட இந்­திய வம்­சா­வ­ழி­யினர் அதி­க­ளவு வாழும் தென்­னாபி­ரிக்கா, ஒரு­கா­லத்தில் புலி­க­ளுக்கு ஆத­ரவாகச் செயற்­ப­டு­வ­தாக, அவர்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்­துள்­ள­தாக அர­சாங்­கத்தால் விமர்­சிக்­கப்­பட்ட நாடு.

அந்த நாடு, இலங்­கையின் போர்க்­குற்­றங்கள் மீது கடும் போக்கை வெளிப்­ப­டுத்­தா­தது ஏன் என்ற கேள்வி இப்­போது நீடிக்­கவே செய்­கி­றது. புறக்­க­ணிக்கும் அழைப்­பு­க­ளுக்­கெல்லாம் அகப்­ப­டாமல், தென்­னா­பி­ரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, கொழும்பு வந்து, மாநாடு தொடங்­கி­யதில் இருந்து முடியும் வரை இலங்­கை­யுடன் நின்­றி­ருந்தார்.

ஒரு­பக்­கத்தில், இலங்­கைக்கு காலக்­கெடு விதித்து, பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் பர­ப­ரப்பை கிளப்பி விட்ட போது, தென்­னா­பி­ரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா அமை­தி­யாக இருந்தார். ஆனால், அவரும் இலங்­கையை வளைப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யா­கவே செயற்­பட்­டுள்ளார் என்றே தெரி­கி­றது.

ஜெனீவா தீர்­மா­னத்தை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­தா­விடின் அடுத்த ஆண்டு இன்னும் கடி­ன­மான முடி­வு­களை எடுக்க நேரிடும் என்று அமெ­ரிக்கா ஏற்­க­னவே எச்­ச­ரிக்கை செய்­துள்­ளது.

இந்­த ­நி­லையில், நான்கு மாதங்­க­ளுக்குள் சுதந்­தி­ர­மான உள்­ளக விசா­ர­ணையை நடத்­தா­விடின், ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் பேரவை மூலம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முயற்­சிகள் எடுக்­கப்­படும் என்று பிரித்­தா­னியப் பிரதர் டேவிட் கமரூன் எச்­ச­ரித்­துள்ளார்.

அது­மட்­டு­மன்றி, இலங்கை விவ­காரம் பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரக் கொள்­கையின் ஒரு பகு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், எல்லா சர்வ­தேச அமைப்­பு­க­ளிலும் இது எழுப்­பப்­படும் என்றும் அவர் எச்­ச­ரித்­துள்ளார். இலங்­கையின் மனி­த­உரிமை விவ­கா­ரத்தில், ஒன்­று­பட்டு செயற்­ப­டுவோம் என்று கொழும்பு வர­முன்னர் புது­டில்­லியில் இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்­சிங்­குடன் ஒரு இணக்­கப்­பாட்டைக் கண்­டி­ருந்தார் டேவிட் கமரூன்.

நம்­ப­க­மான உள்­ளக விசா­ர­ணைக்கு இலங்கை இணங்­காது போனால், சர்­வ­தேச விசா­ரணை உறுதி என்ற கருத்து வலு­வாக பரப்­பப்­பட்டு வரு­கின்ற சூழலில், ஏதா­வ­தொன்றை செயற்­ப­டுத்­தி­யாக வேண்­டிய கட்­டாயம் இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அதிலும் கொமன்வெல்த் அமைப்பின் தலைமை வேறு இலங்­கை­யிடம் வந்­துள்­ளது. அந்தப் பொறுப்­பையும் நிறை­வேற்­றி­யாக வேண்டும். இத்­த­கைய அழுத்­தங்­களின் ஊடாக, சுதந்­தி­ர­மா­ன­தொரு உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையை நோக்கி இலங்­கையை நகர்த்த முனை­கி­றது சர்­வ­தேச சமூகம். அதற்­கான கரு­வி­யாகத் தான் தென்­னா­பி­ரிக்கா பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது. தென்­னா­பி­ரிக்­காவில், இன­மு­ரண்­பா­டு­களை களைய, உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு எவ்­வாறு உத­வி­யதோ, அது­போன்­ற­தொரு ஆணைக்­கு­ழுவை அமைப்­பது குறித்து இலங்கை ஆலோ­சிப்­ப­தாகத் தக­வல்கள் கசி­கின்­றன. இது­கு­றித்துப் பேசவே தென்­னா­பி­ரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா கொமன்வெல்த் மாநாட்­டுக்கு வந்­தி­ருந்தார். அந்தக் கார­ணத்தை அவர் வெளிப்­ப­டை­யா­கவும் கூறினார்.

தென்­னா­பி­ரிக்­காவின் உத­வி­யுடன், உண்மை நல்­லி­ணக்க ஆணைக் குழுவை அமைத்து, தற்­போ­தைக்கு சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து விடு­பட அர­சாங்கம் எத்­த­னிக்­கலாம். அதற்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது குறித்து தென்­னா­பி­ரிக்கா திட்­டங்­களை முன்­வைத்­துள்­ளது. அது­கு­றித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் தென்­னா­பி­ரிக்க ஜனாதிபதி பேச்சு நடத்­தி­யுள்ளார்.

இது­பற்றி, இந்­தி­யா­வுடன் கலந்­தா­லோ­சித்து விட்டு பதில் கூற­மு­டியும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­விட்­ட­தாக தகவல் வெளி­யிட்­டுள்ளார் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ எவ்­வா­றா­யினும் இந்­தி­யாவோ பிரித்­தா­னி­யாவோ அமெ­ரிக்­காவோ இதற்குக் குறுக்கே நிற்கப் போவ­தில்லை.

அதே­வேளை, இலங்கை அர­சாங்கம் சர்வ­தேச விசா­ரணை அழுத்­தங்­களை நிரா­க­ரித்­துள்ள போதிலும், உள்­ளக விசா­ர­ணையை நடத்த கால­அ­வ­காசம் கோரி­யுள்­ளது கவ­னிக்­கத்­தக்­கது.

உள்­நாட்டுச் சட்­டங்­க­ளின்­ப­டியே விசா­ர­ணை­களை நடத்த முடியும் என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­து­வ­தானால், உள்­ளக விசா­ரணை அமைக்கப்பட்டாக வேண்டும். சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்படுவதை சீனா விரும்பாது. அதனால் தான், சீனா கூட மனி­த­ உ­ரி­மை­களை மதிக்­கவும் ஊக்­கு­விக்­கவும் இலங்கை நடவ­டிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு திடீர் ஆலோசனை கூறியது.

உள்ளக விசாரணை மூலம் பொறுப்புக்கூற வைக்கும் ஒரு அணுகுமுறையை தற்போது சர்வதேச சமூகம் மேற்கொண்டாலும் அது சுதந்­தி­ர­மா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதில் கவ­ன­மாக இருக்கும். அதற்­கா­கவே தென்­னா­பி­ரிக்கா கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளது.

முன்னர் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பொறிக்குள் தள்ளுவதற்கு நோர்வேயை சர்வதேச சமூகம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டதோ, அதுபோன்றே இலங்கை அர­சாங்­கத்தை வளைத்து ஒரு வட்­டத்­துக்குள் கொண்டு வரு­வ­தற்கு தென்­னா­பி­ரிக்கா கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளது.

இது எந்­த­ள­வுக்கு சாத்­தி­ய­மாகும் என்று கூற­மு­டி­யாது, ஆனால், அடுத்த சில மாதங்­க­ளுக்குள் இலங்கை இந்த வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ள மறுத்தால், அடுத்த கட்­ட­மாக மேற்கு நாடுகள், இலங்­கையை பெட்­டிக்குள் அடைக்கும் முயற்­சி­களைத் தான் முன்­னெ­டுக்கும்.


சத்ரியன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல