ஞாயிறு, 16 மார்ச், 2014

மட்டூர் வடை

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு 


செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, ரசை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி கையால் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலந்து, பின் தண்ணீர் ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் வெங்காயத்தினால், கலவையில் சற்று தண்ணீரானது வெளியேற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒருமுறை பிசைந்தால் மாவானது மென்மையாக இருக்கும்.

பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மட்டூர் வடை ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல