ஞாயிறு, 24 நவம்பர், 2013

அரசின் நிம்­ம­தியை கெடுக்கும் ஜெனீவா கெட்ட கன­வுகள்

ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேரவை மீண்டும் இலங்­கைக்கு தொல்லை கொடுக் கும் கெட்ட கன­வாக மாறத் தொடங்­கி­யுள் ­ளது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையில், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய, இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட கால­அ­வ­காசம் அடுத்­தாண்டு மார்ச் மாதம் முடி­வ­டை­ய­வுள்­ளது.

ஜெனீவா தீர்­மா­னத்­துக்கு அமை­வாக இலங்கை அர­சாங்கம் நடந்து கொண்­டுள்­ளதா - தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்­றி­யுள்­ளதா என்­பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்கும் பொறுப்பு, ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யி டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

அவர், ஏற்­க­னவே கடந்த ஓகஸ்ட் மாத இறு­தியில் இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்டு நிலை­மை­களை ஆராய்ந்து விட்டு, சமர்ப்­பித்த வாய்­மூல அறிக்­கையில், எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­த­நி­லையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்­க­வுள்ள, அமர்வில் இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான அழுத்­தங்­களை எதிர்­கொள்ள நேரிடும் என்­பது முன்­னரே தெரிந்த விடயம் தான்.

அர­சாங்­கமோ, அதற்கு இன்­னமும் சில மாதங்கள் இருக்­கி­றது தானே என்ற அலட்­சி­யத்தில் இருந்­தது.

ஆனால், அந்த அலட்­சி­யத்­துக்கு ஆப்பு வைத்து விட்டுப் போயி­ருக்­கிறார் பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன்.

அடுத்த நான்கு மாதங்­க­ளுக்குள் போர்க்­குற்­றங்கள், மனி­த ­உ­ரிமை மீறல்­களை சுதந்­தி­ர­மா­கவும், நம்­ப­க­மா­கவும் விசா­ரிக் கத் தவ­றினால், ஐ.நா. மனி­த ­உ­ரி­மைகள் பேரவை மூலம், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அழுத்­தங்­களைக் கொடுப்போம் என்று அவர் எச்­ச­ரித்­துள்ளார்.

பிரித்­தா­னி­யாவின் இந்த எச்­ச­ரிக்கை சாதா­ர­ண­மா­னதோ, வெறும் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­கா­னதோ அல்ல.

இலங்­கையில் நடந்த மனி­த­ உ­ரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக, இது­வரை அமெ­ரி க்கா எந்­த­ள­வுக்கு கடு­மை­யான போக்கை கடைப்­பி­டித்­ததோ, அதற்கு நிக­ராக அல்­லது அதற்கு அதி­க­மான கடும் நிலைப்­பாட்டை பிரித்­தா­னியா எடுப்­ப­தற்­கான அறி­கு­றியே இது­வாகும்.

பிரித்­தா­னியப் பிர­த­மரின் எச்­ச­ரிக்­கையை அடுத்தே, மீண்டும் ஜெனீவா குறித்து பேச்­சுக்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

டேவிட் கம­ரூனின் எச்­ச­ரிக்­கை­யையோ காலக்­கெ­டு­வையோ ஏற்க முடி­யாது என்று ஜனா­தி­ப­தியும் அமைச்­சர்­களும் நிரா­க­ரித்­து ள்­ளனர்.

ஆனால்,அவற்­றை­யெல்லாம்,ஐ.நா. செவி­ம­டுத்துக் கொண்­டி­ருக்கப் போவ­தில்லை.

ஏற்­க­னவே இரண்டு தீர்­மா­னங்கள் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்­டுள்ள நிலையில், இந்த இரண்டு தீர்­மா­னங்­க­ளை யும் நடை­மு­றைப்­ப­டுத்த இலங்கை தவ­றி­யுள்ள நிலையில், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு சர்­வ­தேச விசா­ரணை என்ற ஒரே தெரிவு மட்­டுமே எஞ்­சி­யுள்­ளது.

ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தத் தவ­றினால், இந்த வழி­மு­றையை நோக்கி நகர்­வது தவிர்க்க முடி­யா­தது என்று அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­கள அதி­கா­ரிகள் ஏற்­க­னவே பல­முறை எச்­ச­ரித்து விட்­டனர்.

இப்­போது பிரித்­தா­னி­யாவும் அதையே வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்ள நிலையில், சர்­வ­தேச விசா­ரணை என்ற விடயம் அழுத்தம் பெறத் தொடங்­கி­யுள்­ளது.

சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ரணை நடக்­கு மா, அதற்­கான சாத்­தியம் இருக்­குமா, உலக வல்­ல­ரசு நாடுகள் இதைத் தடுத்து விடுமா என்று சந்­தேகம் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு, தற்­போது சர்­வ­தேச விசா­ர­ணையை நோக்கி இலங்கை தள்­ளப்­பட்டு வரு­வ­தான உண ர்வு ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது.

எனினும், இலங்கை அர­சாங்­கத்­தி­னதும் அமைச்­சர்­க­ளி­னதும், வீர வச­னங்கள் மட் டும் குறை­ய­வில்லை.

சர்­வ­தேச விசா­ரணை என்ற தூக்கு மேடையை நோக்கி இலங்­கையை இழுத் துச் செல்­வ­தற்­கான கள­மா­கவே, அடுத்த மார்ச் மாதம் நடக்­க­வுள்ள ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேரவைக் கூட்டம் அமை­ய­வுள்­ளது என்று தயான் ஜய­தி­லக வெளி­யிட்­டு ள்ள கருத்து மிக முக்­கி­ய­மா­னது.

ஏற்­க­னவே தயான் ஜய­தி­லக, ஜெனீவா தீர்­மா­னங்கள் குறித்து வெளி­யிட்ட கருத்­து­ களும், அதை யதார்த்­த­மாக அணுக முற்­பட்­டதன் விளைவும் தான், அவர் மீதான அர­சாங்­கத்தின் கடுப்­புக்கு கார­ண­மாக அமைந்­தது.

டேவிட் கம­ரூனின் எச்­ச­ரிக்­கையை அலட்­சிப்­ப­டுத்தக் கூடாது என்றும், அது அடுத்த ஜெனீவா கூட்­டத்­தொ­டரில், இலங்­கைக்கு எதி­ரான நகர்­வுக்கு அடிப்­ப­டை­யாக இருக்கும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

2012ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வில் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்டு வந்து நிறை­வேற்­றிய தீர்­மானம், அதை­ய­டுத்து, 2013 மார்ச் மாதம் கொண்டு வந்து நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் தொடர்ச்­சி­யாக, அடுத்த ஆண்­டிலும் அமெ­ரிக்­காவே தீர்­மா­னத்தைக் கொண்டு வரும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

ஏனென்றால், 2013 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இலங்கை தவ­றினால், தொடர்ந்து தீர்­மா­னங்­களை கொண்டு வந்து கொண்­டி­ருக்க முடி­யாது, ஐ.நா.வின் ஏனைய சபை­க­ளி­னது ஒத்­து­ழைப்­பு­க­ளுடன் மாற்­று­வழி ஒன்று பற்றி யோசிக்க வேண்­டி­யி­ருக்கும் என்று அமெ­ரிக்க அதி­கா­ரிகள் ஏற்­க­னவே கூறி­யுள்­ளனர்.

இத்­த­கைய நிலையில், மீண்டும் ஒரு கண்­டனத் தீர்­மா­னத்தைக் கொண்­டு­வர அமெ­ரிக்கா பெரும்­பாலும் விரும்­பாது.

முன்­னைய தீர்­மா­னங்­களின் போதும் பிரித்­தா­னியா, ஐ.நா. மனி­த­ உ­ரிமைக் பேர­ வையில், வாக்­க­ளிக்கும் உரி­மையைக் கொண்ட நாடா­கவோ, நேர­டி­யாக தீர்­மா­ன த்தைக் கொண்டு வரக் கூடிய நாடா­கவோ இருக்­க­வில்லை.

ஆனால், அடுத்த மார்ச் மாதம் நடக்­க­வு ள்ள அமர்வில், ஐ.நா மனி­த ­உ­ரிமை பேர­வைக்குள் பிரித்­தா­னியா நுழையப் போகி­றது.

வரும் ஜன­வரி 1ஆம் திகதி தொடக்கம், அடுத்த மூன்று ஆண்­டு­க­ளுக்­கான அங்­கத்­து வம் பெறு­கி­றது பிரித்­தா­னியா.

இந்­த­நி­லையில், இலங்­கைக்கு எதி­ரான அடுத்த நகர்வில் பிரித்­தா­னியா முக்­கிய பங்கு வகிக்­கலாம்.

அது, அமெ­ரிக்­காவே இலங்கை மீது வன் மம் பாராட்­டு­கி­றது என்ற கருத்­து­க்களை உடைக்­கவும் பயன்­படும்.

அதே­வேளை, ஐ.நா. பொதுச்­ச­பையில், கடந்த 12ஆம் திகதி நடந்த வாக்­கெ­டுப் பில், ஜன­வரி 1ஆம் திகதி தொடக்கம், ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையில் அங்­கத்­துவம் பெறப்­போகும், 14 நாடுகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இதில், இலங்­கைக்கு எப்­போதும் வக்­கா­லத்து வாங்கும் ரஷ்யா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் இருப்­பது முக்­கி­ய­மான விடயம்.

அல்­ஜீ­ரியா, சீனா, கியூபா, பிரான்ஸ், மாலை­தீவு, மெக்­ஸிகோ,மொராக்கோ, நமீ­ பியா, ரஷ்யா, சவூதி அரே­பியா, தென்­னா­பிரிக்கா, மசி­டோ­னியா, பிரித்­தா­னியா, வியட்நாம் ஆகிய நாடு­களே புதி­தாக பேர­வைக்குள் நுழை­ய­வுள்­ளன.

அங்­கோலா, ஈக்­வடோர், குவாட்­ட­மாலா, லிபியா, மலே­ஷியா, மாலை­தீவு, மொரிட்­டா­னியா, போலந்து, கட்டார், மோல்­டோவா, ஸ்பெய்ன், சுவிட்ஸர்­லாந்து. தாய்­லாந்து, உகண்டா ஆகிய நாடு­க­ளுக்குப் பதி­ லா­கவே, இந்தப் புதிய 14 நாடுகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இவற்றில், 2013 ஜெனீவா தீர்­மா­னத்தை, ஆத­ரித்த நாடுகள் ஆறு. எதிர்த்த நாடுகள் ஆறு. நடு­நிலை வகித்த நாடுகள் இரண்டும் அடங்­கு­கின்­றன.

புதி­தாக உள்­வரும் நாடு­களில், அடுத்­த­முறை இலங்­கைக்குக் கை கொடுக்கக் கூடிய நாடுகள் என்றால் சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரே­பியா, வியட்நாம், அல்­ஜீ­ரியா போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம்.

கடந்த முறை தீர்­மா­னத்தை எதிர்த்த மாலை­தீவின் நிலை இம்­முறை மாற்றம் பெறலாம்.

அதே­வேளை, கடந்­த­முறை தீர்­மா­னத்தை 25 நாடுகள் ஆத­ரித்த நிலையில், அடுத்த ஆண்டு தீர்­மானம் கொண்டு வரப்­பட்டால், அந்­த­ளவு நாடுகள் ஆத­ரிக்­குமா என்ற கேள்­வியும் இருக்­கி­றது.

எனினும், அமெ­ரிக்­காவோ, பிரித்­தா­னி­யாவோ கொண்டுவரக் கூடிய அடுத்த தீர்­மா­னத்தை தோற்­க­டிக்கும் அள­வுக்கு இலங்­கையால் செயற்­பட முடி­யாது என்றே தயான் ஜய­தி­லக குறிப்­பிட்­டுள்ளார்.

அடுத்த கூட்­டத்­தொ­டரில், இறு­தி­யான காலக்­கெடு ஒன்று கொடுக்­கப்­படும், அல்­லது தடைகள் விதிக்­கப்­படும் என்றும், அதற்கும் மசி­யாது போனால், 2015இல் இலங்கை மீது சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­படும் அபாயம் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எது எவ்­வா­றா­யினும், இலங்கை அர­சா ங்கம் சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறையை ஏற்­க­மு­டி­யாது என்றே கூறி­வ­ரு­கி­றது,

ஆனால், ஐ.நா.அமைப்பு ஒன்றில் தீர்­மா­னத்தை முன்­னெ­டுக்கும்போது, இலங்­கையின் விருப்­பு­வெ­றுப்­புகள் எல்லாம் கருத்தில் எடுக்­கப்­ப­டாமல் போய்விடும்.

உள்­நாட்டு விசா­ர­ணை­களில் நம்­பிக்­கை­யில்லை என்றும், சர்­வ­தேச விசா­ர­ணை­களே ஒரே வழி என்றும் இது­வரை கூறி­வந்­தவர் நவ­நீ­தம்­பிள்ளை.

இப்போது, அதே நிலைப்பாட்டுக்கு டேவிட் கமரூனும் வந்துள்ளது நவநீதம் பிள்ளையின் கருத்தை இன்னும் பலமடை யச் செய்துள்ளது.

இதுவரை அமெரிக்கா இந்தளவுக்கு முன் னேற்றமான கருத்தை வெளியிடவில்லை.

ஆனால், சமீபகாலமாக அமெரிக்கா மௌனமாக இருந்து வந்தாலும், போர்க் குற்றங்கள் குறித்த உறுதியான ஆதாரங் களை சேகரிக்கும் முயற்சியில், அது ஈடுபட் டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரும், தெற்கு மத்திய ஆசிய விவகாரங் களுக்கான புதிய உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலும், அமெரிக்க இரா ஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும், அடுத்த மார்ச் அமர்வில் இலங்கைக்கு கடிவாளம் போடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, ஜெனீவா பற்றிய கெட்ட கனவு கள் இனி இலங்கையின் தூக்கத்தையும் நிம் மதியையும் கெடுக்கப் போவது உறுதி.

சுபத்ரா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல