சனி, 24 மே, 2014

வடபகுதியெங்கும் வியாபித்திருக்கும் இராணுவத்தின் நிழல் நடவடிக்கைகள்

'மாற்று வழி­க­ளி­லான, அர­சி­யலின் விரி­வாக்­கமே யுத்தம்' - இது ஜெர்­ம­னி­ய­ரா­கிய வொன் க்ளோஸ்விட்ஸ் என்ற தத்­து­வ­மே­தையின் உலகப் புகழ்­பெற்ற வார்த்­தை­க­ளாகும். யுத்தம் என்­பது அர­சி­யலின் மற்­று­மொரு முகம், முக்­கிய அம்சம். அர­சியல் நோக்­கங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக ஆயுத பலத்தைப் பிர­யோ­கித்து, மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஓர் அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவே அது நோக்­கப்­ப­டு­கின்­றது.



1780 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி பிறந்த க்ளோஸ்விட்ஸ் இரா­ணுவ தள­ப­தி­யாக இருந்து 1831 ஆம் ஆண்டு மறைந்­தவர். அந்த காலத்தில் யுத்த களத்தில் அவ­ருக்குக் கிடைத்த அனு­ப­வங்­களும், சிந்­த­னை­களும் யுத்தம் பற்­றிய உலகப் புகழ்­பெற்ற சிந்­த­னா­வா­தி­யாக அவரைப் புடம் போட்­டி­ருந்­தன என்று ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றார்கள்.

யுத்த சிந்­த­னா­வா­தி­யாகத் திகழ்ந்த அவர், யுத்­தத்தின் உள­வியல் மற்றும் அர­சியல் விவ­கா­ரங்கள் குறித்து வலி­யு­றுத்தி கூறி­யி­ருக்­கின்றார். இந்த தத்­து­வங்­களை அமெ­ரிக்­கர்கள் முதல் உலகில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் தமது யுத்தம் மற்றும் அத­னுடன் இணைந்த அர­சியல் செயற்­பா­டு­களில் கைக்­கொள்­வ­தாகக் கூறப்­ப­டுகின்றது. இந்த வகையில் இலங்கை இரா­ணு­வத்­தி­னரும் அவ­ரு­டைய கொள்­கை­களில் ஈர்க்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

யுத்­தத்தில் வெற்றி பெற்­றுள்ள இலங்கை அர­சாங்கம், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற சிந்­த­னையை நாடு முழு­வ­திலும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்சிகளை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற நோக்­கத்தை அர­சாங்கம் முடிந்த முடி­வாக, இறுக்­க­மான ஒரு தீர்­மா­ன­மாகக் கொண்டு அதனைச் செயற்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. இந்த கைங்­க­ரி­யத்­திற்­காக க்ளோஸ்­விட்ஸின் கொள்­கையை - தத்­து­வத்தைப் பின்­பற்றி அதி­கார பலத்­துடன் அந்தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது.

பல்­லின மக்­க­ளையும் சமூ­கங்­க­ளையும் கொண்ட இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் பேசும் மக்­களின் உரி­மைகள் ஆளுந்­த­ரப்­பி­னரால் தொடர்ச்­சி­யாக மறுக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மாக அந்த உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக அஹிம்சை வழி போராட்­டங்­களும், அதன்­பின்னர் ஆயு­த­மேந்­திய போராட்­டங்­களும் அறு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆயினும் இந்த இரண்டு வழி­மு­றை­க­ளி­லான போராட்­டங்­களும் ஆட­சி­யா­ளர்­க­ளினால் மிகவும் நேர்த்­தி­யாக முறி­ய­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இதனால், சிறு­பான்­மை­யி­ன­ராக இருந்து உரி­மை­க­ளுக்­காகப் போரா­டிய தமிழ் சமூகம் முறை­யான அர­சியல் அந்­தஸ்து அற்­ற­வர்­க­ளாக, தோற்­றுப்­போன சமூ­கத்தினராக இன்று மாற்­றப்­பட்­டி­ருக்கின்றார்கள். பயங்­க­ர­வா­த­மாக சித்திரிக்­கப்­பட்டு, சர்­வ­தேச மட்­டத்தில் அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நிலையில், அர­சியல் உரி­மைக்­கான வலு­மிக்க ஆயுதப் போராட்டம் படு­தோல்­வி­ய­டையச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

யுத்­தத்தில் அடைந்த வெற்­றியின் பெரு­மி­தத்தில், இலங்கை அரசு இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற அவ­சி­யத்தை இல­கு­வாகப் பின்­தள்ளி, அத்­த­கைய தேவையே நாட்டில் கிடை­யாது என்ற நிலைப்­பாட்டை ஓர் அர­சியல் தீர்­மா­ன­மா­கவே மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கத்தான் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள போதிலும், இனப்­பி­ரச்சினைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் நாளொரு நிலைப்­பாட்­டையும், பொழு­தொரு கொள்­கை­யையும் கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு முன்னர், யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததும், இனப்­பி­ரச்சினைக்கு பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் தீர்வு காணப்­படும் என்று உறு­தி­ய­ளித்து வந்த அர­சாங்கம் இப்­போது, இனப்­பி­ரச்­சினை என்­பதைப் பெரி­து­ப­டுத்­தாத ஒரு போக்கைக் கொண்­டி­ருக்­கின்­றது. நாட்டில் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையே இருக்­கின்­றது என சுட்­டிக்­காட்டி, அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தால் போதும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு ஏற்­பட்­டு­விடும் என்று அரச தரப்­பினர் கூறி வரு­கின்­றார்கள்.

இதற்கு ஆதா­ர­மாக இந்த நாட்டில் சிறு­பான்­மை­யினர் என்று எவரும் கிடை­யாது என்ற புதிய கோஷத்தை ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் யுத்த வெற்­றியைக் கொண்­டா­டும்­போது முடிந்த முடி­வாக முன்­வைத்­தி­ருந்தார். யுத்த காலத்­திலும், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற பின்பும், அர­சுக்கு ஆத­ர­வாக இருப்­ப­வர்­களே பெரும்­பான்­மை­யினர் என்றும், யுத்த வெற்­றியை சகிக்க முடி­யா­த­வர்­களே சிறு­பான்­மை­யினர் என்றும் அவர் அப்­போது இலக்­கணம் வகுத்­தி­ருந்தார். யுத்த வெற்­றியை மதிக்­கா­த­வர்கள் - அர­சுக்கு ஆத­ர­வ­ளிக்­கா­த­வர்கள், சிறு­பான்­மை­யினர் மட்­டு­மல்­லாமல், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற ஒன்­றி­ணைந்த நாட்டுக்கான கொள்­கையை எதிர்க்­கின்ற தேசத்­து­ரோ­கி­க­ளா­கவும் சில நேரங்­களில் அரச தரப்­பினர் வர்­ணிக்­கின்ற ஒரு போக்­கையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

வர்த்­தகம் மற்றும் தொழில்­துறை

அபி­வி­ருத்தி நிலைமை

யுத்தம் நடை­பெற்ற காலத்தில் விடு­தலைப்புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பிரதேசம், இரா­ணுவ கட்­டுப்­பாட்டுப் பிர­தேசம் என நாடு இரண்­டாகப் பிள­வு­பட்டு கிடந்­தது. ஒரு நாட்டில் இருந்து மற்­று­மொரு நாட்­டுக்குச் செல்­வதைப் போன்ற பிர­யாண நடை­மு­றை­களை, இந்த இரண்டு பிர­தே­சங்­க­ளுக்­கு­மி­டையில் போக்­கு­வ­ரத்து செய்­த­வர்கள் அப்­போது பின்­பற்ற நேர்ந்­தி­ருந்­தது. எதி­ரியின் தரப்பில் இருந்து வரு­ப­வர்­களைப் போலவே இந்தப் பய­ணிகள் இரு­த­ரப்­பி­ன­ராலும் சந்தேகக் கண்­கொண்டு நோக்­கப்­பட்­டார்கள். இதன்­போது, இந்த நாட்டின் குடி­மக்­க­ளாக இருந்­த­போ­திலும், அவர்கள், கடு­மை­யான சோதனை நட­வ­டிக்­கைகள், கண்­கா­ணிப்புச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

அது மட்­டு­மல்­லாமல், வீடு­களில் இருந்து அலு­வல்­க­ளுக்­காக வெளியில் செல்­ப­வர்கள் உயி­ருடன் திரும்பி வரு­வார்­களா என்­பது நிச்­ச­ய­மற்­றி­ருந்த ஒரு சூழல் அப்­போது நில­வி­யது. எந்த நேரத்தில் குண்­டுகள் எங்கே வெடிக்கும் என்றும், எந்த நேரத்தில் எங்கே எறி­க­ணை­களும், விமான குண்­டு­களும் வந்து தாக்கும் என்­பதும் தெரி­யா­தி­ருந்த நிலைமை அப்­போ­தி­ருந்­தது. யுத்­தத்தில் அரச படைகள் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து, இந்த நிலை­மைகள் இல்­லா­தொ­ழிந்­தன. பிர­யாணக் கட்­டுப்­பா­டுகள் யாவும் நீக்­கப்­பட்டு, குண்டு வெடிப்­புகள் பற்­றிய அச்­சமும் நீங்­கின. பூகோள ரீதி­யாக இரண்­டாகப் பிள­வு­பட்டு கிடந்த பிர­தே­சங்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டன. மொத்­தத்தில் இரண்­டாகப் பிரிந்­தி­ருந்த நாடு ஒன்­றாக்­கப்­பட்­டது. ஒரே நாடா­கி­யது.

ஆனாலும் பிரி­வு­பட்­டி­ருந்த நாடு பூகோள ரீதி­யாக ஒன்­றி­ணைக்­கப்­பட்­ட­தே­யல்­லாமல், மக்கள் உள ரீதி­யாக – அர­சியல் ரீதி­யாக, உணர்­வு­பூர்­வ­மாக ஒன்­றி­ணைக்­கப்­ப­ட­வில்லை. வடக்கும் தெற்கும் முன்னர் இருந்­ததைப் போலவே பிரிந்­தி­ருக்­கின்ற ஓர் உணர்­வுக்கே பலரும் இப்­போது ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.

யுத்­தத்தின் பாதிப்­பு­களை நேர­டி­யாக எதிர்­கொண்டு பல்­வேறு வழி­க­ளிலும் பாதிக்­கப்­பட்­டுள்ள வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு யுத்த காலத்தில் ஏற்­பட்­டி­ருந்த பௌதிக ரீதி­யான இழப்­பு­க­ளுக்கும், உள­வியல் ரீதி­யான இழப்­பு­க­ளுக்கும் சரி­யான நிவா­ர­ணங்கள் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வில்லை.

மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற புனர்­வாழ்வுச் செயற்­பா­டு­களில் சேர்ந்த ஒப்­பந்­தக்­கா­ரர்கள் தொடக்கம் தொழி­லா­ளர்கள் வரையில் பெரும்­பான்மை இன மக்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கின்­றது. அதே­போன்று வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் உள்ள சிறிய நக­ரங்கள் தொடக்கம் பெரிய நக­ரங்கள் வரையில் அத்­தனை இடங்­க­ளிலும் தென்­ப­கு­தியைச் சேர்ந்த வச­தி­களும், வளங்­களும், முத­லீட்டு வாய்ப்­பையும் கொண்­டுள்ள வர்த்­த­கர்­க­ளுக்கே முத­லிடம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இங்கும் உள்­ளூரில் யுத்தம் கார­ண­மாக நலி­வ­டைந்து, தமது வர்த்­தக நட­வ­டிக்­கை­களைப் புதுப்­பிக்க வேண்­டிய சொந்தப் பிர­தே­சங்­களில் உள்ள நகர வர்த்­த­கர்கள் புறந்­தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

நாட்டின் தலை­ந­கரம் உள்­ளிட்ட யுத்­தத்­தின்­போது நேர­டி­யாகப் பெரிய அளவில் பாதிக்­கப்­ப­டாத பெரிய முத­லீ­டு­களைக் கொண்­டுள்ள வர்த்­தக நிறு­வ­னங்­களும் வர்த்­த­கர்­க­ளுமே, பெரும் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளில போர்ப்­பி­ர­தேச நக­ரங்­களில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வ­தற்கு அரச நிறு­வ­னங்­க­ளி­னாலும், மற்றும் நிதி நிறு­வ­னங்­க­ளினாலும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றார்கள். உள்­ளூரில் உள்ள வர்த்­த­கர்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பார் எவ­ரு­மில்­லாத நிலை­மையே தொடர்­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல், யுத்த காலத்­திற்கு முன்னர் மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் செயற்­பட்டு வந்த தொழிற்­சா­லைகள், கைத்­தொழில் நிலை­யங்கள் என்­ப­வற்றை மீளவும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்தைச் சேர்ந்த தொழில் அதி­பர்கள், கைத்­தொழில் முயற்சி­யா­ளர்­களின் கவ­லை­யாக இருக்­கின்­றது.

யாழ். குடா­நாட்டில் முன்னர் திக்­கத்தில் செயற்­பட்டு வந்த வடி­சாலை தொழிற்­சாலை இலா­ப­க­ர­மாக இயங்கி வந்­தது. யுத்த காலத்­திலும் இந்த நிறு­வனம் செயற்­பட்டு நல்ல வரு­மா­னத்தை ஈட்­டித்­தந்­தது. இப்­போது எவரும் கவ­னிப்­பா­ரற்ற நிலையில் காணப்­ப­டு­வ­தாக அங்­குள்ள தொழில் முயற்­சி­யா­ளர்கள் கூறு­கின்­றார்கள். இதே­போன்று இயற்கை வளம் நிறைந்த ஆனை­யி­றவு உப்­பளம் இன்னும் மீள் நிர்­மாணம் செய்­யப்­ப­ட­வில்லை. பரந்தன் இர­சா­யனத் தொழிற்­சா­லையும் இதே நிலை­யில்தான் இருக்­கின்­றது என்று யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெய­சே­கரன் சுட்­டிக்­காட்­டுகின்றார்.

விர­லுக்கு மிஞ்­சிய வீக்­கத்தைப் போன்று யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, வீதிகள் புன­ர­மைக்­கப்­பட்டு வெளியார் அனை­வ­ருக்கும் விரிய திறந்­து­வி­டப்­பட்­டுள்ள வட­ப­கு­தியின் வர்த்­த­கத்­து­றையில் தென்­ப­கு­தியைச் சேர்ந்த பண­ப­ல­முள்ள பெரிய நிறு­வ­னங்கள் ஆதிக்கம் செலுத்தி வரு­வ­தா­கவும், இதனால் உள்ளூர் வர்த்­த­கர்கள். அந்த நிறு­வ­னங்­க­ளுடன் போட்­டி­போட்டு, வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யாமல் தமது சொந்த நிறு­வ­னங்­களை மூடி­விட்டு வெளி­நா­டு­க­ளுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் அவ­லமும், கஷ்­டமும் நிறைந்த பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பி­டு­கின்றார். இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் முன்­னேற முடி­யா­த­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றார்கள் என்று அவர் கவ­லை­யோடு குறிப்­பி­டு­கின்றார்.

அர­சியல் ரீதி­யான இரா­ணுவ பிர­சன்னம்

யுத்தம் முடி­வ­டைந்­துள்ள போதிலும், யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சங்­களில் இருந்து இரா­ணு­வத்­தினர் இன்­னுமே விலக்கிக் கொள்­ளப்­ப­ட­வில்லை. மாறாக அவர்கள் அங்கு கேந்­திர நிலை­யங்­க­ளிலும், முக்­கி­ய­மான இடங்­க­ளிலும் நவீன வச­தி­க­ளுடன், நிரந்­தர தளங்­களை அமைத்து நிலை­கொண்­டி­ருக்கின்றார்கள். விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு, அவர்கள் உள்­ளூரில் அழிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், தேசிய பாது­காப்­புக்கு இன்னும் அச்­சு­றுத்தல்; இருப்­ப­தா­கவும், அதன் கார­ண­மா­கவே இரா­ணு­வத்­தினர் தொடர்ந்து நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று அர­சாங்கம் காரணம் கூறி வரு­கின்­றது,

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், புலம்­பெயர் நாடு­களில் குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­களில் இருக்­கின்ற விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் அவர்­க­ளு­டைய ஆத­ர­வா­ளர்கள், இங்கே புலத்தில் மீண்டும் விடு­த­லைப்­பு­லி­களை எழுச்சி பெறச் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து வடக்கில் இரா­ணுவம் தொடர்ந்து நிலை­கொண்­டி­ருப்­ப­தற்­கான அவ­சி­யத்தை அர­சாங்கம் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இதற்கு ஆதா­ர­மாக நெடுங்­கே­ணியில் விடு­த­லைப்­பு­லி­களின் மீள் எழுச்சித் தலை­வர்கள் என குறிப்­பி­டப்­ப­டு­கின்ற கோபி உள்­ளிட்ட மூவர் இரா­ணுவ சுற்­றி­வ­ளைப்­பின்­போது இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­படும் மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

அந்தச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து, அதற்கு முன்­னரும், பின்­னரும் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களில் பலர் தொடர்ந்து விசா­ர­ணைக்­காகத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கின்றார்கள். அது மட்­டு­மல்­லாமல் புலி­களின் மீள் எழுச்­சிக்­கா­கவே முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லைகள் தினத்தில் நினைவேந்தல் நிகழ்­வுகள் நடத்­தப்­ப­டு­கின்­றன எனக்­கூறி, அவற்றைத் தடுப்­ப­தற்­காக முதலில் யாழ். பல்­க­லைக்­க­ழகம் தற்­கா­லி­க­மாக இழுத்து மூடப்­பட்­டி­ருந்­தது. யுத்­தத்தில் இறந்த தமது உற­வு­க­ளையும் பொது­மக்­க­ளையும் நினை­வு­கூர்­வ­தற்கு தங்­க­ளுக்கு உரிமை இருக்கின்றது என பல்­க­லைக்­க­ழக சமூ­கமும், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் எடுத்துக் கூறிய போதிலும். மே 18 ஆம் திகதி யுத்­த­கா­லத்­தி­லும்­பார்க்க மோச­மான இரா­ணுவ நெருக்­கு­வா­ரங்­களும், இரா­ணுவ புல­னாய்வு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வாறு வெளிப்­ப­டை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்பால், வெளித்­தோற்­றத்தில், அள­வுக்கு அதி­க­மான, இரா­ணு­வத்தின் பிர­சன்னம் தெரி­யா­தி­ருக்கும் வகையில், பொது­மக்­களைப் போன்று சிவி­லு­டையில் இரா­ணு­வத்­தினர் கலக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். முன்னர் சந்­திக்குச் சந்தி காப்­ப­ரண்­களை அமைத்து சீரு­டையில் கட­மையில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த முறையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அநே­க­மான காப்­ப­ரண்­களும் அற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றில் கட­மை­பு­ரிந்த சீருடை இரா­ணு­வத்­தி­னரும் இப்­போது அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால் வெளிப்­ப­டை­யாகத் தெரி­யாத வகையில் எல்லா இடங்­க­ளையும் இரா­ணு­வத்­தினர் சாதா­ரண மக்­களைப் போன்று நட­மாடியும், நிலை­கொண்­டி­ருந்தும் நிலை­மை­க­ளையும், பொது­மக்­களின் நட­மாட்­டங்கள் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றையும் உன்­னிப்­பாகக் கவ­னித்து வரு­கின்­றார்கள்.

மே மாதத்தில் கொண்­டா­டப்­ப­டு­கின்ற பௌத்த பண்­டி­கை­யா­கிய வெசாக் மற்றும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நினைவு தின­மா­கிய மே 18 ஆம் திக­திய உள்­ள­டக்­கிய வாரத்தில் வட­ப­கு­தியின் நிலை­மை­களை நேரில் பார்த்து செய்தி அறிக்­கை­யி­டு­வ­தற்­காகச் சென்­றி­ருந்த செய்­தி­யா­ளர்கள், இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய இந்த நிழல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையின் தீவிரத் தன்­மையை நேர­டி­யாக அனு­ப­வித்­தி­ருந்­தார்கள்.

இறுதி மோதல்கள் இடம்­பெற்­றி­ருந்த முள்­ளி­வாய்க்கால் பகு­திக்கு, இந்த செய்­தி­யா­ளர்கள் சென்­றி­ருந்த போது, அவர்கள் அங்கு சென்ற ஒரு­சில நிமி­டங்­க­ளி­லேயே அவர்கள் நின்­றி­ருந்த இடத்­திற்கு சாதாரண உடையில் இருந்த இரா­ணு­வத்­தினர் வந்­து­ விட்­டார்கள். வந்­தது மட்­டு­மன்றி, 'யார் நீங்கள்? இங்கு என்ன செய்­கின்­றீர்கள்?' என அவர்­களைத் துருவித் துருவி விசா­ரணை செய்யத் தொடங்­கி­விட்­டார்கள்.

தாங்கள் செய்­தி­யா­ளர்கள். இந்தப் பகு­தியில் இடம்­பெ­று­கின்ற அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள், புதி­தாக மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற வீடுகள், மற்றும் பொது வச­தி­களைப் பார்த்து அவர்­க­ளு­டைய கருத்தை அறி­வ­தற்­காக வந்­தி­ருந்­த­தாக அவர்கள் கூறி­னார்கள். அப்­ப­டி­யானால், இங்கு வரு­வ­தற்­கு­ரிய பாது­காப்பு அமைச்சின் அனு­மதி கடிதம் உங்­க­ளிடம் இருக்­கின்­றதா, அதனைக் காட்­டுங்கள். அவ்­வா­றான அனு­மதி இல்­லா­விட்டால் இங்­கெல்லாம் நீங்கள் வர­மு­டி­யாது என்று கடும் தொனியில் தெரி­வித்­துள்­ளார்கள்.

வடபகுதியெங்கும்...

யுத்தம் முடிந்­து­விட்­டது. ஐந்து வரு­டங்­க­ளா­கின்­றன. செய்­தி­யா­ளர்கள் வடக்கில் எங்கும் போகலாம். நிலை­மை­களைப் பார்­வை­யி­டலாம் என்று உய­ர­தி­கா­ரிகள் எங்­க­ளுக்குச் சொல்­லி­யி­ருக்கின்றார்கள். நாட்டின் ஜனா­தி­ப­தியும் அத­னையே கூறி­யி­ருக்­கின்றார். ஆகவே எங்­க­ளுக்கு அனு­மதி கடிதம் பெற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று பதி­ல­ளித்த போதிலும், அவர்கள் செய்தி சேக­ரிப்­ப­தற்கோ, அங்­குள்ள பொது­மக்­க­ளுடன் கதைப்­ப­தற்கோ அவர்கள் செய்­தி­யா­ளர்­களை அனு­ம­திக்­க­வில்லை.

அதே­நேரம் அங்கு சில நிமி­டங்­களில் வந்து சேர்ந்த அதி­கா­ரிகள் தரத்­தி­லான இரா­ணு­வத்­தி­னரும், இத­னையே கூறினர். இதனால் அங்கு இரு­த­ரப்­பி­ன­ருக்கும் சிறிது நேரம் தத்­த­மது தரப்பு நியா­யங்கள் குறித்து வாதம் நடை­பெற்­றதைத் தொடர்ந்து மேல­தி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்டு, அவர்கள் விடுத்த அறி­வு­றுத்­த­லுக்­க­மை­வாக சுமார் அரை மணித்­தி­யா­லத்தின் பின்னர் செய்­தி­யா­ளர்கள் தமது பணியைச் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டார்கள். ஆனால், பொது இடம் ஒன்றில் இவ்­வாறு செய்­தி­யா­ளர்­க­ளுக்கும், இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள், இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற வாதப் பிர­தி­வா­தத்தைப் பார்த்த பொது­மக்கள் அவி­டத்தை விட்டு அகன்­று­விட்­டார்கள். அதன் பின்னர் அந்தப் பிர­தே­சத்தில் எந்த ஒரு பொது­ம­கனும் செய்­தி­யா­ளர்­க­ளுடன் பேச்­சுக்­கொ­டுப்­ப­தற்கு முன்­வ­ரவே இல்லை. இதனால் செய்­தி­யா­ளர்கள் அங்­கி­ருந்து வெறும் கையுடன் செல்ல நேர்ந்­தது.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் முள்­ளி­வாய்க்­காலில் இரண்டு தட­வைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இதே­போன்று புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தில் உட்­புற கிரா­மப்­ப­கு­தி­யொன்­றிலும் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அந்தப் பிர­தே­சத்தின் அச்ச நிலைமை குறித்த அனு­பவம் ஏற்­பட்­டி­ருந்­தது.

இந்தச் சம்­ப­வத்தில் அந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரு­டைய வீட்டில் செய்­தி­யா­ளர்கள் பேசிக்­கொண்­டி­ருந்த போது ஒரு சில நிமி­டங்­களில் அந்தப் பிர­தே­சத்தைக் கண்­கா­ணிக்­கின்ற இரா­ணுவ புல­னாய்வு பிரிவைச் சேர்ந்­த­வர்கள், வீட்­டுக்­கா­ர­ருடன், அயலில் உள்ள வீட்டு உரி­மை­யாளர் ஒரு­வரின் தொலை­பேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வந்­தி­ருப்­ப­வர்கள் யார் என்ற விப­ரங்­களைக் கேட்­ட­றிந்து கொண்டார்கள். அத்துடன் என்னனென்ன விடயம் பற்றி அங்கு பேசப்படுகின்றது என்று விசாரித்திருக்கின்றார்கள்.

இவ்வாறான இராணுவத்தின் நிழல் நடவடிக்கைகள் வடபகுதியெங்கும் வியாபித்து காணப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள்ளே பல்கலைக்கழக ஆசிரியர்கள். மாணவர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்ட நிகழ்வும் இதனோடு தொடர்புடையதாகவே நோக்கப்படுகின்றது. இதனை யார் செய்தது என்று தங்களுக்குத் தெரியாது என்று யாழ். மாவட்ட இராணுவத்தளபதி கூறியிருக்கின்றார். அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ள போதிலும், இராணுவத்திற்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயன்றுள்ள அந்தத் தரப்பினர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் உள்ள தீவிரவாத அரசியல்வாதிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்றும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இவ்வாறான கிளர்ச்சி ஏற்படத்தக்க ஒரு சூழலில் இராணுவத்தின் பிரசன்னம் வடபகுதியில் மிகவும் அவசியம் என்ற தேவையை அரசாங்கம் வலிந்து வலியுறுத்தியிருக்கின்றது. அது மட்டுமன்றி, தமிழ்ப்பிரதேசங்களில் பல இடங்களிலும் பெரும் நிலப்பரப்பை இராணுவத்தினருக்காக சுவீகரித்து அங்கு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு சிவில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன்மூலம் இந்தப் பிரதேசத்தின் பாரம்பரிய இன சமூகத்திற்கிடையில் பெரும்பான்மை இனத்தவராகிய இராணுவம் சார்ந்த குடிமக்களை இரண்டறக் கலந்து, தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம், தாயகப் பிரதேசம் என்ற தனித்துத்தை இல்லாதொழிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இது யுத்தத்தில் மாத்திரமன்றி, யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னரும், சிறுபான்மை இன மக்களின் இன அடையாளத்தையும், தனித்துவத்தையும் படிப்படியாக இல்லாதொழித்து, ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற நிலைமையை உருவாக்குவதற்காக, இராணுவத்தைப் பயன்படுத்துகின்ற, அரசாங்கத்தின் அரசியல் உத்தியாகவே தென்படுகின்றது. எனவே, க்ளோட்ஸ்விட்ஸின் இராணுவ அரசியல் தத்துவத்தை இலங்கை அரசாங்கம் புடம்போட்டு, தனது தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்துவதைத் தெளிவாகக் காண முடிகின்றது.

 செல்­வ­ரட்னம் சிறி­தரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல