ஒருவேளை தயாளு அம்மாள் கைது செய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டுள்ளது!
பாராளுமன்ற தேர்தல் தோல்வியை விட கலைஞர் டி.வி.பணப்பரிமாற்றம் தொடர்பான ஈ.டி.(மத்திய அமுலாக்கல் பிரிவு) தயாளு அம்மாள் மீது தாக்கல் செய்த வழக்குத்தான் கருணாநிதிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றதாம்.
அது மட்டுமின்றி மொத்த தி.மு.க.வையும் திடுக்கிட வைக்கிற மாதிரி இந்த வழக்கின் கைது நடவடிக்கைகளும் இருக்கும் என டெல்லியில் பேச்சடிபடுகின்றது. அதிலிருந்து தனது அம்மாவை காப்பாற்றவே ஸ்டாலின் களத்தில் குதித்திருக்கிறார்.
தனக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார். டெல்லியில் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வெளிவரக்கூடிய இரு பிரமுகர்களை ஸ்பெஷலாக வரவழைத்து தயாளு அம்மாளை மீட்க முயற்சி எடுத்துள்ளாராம்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சட்டவிரோதமாக 200 கோடி ரூபாவை கலைஞர் டி.வி.க்கு ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிதியை பயன்படுத்தியதாக கலைஞர் டி.வி.யின் நிர்வாகி என்ற அடிப்படையில் மாறனின் சகோதரர் அமிர்தமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். 2 ஜி வழக்கில் தயாளுவைப் போல சிலருக்கு ஒரு சாட்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது. .
இவர்களைத்தவிர 2 ஜி வழக்கில் ஏற்கனவே சிக்கிய ஸ்வான் டெலிகொம் சினியுக் உட்பட 15 நிறுவனங்களும் இந்தப் புதிய வழக்கிலும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, இன்னொரு 2 ஜி வழக்காக அனைவரையுமே கைதுசெய்யும் அபாயம் சூழ்ந்திருக்கிறது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த 2 ஜி வழக்கில் சாட்சி சொல்ல தனது உடல் நிலையை காரணம் காட்டி டெல்லி செல்லாமல் தவிர்த்தார் தயாளு அம்மாள். ஆனால், அதே அணுகுமுறை ஈ.டி. வழக்கில் கை கொடுப்பது சிரமம் என்கிறார்கள். ஏனென்றால் அண்மைக்காலமாக தயாளு அம்மாள் உற்சாகமாக நடமாடிய பல காட்சிகள் மீடியாக்களில் வந்துவிட்டன.
வீட்டுக்கு வரும் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரிடம் அக்கறையாக வெற்றி வாய்ப்பு குறித்து விசாரிக்கும் அளவுக்குத் தெளிவாகவே இருந்தாராம். ஏப்ரல் 24 ஆம் திகதி கோபாலபுரம் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று தனியாகவே வாக்களித்திருக்கின்றார்.
நாளை மறுதினம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நேரில் ஆஜராகும்படி டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருக்கிறார். இதில் தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் அன்றைய தினம் ஆஜராக வேண்டும். ஆனால் தயாளு அம்மாளோ இதிலிருந்து தப்பிக்க 18 ஆம் திகதியே திடீர் உடல் நலக்குறைவை காரணம் காட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார்.
ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கறாராக இருப்பது ஊரறிந்த விஷயம். இந்த வழக்கின் நீதிபதியான சைனி குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆகவே, முன்ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை. என்கிறார்கள். வழக்கறிஞர்கள். ஒரு வேளை தயாளு அம்மாள் கைதுசெய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டு போயிருக்கிறது!
பாராளுமன்ற தேர்தல் தோல்வியை விட கலைஞர் டி.வி.பணப்பரிமாற்றம் தொடர்பான ஈ.டி.(மத்திய அமுலாக்கல் பிரிவு) தயாளு அம்மாள் மீது தாக்கல் செய்த வழக்குத்தான் கருணாநிதிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றதாம்.
அது மட்டுமின்றி மொத்த தி.மு.க.வையும் திடுக்கிட வைக்கிற மாதிரி இந்த வழக்கின் கைது நடவடிக்கைகளும் இருக்கும் என டெல்லியில் பேச்சடிபடுகின்றது. அதிலிருந்து தனது அம்மாவை காப்பாற்றவே ஸ்டாலின் களத்தில் குதித்திருக்கிறார்.
தனக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார். டெல்லியில் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வெளிவரக்கூடிய இரு பிரமுகர்களை ஸ்பெஷலாக வரவழைத்து தயாளு அம்மாளை மீட்க முயற்சி எடுத்துள்ளாராம்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சட்டவிரோதமாக 200 கோடி ரூபாவை கலைஞர் டி.வி.க்கு ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிதியை பயன்படுத்தியதாக கலைஞர் டி.வி.யின் நிர்வாகி என்ற அடிப்படையில் மாறனின் சகோதரர் அமிர்தமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். 2 ஜி வழக்கில் தயாளுவைப் போல சிலருக்கு ஒரு சாட்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது. .
இவர்களைத்தவிர 2 ஜி வழக்கில் ஏற்கனவே சிக்கிய ஸ்வான் டெலிகொம் சினியுக் உட்பட 15 நிறுவனங்களும் இந்தப் புதிய வழக்கிலும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, இன்னொரு 2 ஜி வழக்காக அனைவரையுமே கைதுசெய்யும் அபாயம் சூழ்ந்திருக்கிறது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த 2 ஜி வழக்கில் சாட்சி சொல்ல தனது உடல் நிலையை காரணம் காட்டி டெல்லி செல்லாமல் தவிர்த்தார் தயாளு அம்மாள். ஆனால், அதே அணுகுமுறை ஈ.டி. வழக்கில் கை கொடுப்பது சிரமம் என்கிறார்கள். ஏனென்றால் அண்மைக்காலமாக தயாளு அம்மாள் உற்சாகமாக நடமாடிய பல காட்சிகள் மீடியாக்களில் வந்துவிட்டன.
வீட்டுக்கு வரும் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரிடம் அக்கறையாக வெற்றி வாய்ப்பு குறித்து விசாரிக்கும் அளவுக்குத் தெளிவாகவே இருந்தாராம். ஏப்ரல் 24 ஆம் திகதி கோபாலபுரம் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று தனியாகவே வாக்களித்திருக்கின்றார்.
நாளை மறுதினம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நேரில் ஆஜராகும்படி டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருக்கிறார். இதில் தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் அன்றைய தினம் ஆஜராக வேண்டும். ஆனால் தயாளு அம்மாளோ இதிலிருந்து தப்பிக்க 18 ஆம் திகதியே திடீர் உடல் நலக்குறைவை காரணம் காட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார்.
ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கறாராக இருப்பது ஊரறிந்த விஷயம். இந்த வழக்கின் நீதிபதியான சைனி குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆகவே, முன்ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை. என்கிறார்கள். வழக்கறிஞர்கள். ஒரு வேளை தயாளு அம்மாள் கைதுசெய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டு போயிருக்கிறது!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக