1917இல் ரஷ்யப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1918இல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்ற உக்ரேன் மீது 1922இல் பொதுவுடைமை ரஷ்யா படையெடுத்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் மீண்டும் இணைந்து கொண்டது. சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் ஒரு முக்கிய நாடாக இருந்தது. சோவியத் ஒன்றிய நாடுகளை ரஷ்யா சுரண்டிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்தது. உக்ரேனிற்கு அப்போது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை இருந்ததா? இப்போது தனி நாடாகிய பின்னரும் ரஷ்யாவிடமிருந்து விலகிச் செல்லும் உரிமை உக்ரேனிற்கு இருக்கிறதா? இது போன்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
ஸ்டாலினிற்கும் ஹிட்லருக்கும் இடையில் உக்ரேன்.
1932-ஆம் 1933ஆ-ம் ஆண்டுகளில் உக்ரேனில் முப்பது இலட்சம் முதல் அறுபது இலட்சம் மக்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டனர். இது ஜோசப் ஸ்டாலின் செய்த இனப்படுகொலை என வாதிடுவோரும் உண்டு. 1937இல் பல உக்ரேனிய அறிஞர்கள் சோவியத்தால் கொல்லப்பட்டனர். 1941இல் ஹிட்லரின் நாஸிப் படைகள் சோவியத்தின் மீது படை எடுத்தபோது ஐம்பது இலட்சம் உக்ரேனியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹிட்லரின் படைகள் தோற்கடிக்கப்பட்டு சோவியத்தில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் நாஸிப் படையினருடன் ஒத்துழைத்தார்கள் எனக் குற்றம் சாட்டி இரண்டு இலட்சம் உக்ரேனியர்கள் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான உக்ரேனியர்களின் விடுதலைப் போராட்டம் 1954இல் அடக்கப்பட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் உக்ரேன் விடுதலை பெற்றது.
தோடம்பழப் புரட்சி - Orange Revolution
2004ஆம் ஆண்டு உக்ரேனில் தொடர்ச்சியாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்பழப் புரட்சி என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு உக்ரேனில் மக்களாட்சி முறைப்படி தேர்தல் நடந்தது. அதில் விக்டர் யுவோனோவிச் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகள் மக்களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்லுபடியற்றது என்றது. மறு தேர்தலில் யுலியா ரைமொஷென்கோ வெற்றி பெற்றார். 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவரது ஆட்சியை குடியரசுத் தலைவராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்ரேனில் பல அரசியல் இழுபறிகள், கூட்டணிகள் அரங்கேறின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யுலியா ரைமொஷென்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.
மோசமான உக்ரேனியப் பொருளாதாரம்.
2008ஆம் ஆண்டு உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உக்ரேனையும் பெரிதும் பாதித்தது. உருக்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் உக்ரேனியப் பொருளாதாரம் உருக்கிற்கான கேள்வி உலகச் சந்தையில் குறைந்ததால் ஆட்டம் கண்டது. 2006ஆம் ஆண்டு ரஷ்யா, தான் உக்ரேனிற்கு வழங்கும் எரிவாயுவின் விலையை கண்டபடி உயர்த்தியது. இது தனது பிடியில் இருந்து உக்ரேயின் விலகுவற்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கையாகக் கருதப்பட்டது.
2009-இல் ரஷ்யாவிற்கு உக்ரேன் செலுத்த வேண்டிய எரிவாயுவிற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தாத படியால் ரஷ்யா தனது எரிவாயு வழங்கலை நிறுத்தியது. பின்னர் இரு நாடுகளும் பத்து ஆண்டுகள் எரிவாயு வழங்கலுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டன. பின்னர் 2010இல் உக்ரேனியத் துறைமுகங்களை ரஷ்யா பாவிப்பதற்கு அனுமதித்தமைக்குப்பதிலாக மலிவு விலையில் ரஷ்யா உக்ரேனிற்கு எரிவாயு வழங்க ஒத்துக் கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உக்ரேன்.
ரஷ்யாவும் உக்ரேனும் மேற்கு ஐரோப்பியக் கலாசாரத்தை ஒத்தவையாக இருந்த போதிலும் உக்ரேனியக் கலாசாரம் ரஷ்யாவுடன் அதிகம் ஒத்துப் போவதாக இருக்கிறது. நீண்டகாலம் இரண்டும் சோவியத் ஒன்றியத்தில் இருந்தபடியால் இப்படி இருக்கலாம். ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணை உறுப்பினராக இணைய விரும்பியிருந்தது. உக்ரேன் சிறிது சிறிதாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்தத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த ரஷ்யா, 2013ஜூலை மாதம் உக்ரேனில் இருந்து சொக்லட் இறக்குமதி செய்வதைத் தடை செய்தது.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் வரியற்ற ஒரு வர்த்தக உடன்படிக்கையைச் செய்ய முயன்றது. போலந்து, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா போன்ற முன்னர் ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுடன் இப்படிப்பட்ட ஒப்பந்தம் முதலில் செய்து பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணைந்து கொண்டது. இதை ரஷ்யா வேறுவிதமாகப் பார்க்கிறது.
முன்னர் ஹிட்லர் படைபலத்தின் மூலம் சாதிக்க முடியாததை இப்போதைய ஜேர்மனி, பொருளாதார ஒத்துழைப்பு என்ற போர்வையில் சாதிக்கிறது என ரஷ்யா கருதுகிறது. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அது தனது சந்தையை மேலும் சிறியதாக்கும். அத்துடன் படைத்துறை ரீதியில் உக்ரேன் ரஷ்யாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புட்டினின் புதிய ரஷ்யா
தன்னை உலகிலேயே அதிக செல்வம் மிக்க அரசுத் தலைவராக்கிய விளாடிமிர் புட்டின், ரஷ்யாவை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல முயல்கின்றார். ரஷ்யாவின் பெருமை மிக்க வரலாறு 1917இல் நடந்த பொதுவுடைமைப் புரட்சியுடன் தொடங்கவில்லை. அதற்கு முன்னரே உலக அரங்கில் ரஷ்யாவிற்கு என்று ஒரு பெருமை மிக்க நிலை இருந்தது என்கிறார் புட்டின்.
1991இல் நடந்த சோவியத் ஒன்றிய வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார் கேந்திரோபாய நிகழ்வு என்கிறார் புட்டின். சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலக அரங்கில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஆதிக்கத்தைச் செலுத் திவந்த ரஷ்யா, 2012ஆம் ஆண்டிலிருந்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீள் நிலைநிறுத்த முயல்கின்றது.
அதன் ஓர் அம்சமாக சிரியாவின் இரசாயன குண்டுகள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்த பின்னர் சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தது. அடுத்ததாக அது, உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதைக் கடுமையாக எதிர்க்கிறது. விளடிமிர் புட்டின் உக்ரேன் மக்களின் எழுச்சியை ஓர் அழிப்பு நடவடிக்கை என விமர்சித்தார்.
பிளவுபட்ட உக்ரேன்
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை உக்ரேன் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுத்து ரஷ்யா தடுத்தது. இதை எதிர்த்து மூன்று இலட்சம் உக்ரேனியர்கள் தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவிற்குப் பொறுப்பான அதன் அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி, புதிய ஐரோப்பாவில் வன்முறைக்கு இடமில்லை என்றார். இது ஐரோப்பாவுடன் உக்ரேன் இணைக்கப்பட்டு ரஷ்யாவைவைப் பலவீனப்படுத்துவதை அமெரிக்காவும் விரும்புகிறது எனக் காட்டுகின்றது. ஆனால், நடு நிலையான நோக்குனர்களின் கருத்துப்படி உக்ரேனிய மக்கள் இரு கூறாகப் பிரிந்து நிற்கின்றார்கள். இருதரப்பும் எண்ணிக்கை அடிப்படையில் ஏறக்குறைய சமமானவர்களே.
ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் உக்ரேனிய நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. வயது அடிப்படையில் பார்க்கையில் இளவயதினர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை விரும்புகின்றனர்.
முதியவர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதை விரும்புகின்றனர். பிராந்திய அடிப்படையில், கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவையும் மேற்குப் பிராந்தியத்தினர், ஐரோப்பிய ஒன்றியத்தையும் விரும்புகின்றனர். சில அறிவாளிகள் ரஷ்யா உக்ரேனிற்கு மீன் கொடுக்கிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீன் பிடிக்கும் கருவியைக் கொடுக்கிறது என்றும், இரண்டாவது, நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கக் கூடியது என்றும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் ரஷ்யா இனிவரும் காலங்களில் பல பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கலாம் என பலரும் கருதுகின்றனர். வட அமெரிக்காவில் அதிக எரிபொருள் வளம் கண்டு பிடிக்கப்பட்டமை, ரஷ்யாவின் முக்கிய வருமானம் ஈட்டும் எரிபொருள் ஏற்றுமதியை இனிப் பெரிதும் பாதிக்கவிருக்கிறது.
ரஷ்யாவின் புதிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்தையைத் திறந்து விடவும் உக்ரேனியர்கள் விசா நடைமுறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதும், வரிகள் குறைந்த ஏற்றுமதியும் இப்படிப் பல சலுகைகளை வழங்க முன்வந்தது. ரஷ்யா, தான் பெலரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்த்தான், தஜகஸ்தான் ஆகிய நாடுகளை இணைத்து அமைக்கவிருக்கும் யூரோ – -ஆசிய ஒன்றியத்தில் உக்ரேனும் இணைந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறது.
இந்த ஒன்றியம் உக்ரேன் இல்லாமல் முற்றுப் பெறமாட்டாது என நம்பப்படுகின்றது. இந்த ஒன்றியம் மத்திய ஆசியாவில் ஒரு புதிய பிராந்திய அரசியல் போட்டியை உருவாக்கும். மத்திய ஆசியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் சீனாவினதும் சந்தைவாய்ப்புக்களைப் பறிக்கும். இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரேனை தம்முடன் இணைப்பதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.
உக்ரேனியக் கிளர்ச்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தூபமிடுகின்றது என்ற ஐயத்திற்கு இது வலுச் சேர்க்கின்றது. ரஷ்யாவின் யூரோ – -ஆசிய ஒன்றியம் பல நாடுகளை மீள் சோவியத் மயமாக்கும் முயற்சி என்றார் அமெரிக்காவின் முன்னாள் அரசுத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன். அமெரிக்க ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனைச் சரியாகக் கையாளவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றன. "உக்ரேன் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தட்டும், பின்னர் உலக அரங்கில் வேறு நாடுகளுடன் இணைவதைப்பற்றிச் சிந்திக்கட்டும்" இது ஓர் உக்ரேனிய வயோதிப இல்லத்தரசி ஊடகம் ஒன்றிற்கு உக்ரேன் மக்களின் கிளர்ச்சி பற்றிக் கூறிய கருத்து. இதில் நிறைய உண்மை இருக்கின்றது.

ஸ்டாலினிற்கும் ஹிட்லருக்கும் இடையில் உக்ரேன்.
1932-ஆம் 1933ஆ-ம் ஆண்டுகளில் உக்ரேனில் முப்பது இலட்சம் முதல் அறுபது இலட்சம் மக்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டனர். இது ஜோசப் ஸ்டாலின் செய்த இனப்படுகொலை என வாதிடுவோரும் உண்டு. 1937இல் பல உக்ரேனிய அறிஞர்கள் சோவியத்தால் கொல்லப்பட்டனர். 1941இல் ஹிட்லரின் நாஸிப் படைகள் சோவியத்தின் மீது படை எடுத்தபோது ஐம்பது இலட்சம் உக்ரேனியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹிட்லரின் படைகள் தோற்கடிக்கப்பட்டு சோவியத்தில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் நாஸிப் படையினருடன் ஒத்துழைத்தார்கள் எனக் குற்றம் சாட்டி இரண்டு இலட்சம் உக்ரேனியர்கள் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான உக்ரேனியர்களின் விடுதலைப் போராட்டம் 1954இல் அடக்கப்பட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் உக்ரேன் விடுதலை பெற்றது.
தோடம்பழப் புரட்சி - Orange Revolution
2004ஆம் ஆண்டு உக்ரேனில் தொடர்ச்சியாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்பழப் புரட்சி என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு உக்ரேனில் மக்களாட்சி முறைப்படி தேர்தல் நடந்தது. அதில் விக்டர் யுவோனோவிச் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகள் மக்களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்லுபடியற்றது என்றது. மறு தேர்தலில் யுலியா ரைமொஷென்கோ வெற்றி பெற்றார். 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவரது ஆட்சியை குடியரசுத் தலைவராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்ரேனில் பல அரசியல் இழுபறிகள், கூட்டணிகள் அரங்கேறின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யுலியா ரைமொஷென்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.
மோசமான உக்ரேனியப் பொருளாதாரம்.
2008ஆம் ஆண்டு உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உக்ரேனையும் பெரிதும் பாதித்தது. உருக்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் உக்ரேனியப் பொருளாதாரம் உருக்கிற்கான கேள்வி உலகச் சந்தையில் குறைந்ததால் ஆட்டம் கண்டது. 2006ஆம் ஆண்டு ரஷ்யா, தான் உக்ரேனிற்கு வழங்கும் எரிவாயுவின் விலையை கண்டபடி உயர்த்தியது. இது தனது பிடியில் இருந்து உக்ரேயின் விலகுவற்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கையாகக் கருதப்பட்டது.
2009-இல் ரஷ்யாவிற்கு உக்ரேன் செலுத்த வேண்டிய எரிவாயுவிற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தாத படியால் ரஷ்யா தனது எரிவாயு வழங்கலை நிறுத்தியது. பின்னர் இரு நாடுகளும் பத்து ஆண்டுகள் எரிவாயு வழங்கலுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டன. பின்னர் 2010இல் உக்ரேனியத் துறைமுகங்களை ரஷ்யா பாவிப்பதற்கு அனுமதித்தமைக்குப்பதிலாக மலிவு விலையில் ரஷ்யா உக்ரேனிற்கு எரிவாயு வழங்க ஒத்துக் கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உக்ரேன்.
ரஷ்யாவும் உக்ரேனும் மேற்கு ஐரோப்பியக் கலாசாரத்தை ஒத்தவையாக இருந்த போதிலும் உக்ரேனியக் கலாசாரம் ரஷ்யாவுடன் அதிகம் ஒத்துப் போவதாக இருக்கிறது. நீண்டகாலம் இரண்டும் சோவியத் ஒன்றியத்தில் இருந்தபடியால் இப்படி இருக்கலாம். ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணை உறுப்பினராக இணைய விரும்பியிருந்தது. உக்ரேன் சிறிது சிறிதாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்தத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த ரஷ்யா, 2013ஜூலை மாதம் உக்ரேனில் இருந்து சொக்லட் இறக்குமதி செய்வதைத் தடை செய்தது.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் வரியற்ற ஒரு வர்த்தக உடன்படிக்கையைச் செய்ய முயன்றது. போலந்து, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா போன்ற முன்னர் ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுடன் இப்படிப்பட்ட ஒப்பந்தம் முதலில் செய்து பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணைந்து கொண்டது. இதை ரஷ்யா வேறுவிதமாகப் பார்க்கிறது.
முன்னர் ஹிட்லர் படைபலத்தின் மூலம் சாதிக்க முடியாததை இப்போதைய ஜேர்மனி, பொருளாதார ஒத்துழைப்பு என்ற போர்வையில் சாதிக்கிறது என ரஷ்யா கருதுகிறது. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அது தனது சந்தையை மேலும் சிறியதாக்கும். அத்துடன் படைத்துறை ரீதியில் உக்ரேன் ரஷ்யாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புட்டினின் புதிய ரஷ்யா
தன்னை உலகிலேயே அதிக செல்வம் மிக்க அரசுத் தலைவராக்கிய விளாடிமிர் புட்டின், ரஷ்யாவை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல முயல்கின்றார். ரஷ்யாவின் பெருமை மிக்க வரலாறு 1917இல் நடந்த பொதுவுடைமைப் புரட்சியுடன் தொடங்கவில்லை. அதற்கு முன்னரே உலக அரங்கில் ரஷ்யாவிற்கு என்று ஒரு பெருமை மிக்க நிலை இருந்தது என்கிறார் புட்டின்.
1991இல் நடந்த சோவியத் ஒன்றிய வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார் கேந்திரோபாய நிகழ்வு என்கிறார் புட்டின். சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலக அரங்கில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஆதிக்கத்தைச் செலுத் திவந்த ரஷ்யா, 2012ஆம் ஆண்டிலிருந்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீள் நிலைநிறுத்த முயல்கின்றது.
அதன் ஓர் அம்சமாக சிரியாவின் இரசாயன குண்டுகள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்த பின்னர் சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தது. அடுத்ததாக அது, உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதைக் கடுமையாக எதிர்க்கிறது. விளடிமிர் புட்டின் உக்ரேன் மக்களின் எழுச்சியை ஓர் அழிப்பு நடவடிக்கை என விமர்சித்தார்.
பிளவுபட்ட உக்ரேன்
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை உக்ரேன் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுத்து ரஷ்யா தடுத்தது. இதை எதிர்த்து மூன்று இலட்சம் உக்ரேனியர்கள் தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவிற்குப் பொறுப்பான அதன் அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி, புதிய ஐரோப்பாவில் வன்முறைக்கு இடமில்லை என்றார். இது ஐரோப்பாவுடன் உக்ரேன் இணைக்கப்பட்டு ரஷ்யாவைவைப் பலவீனப்படுத்துவதை அமெரிக்காவும் விரும்புகிறது எனக் காட்டுகின்றது. ஆனால், நடு நிலையான நோக்குனர்களின் கருத்துப்படி உக்ரேனிய மக்கள் இரு கூறாகப் பிரிந்து நிற்கின்றார்கள். இருதரப்பும் எண்ணிக்கை அடிப்படையில் ஏறக்குறைய சமமானவர்களே.
ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் உக்ரேனிய நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. வயது அடிப்படையில் பார்க்கையில் இளவயதினர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை விரும்புகின்றனர்.
முதியவர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதை விரும்புகின்றனர். பிராந்திய அடிப்படையில், கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவையும் மேற்குப் பிராந்தியத்தினர், ஐரோப்பிய ஒன்றியத்தையும் விரும்புகின்றனர். சில அறிவாளிகள் ரஷ்யா உக்ரேனிற்கு மீன் கொடுக்கிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீன் பிடிக்கும் கருவியைக் கொடுக்கிறது என்றும், இரண்டாவது, நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கக் கூடியது என்றும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் ரஷ்யா இனிவரும் காலங்களில் பல பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கலாம் என பலரும் கருதுகின்றனர். வட அமெரிக்காவில் அதிக எரிபொருள் வளம் கண்டு பிடிக்கப்பட்டமை, ரஷ்யாவின் முக்கிய வருமானம் ஈட்டும் எரிபொருள் ஏற்றுமதியை இனிப் பெரிதும் பாதிக்கவிருக்கிறது.
ரஷ்யாவின் புதிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்தையைத் திறந்து விடவும் உக்ரேனியர்கள் விசா நடைமுறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதும், வரிகள் குறைந்த ஏற்றுமதியும் இப்படிப் பல சலுகைகளை வழங்க முன்வந்தது. ரஷ்யா, தான் பெலரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்த்தான், தஜகஸ்தான் ஆகிய நாடுகளை இணைத்து அமைக்கவிருக்கும் யூரோ – -ஆசிய ஒன்றியத்தில் உக்ரேனும் இணைந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறது.
இந்த ஒன்றியம் உக்ரேன் இல்லாமல் முற்றுப் பெறமாட்டாது என நம்பப்படுகின்றது. இந்த ஒன்றியம் மத்திய ஆசியாவில் ஒரு புதிய பிராந்திய அரசியல் போட்டியை உருவாக்கும். மத்திய ஆசியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் சீனாவினதும் சந்தைவாய்ப்புக்களைப் பறிக்கும். இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரேனை தம்முடன் இணைப்பதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.
உக்ரேனியக் கிளர்ச்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தூபமிடுகின்றது என்ற ஐயத்திற்கு இது வலுச் சேர்க்கின்றது. ரஷ்யாவின் யூரோ – -ஆசிய ஒன்றியம் பல நாடுகளை மீள் சோவியத் மயமாக்கும் முயற்சி என்றார் அமெரிக்காவின் முன்னாள் அரசுத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன். அமெரிக்க ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனைச் சரியாகக் கையாளவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றன. "உக்ரேன் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தட்டும், பின்னர் உலக அரங்கில் வேறு நாடுகளுடன் இணைவதைப்பற்றிச் சிந்திக்கட்டும்" இது ஓர் உக்ரேனிய வயோதிப இல்லத்தரசி ஊடகம் ஒன்றிற்கு உக்ரேன் மக்களின் கிளர்ச்சி பற்றிக் கூறிய கருத்து. இதில் நிறைய உண்மை இருக்கின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக