தென் ஆபிரிக்காவின் சுதந்திரப் போராட்ட வீரரும், கறுப்பினத் தலைவருமான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் வியாழனன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணத்தை அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான ஜேக்கப் சூமா அறிவித்தார்.
தென் ஆபிரிக்காவின் 80 ஆண்டுகால இனவெறிக் கொள்கையை எதிர்த்து நீண்டதொரு போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அந்நாட்டுக்கே ஜனாதிபதியாகி வரலாற்றில் இடம் பிடித்தவர் மண்டேலா. உலகளவில் 250 விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் 1993 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் வென்றார்.
இனவெறிக்கெதிராகப் போராடிய மாபெரும் தலைவர், விடுதலைக்கான குறியீடாக எல்லோராலும் கருதப்பட்டவர். இவை எல்லாவற்றையும் விட சிறந்த மனிதன் இன்று எம் மத்தியில் இருந்து விடைபெற்று விட்டார். இவரை விடவும் ஓர் உன்னத தலைவன் இப் பாரினில் பிறப்பாரா என்பது கேள்விக் குறியே? இவரின் பிரிவை தாங்காமல் முழு உலகமே இன்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது.
அகிலமே மதிக்கும் மாபெரும் தலைவர்களில் ஒருவராக இவர் விளங்கினார். தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடி ெவள்ளையர்களிடமிருந்து கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த மாபெரும் தலைவராவார். விடுதலைப் போராட்ட வீரரான இவர் தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் மூலம் ெவள்ளையர்களின் நிறவெறி ஆட்சியை ஒழித்து சுதேச மக்களின் ஆட்சியை ஏற்படுத்தி சாதனை படைத்தார்.
இளமை
நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் முவேசோவிலுள்ள குலு எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக மொத்தம் 13 பிள்ளைகள். நெல்சன் மண்டேலா மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா ஆகும். எனினும். இவரை நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவர் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.
அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது.
கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, தனது பட்டப்படிப்புக் கல்வியை மேற்கொண்டதுடன், 1941-ஆம் ஆண்டு ஜோஹனஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். அதன் பின்னர் இவர் தங்கச் சுரங்க பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றினார். அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர் தென் ஆபிரிக்க அரசு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்து மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 1958 ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை இரண்டாவதாக மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். இவர் மூன்றாவதாக கிரேக்கா மாசெல் என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் இரண்டாவது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அரசியல்
தென் ஆபிரிக்க நாட்டில் கறுப்பர்களும் ெவள்ளையர்களும் காணப்பட்டனர். இங்கு கறுப்பர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபோதிலும் சிறுபான்மையான வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது.
1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, கறுப்பின மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் அவரிடம் எழுந்தது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.
1948 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சிக்கு தலைவரானார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்ற குற்றசாட்டின் பேரில் கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதனால் 1960களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை ஷார்பெவில் (Sharpeville) நகரில் நடத்தினர். இதன்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அன்று தேசத்துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 1961 அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்..
ஆயுதப் போராட்டம்
அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்துகொண்ட மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். 1961-ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரச மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.
1961 டிசம்பர் 16 ஆம் திகதி அன்று இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாகக் கெடுபிடி செய்ததால் 1961 ஆம் ஆண்டு மண்டேலா தலைமறைவானார். அவரைப் பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால், இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை நடைமுறையில் காணப்பட்டது.
1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட ஆபிரிக்க தேசியக் காங்கிரஸின் (African National Congress) 10 முக்கிய தலைவர்களும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் தென் ஆபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 -ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தன.
சிறைவாசம்
மண்டேலா 1962 இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல் இவ்வளவு நீண்டகாலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. அவரை தென் ஆபிரிக்க அரசாங்கம் பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது. மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
விடுதலைக்கான போராட்டங்கள்
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த பி.டபிள்யூ. போத்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென் ஆபிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால், மண்டேலா மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். தென் ஆபிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டி. க்ளார்க் என்பவர் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
விடுதலை
அப்போதைய தென் ஆபிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டி க்ளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, 11.2.1990 அன்று மண்டேலாவுக்கு விடுதலை வழங்கினார். இதன்போது அவருக்கு வயது 71 ஆகும்.
வரவேற்பு
மண்டேலாவை வரவேற்க உல கம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். பின்னர் இவரை காவலர்கள் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள் பலர் வரவேற்றார்கள்.
விருதுகள்
1993ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லி ணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வ தேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. 1990 இல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது.
தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியாக
1994 மே 10ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியானார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி யாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்தபின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2 ஆவது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்திருந்தார்.
தென் ஆபிரிக்காவுக்கு மட்டுமன்றி முழு உலக மக்களுக்கும் உதாரண புருஷராகத் திகழ்ந்த கறுப்பினத்தவர்களின் விடிெவள்ளி நெல்சன் மண்டேலாவின் இழப்பு உண்மையிலயே நம் எல்லோரு க்கும் பேரிழப்பாகும்.
எம்.எம்.சில்வெஸ்டர்

தென் ஆபிரிக்காவின் 80 ஆண்டுகால இனவெறிக் கொள்கையை எதிர்த்து நீண்டதொரு போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அந்நாட்டுக்கே ஜனாதிபதியாகி வரலாற்றில் இடம் பிடித்தவர் மண்டேலா. உலகளவில் 250 விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் 1993 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் வென்றார்.
இனவெறிக்கெதிராகப் போராடிய மாபெரும் தலைவர், விடுதலைக்கான குறியீடாக எல்லோராலும் கருதப்பட்டவர். இவை எல்லாவற்றையும் விட சிறந்த மனிதன் இன்று எம் மத்தியில் இருந்து விடைபெற்று விட்டார். இவரை விடவும் ஓர் உன்னத தலைவன் இப் பாரினில் பிறப்பாரா என்பது கேள்விக் குறியே? இவரின் பிரிவை தாங்காமல் முழு உலகமே இன்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது.
அகிலமே மதிக்கும் மாபெரும் தலைவர்களில் ஒருவராக இவர் விளங்கினார். தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடி ெவள்ளையர்களிடமிருந்து கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த மாபெரும் தலைவராவார். விடுதலைப் போராட்ட வீரரான இவர் தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் மூலம் ெவள்ளையர்களின் நிறவெறி ஆட்சியை ஒழித்து சுதேச மக்களின் ஆட்சியை ஏற்படுத்தி சாதனை படைத்தார்.
இளமை
நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் முவேசோவிலுள்ள குலு எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக மொத்தம் 13 பிள்ளைகள். நெல்சன் மண்டேலா மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா ஆகும். எனினும். இவரை நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவர் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.
அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது.
கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, தனது பட்டப்படிப்புக் கல்வியை மேற்கொண்டதுடன், 1941-ஆம் ஆண்டு ஜோஹனஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். அதன் பின்னர் இவர் தங்கச் சுரங்க பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றினார். அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர் தென் ஆபிரிக்க அரசு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்து மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 1958 ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை இரண்டாவதாக மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். இவர் மூன்றாவதாக கிரேக்கா மாசெல் என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் இரண்டாவது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அரசியல்
தென் ஆபிரிக்க நாட்டில் கறுப்பர்களும் ெவள்ளையர்களும் காணப்பட்டனர். இங்கு கறுப்பர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபோதிலும் சிறுபான்மையான வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது.
1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, கறுப்பின மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் அவரிடம் எழுந்தது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.
1948 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சிக்கு தலைவரானார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்ற குற்றசாட்டின் பேரில் கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதனால் 1960களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை ஷார்பெவில் (Sharpeville) நகரில் நடத்தினர். இதன்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அன்று தேசத்துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 1961 அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்..
ஆயுதப் போராட்டம்
அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்துகொண்ட மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். 1961-ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரச மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.
1961 டிசம்பர் 16 ஆம் திகதி அன்று இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாகக் கெடுபிடி செய்ததால் 1961 ஆம் ஆண்டு மண்டேலா தலைமறைவானார். அவரைப் பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால், இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை நடைமுறையில் காணப்பட்டது.
1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட ஆபிரிக்க தேசியக் காங்கிரஸின் (African National Congress) 10 முக்கிய தலைவர்களும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் தென் ஆபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 -ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தன.
சிறைவாசம்
மண்டேலா 1962 இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல் இவ்வளவு நீண்டகாலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. அவரை தென் ஆபிரிக்க அரசாங்கம் பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது. மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
விடுதலைக்கான போராட்டங்கள்
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த பி.டபிள்யூ. போத்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென் ஆபிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால், மண்டேலா மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். தென் ஆபிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டி. க்ளார்க் என்பவர் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
விடுதலை
அப்போதைய தென் ஆபிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டி க்ளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, 11.2.1990 அன்று மண்டேலாவுக்கு விடுதலை வழங்கினார். இதன்போது அவருக்கு வயது 71 ஆகும்.
வரவேற்பு
மண்டேலாவை வரவேற்க உல கம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். பின்னர் இவரை காவலர்கள் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள் பலர் வரவேற்றார்கள்.
விருதுகள்
1993ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லி ணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வ தேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. 1990 இல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது.
தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியாக
1994 மே 10ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியானார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி யாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்தபின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2 ஆவது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்திருந்தார்.
தென் ஆபிரிக்காவுக்கு மட்டுமன்றி முழு உலக மக்களுக்கும் உதாரண புருஷராகத் திகழ்ந்த கறுப்பினத்தவர்களின் விடிெவள்ளி நெல்சன் மண்டேலாவின் இழப்பு உண்மையிலயே நம் எல்லோரு க்கும் பேரிழப்பாகும்.
எம்.எம்.சில்வெஸ்டர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக