தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதியான கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில், திருச்சி முகாமில்தான் இலங்கைத் தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சங்கர் என்பவரைப் பார்ப்பதற்காக அவரது மனைவி காவியா, (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 20 ஆம் திகதி, காலை 11.20 மணிக்கு சென்றுள்ளார். எஸ்.ஐ. ரவிச்சந்திரனிடம் காவியா மனுவைக் கொடுத்துள்ளார். அப்போதுதான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவியா நம்மிடம் சொல்ல முடியாமல் அழும்போது, நடந்ததை விவரித்தார் சங்கர்.
எனக்குப் பூர்வீகம் ஆவுடையார் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள ஏம்பல் கிராமம். தொழிலுக்காக பெற்றோர் இலங்கைக்குப் போன போது நான் பிறந்தேன். அதன்பிறகு 1997 இல் தமிழகத்துக்கு வந்த என்னை, இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
அங்கேயே சில வருடங்கள் இருந்த நான், அங்கிருந்து வெளிப்பதிவில் முகாமிலிருந்து வெளியேறி, புதுக்கோட்டையில் தங்கி கூலி வேலை செய்தேன். இந்த நிலையில், இலங்கையில் போர் தீவிரமான சமயத்தில் என் அம்மா, அப்பா, அக்கா உள்ளிட்ட அனைவரும் இறந்து விட்டனர்.
யாருமற்ற நிலையில் இருந்த எனக்கு இவளோட சிநேகிதம் கிடைத்தது. அதுவே காதலாகி, திருமணம் செய்த, எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இப்போது என் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாள். என்னைப்போன்ற அகதிகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் குடியேறினால், இரண்டே வருடங்களில் குடியுரிமை கிடைப்பதாகச் சொன்னார்கள்.
என் குழந்தைகளாவது படித்து ஆளாக வேண்டும் என்று அவுஸ்திரேலியாவுக்குப் செல்ல முயற்சி செய்தேன். இதைத் தெரிந்துகொண்ட கியூ பிராஞ்ச் பொலிஸார், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி என்னை விசாரணைக்காக அழைத்துப் போய், பொய்யான வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிணை கிடைத்தது. ஆனால் சிறையைவிட்டு வெளியே வந்த என்னை கைதுசெய்து, 25 நாட்களுக்கு முன் இந்த முகாமில் அடைத்தனர்.
அன்று காலை 11.20 மணிக்கு முகாமுக்கு வந்த காவியா, எஸ்.ஐ. யிடம் என்னைப் பார்க்க மனு கொடுத்துள்ளார். அதனை வாங்கிய எஸ்.ஐ. அங்கிருந்த பெண் காவலரைக் கூப்பிட்டு, 'செக் பண்ணி அனுப்புங்க என்று சொல்லியிருக்கிறார். பின்புறமுள்ள அறைக்கு காவியாவை அழைத்துச் சென்ற அந்தப் பெண் காவலர், சேலையைக் கழட்டு, ஜாக்கெட்டைக் கழட்டு என்று மிரட்டியிருக்கார். அரைமணி நேரம் நிர்வாணமாக நிற்கவைத்து அனுப்பினார்.
அழுதபடியே வந்து, உன்னைக் கல்யாணம் பண்ணிய குத்தத்துக்கு கோர்ட்டு, ஜெயில்ன்னு அலைய வெச்சிட்டே. மிச்சமிருக்கிறது மானம் மட்டும்தான். இப்ப அதுவும் போச்சு. இப்படி பொலிஸ் சித்திரவதை செய்தால் சாவதை தவிர வேறு வழியில்லை’ என்று கதறி அழுதாள்.
18 வருடங்களாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் என்மீது எந்த வழக்கும் கிடை யாது. இலங்கையில் நான் பிறந்த ஒரே காரணத்துக்காக என்னைச் சிறையில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், என் மனைவியையும் நிர்வாணமாக நிறுத்தி யிருக்கின்றனர் என்று கண்ணீருடன் தெரி வித்துள்ளார்.

தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில், திருச்சி முகாமில்தான் இலங்கைத் தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சங்கர் என்பவரைப் பார்ப்பதற்காக அவரது மனைவி காவியா, (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 20 ஆம் திகதி, காலை 11.20 மணிக்கு சென்றுள்ளார். எஸ்.ஐ. ரவிச்சந்திரனிடம் காவியா மனுவைக் கொடுத்துள்ளார். அப்போதுதான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவியா நம்மிடம் சொல்ல முடியாமல் அழும்போது, நடந்ததை விவரித்தார் சங்கர்.
எனக்குப் பூர்வீகம் ஆவுடையார் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள ஏம்பல் கிராமம். தொழிலுக்காக பெற்றோர் இலங்கைக்குப் போன போது நான் பிறந்தேன். அதன்பிறகு 1997 இல் தமிழகத்துக்கு வந்த என்னை, இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
அங்கேயே சில வருடங்கள் இருந்த நான், அங்கிருந்து வெளிப்பதிவில் முகாமிலிருந்து வெளியேறி, புதுக்கோட்டையில் தங்கி கூலி வேலை செய்தேன். இந்த நிலையில், இலங்கையில் போர் தீவிரமான சமயத்தில் என் அம்மா, அப்பா, அக்கா உள்ளிட்ட அனைவரும் இறந்து விட்டனர்.
யாருமற்ற நிலையில் இருந்த எனக்கு இவளோட சிநேகிதம் கிடைத்தது. அதுவே காதலாகி, திருமணம் செய்த, எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இப்போது என் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாள். என்னைப்போன்ற அகதிகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் குடியேறினால், இரண்டே வருடங்களில் குடியுரிமை கிடைப்பதாகச் சொன்னார்கள்.
என் குழந்தைகளாவது படித்து ஆளாக வேண்டும் என்று அவுஸ்திரேலியாவுக்குப் செல்ல முயற்சி செய்தேன். இதைத் தெரிந்துகொண்ட கியூ பிராஞ்ச் பொலிஸார், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி என்னை விசாரணைக்காக அழைத்துப் போய், பொய்யான வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிணை கிடைத்தது. ஆனால் சிறையைவிட்டு வெளியே வந்த என்னை கைதுசெய்து, 25 நாட்களுக்கு முன் இந்த முகாமில் அடைத்தனர்.
அன்று காலை 11.20 மணிக்கு முகாமுக்கு வந்த காவியா, எஸ்.ஐ. யிடம் என்னைப் பார்க்க மனு கொடுத்துள்ளார். அதனை வாங்கிய எஸ்.ஐ. அங்கிருந்த பெண் காவலரைக் கூப்பிட்டு, 'செக் பண்ணி அனுப்புங்க என்று சொல்லியிருக்கிறார். பின்புறமுள்ள அறைக்கு காவியாவை அழைத்துச் சென்ற அந்தப் பெண் காவலர், சேலையைக் கழட்டு, ஜாக்கெட்டைக் கழட்டு என்று மிரட்டியிருக்கார். அரைமணி நேரம் நிர்வாணமாக நிற்கவைத்து அனுப்பினார்.
அழுதபடியே வந்து, உன்னைக் கல்யாணம் பண்ணிய குத்தத்துக்கு கோர்ட்டு, ஜெயில்ன்னு அலைய வெச்சிட்டே. மிச்சமிருக்கிறது மானம் மட்டும்தான். இப்ப அதுவும் போச்சு. இப்படி பொலிஸ் சித்திரவதை செய்தால் சாவதை தவிர வேறு வழியில்லை’ என்று கதறி அழுதாள்.
18 வருடங்களாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் என்மீது எந்த வழக்கும் கிடை யாது. இலங்கையில் நான் பிறந்த ஒரே காரணத்துக்காக என்னைச் சிறையில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், என் மனைவியையும் நிர்வாணமாக நிறுத்தி யிருக்கின்றனர் என்று கண்ணீருடன் தெரி வித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக