டில்லியில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா, மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக பிரதமர் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளின் உயர் தலைவர்களது பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் அசோகா அரங்கத்தில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக, ஜனாதிபதி மாளிகையில் திறந்தவெளி முற்றத்தில் முன்பு வாஜ்பாய் பதவியேற்றத்தைப் போன்று, நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில், நரேந்திர மோடி தனது பதவியேற்கும் விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான `சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது, தற்போது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், "நரேந்திர மோடி தனது பிரசாரத்திலும் பேட்டிகளிலும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தது பாகிஸ்தானைத்தான். அப்படியிருக்கையில், தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரையும் அவர் அழைத்துள்ளார். இதனால், பெரும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதன் மூலம் இலங்கை ஜனாதிபதிக்கு கௌரவத்தை ஏற்படுத்துகிறார் நரேந்திரமோடி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், வைகோவும் கருதுகிறார்கள் என்றால், பாகிஸ்தானும், வங்கதேசமும் இதை வித்தியாசமாகப் பார்க்கின்றன.
``மக்களாட்சி சிந்தனை மேம்பட்டுவிட்ட சூழலில், தெரிவு செய்யப்பட்ட எந்த அரசும் தனது பதவியேற்புக்கு அயல் நாட்டு தலைவர்களை அழைப்பதோ, அவர்கள் கலந்து கொள்வதோ வழக்கமில்லை. மாறாக, மன்னராட்சியிலே மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஏனைய மன்னர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்'' என்பது அந்த நாடுகளின் கருத்து.
மொகலாய சாம்ராஜ்யம் இருந்தபோது, ஜஹாங்கீர், ஷாஜஹான், ஓளரங்கசீப் தொடங்கி மொகலாயச் சக்கரவர்த்திகளின் முடிசூட்டு விழாவுக்கு அவர்களுக்குக் கப்பம் செலுத்தும் நவாபுகளுக்கும் ராஜாக்களுக்கும் அழைப்பு விடுப்பது வழக்கமாக இருந்தது. அதுபோன்ற நடைமுறையைக் கையாள்கிறார் நரேந்திர மோடி.
தெற்கு ஆசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளான `சார்க்' நாட்டு தலைவர்களுக்கு நரேந்திரமோடி, தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத்தான் பாகிஸ்தானும், வங்கதேசமும் கருதுகின்றன.
அதனால்தான், அந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் விழாவில் கலந்து கொள்ளாமல் அதிகாரிகளை அனுப்புகிறார்கள். இந்நிலையில், `இவ்விழாவில் ஜனாதிபதி மஹிந்த கலந்து கொள்ள இசைவு தந்திருப்பதே, இலங்கை இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதன் வெளிப்பாடுதான்' என்று வர்ணிக்கின்றன பாகிஸ்தானியப் பத்திரிகைகள் சில.
உண்மையிலேயே, மோடிக்கு வெளிநாட்டுத் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருந்தால் அவர், உலக நாடுகளின் தலைவர்களை அழைத்திருப்பார். மாறாக, தெற்காசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதால்தான் `சார்க்' நாடுகளின் தலைவர்களை மட்டும் அவர் அழைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்கள்.
நரேந்திரமோடியின் தரப்பிலிருந்து இதுபற்றி எந்தவித விளக்கமோ, அறிவிப்போ இல்லை என்றாலும், பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்து இதுதான்:
``நாம் இலங்கையைப் புறக்கணிப்பதாலோ, ஜனாதிபதி மஹிந்தவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாலோ யாருக்கென்ன இலாபம்? இலங்கை மீது போர் தொடுக்கவா போகிறோம்?
நரேந்திர மோடியின் வெற்றி, ஜனாதிபதி மஹிந்தவை பயமுறுத்தி இருப்பதால்தான் அவர் உடனடியாக அழைப்புக்கு இணங்கி பதவியேற்புக்கு ஓடி வருகிறார். இதனைப் பயன்படுத்தி நமது மீனவர்களின் பிரச்சினையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர்களது உரிமையைப்பெறுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அவரை புறக்கணிப்பது அல்ல' என்கிறார்கள் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள்.
இந்நிலையில், மோடியின் ராஜதந்திரம் பலிக்குமா? இல்லையா? என்பது ஜனாதிபதி மஹிந்தவின் வருகையைப் பொறுத்துத்தான் அமையும் என்கிறார்கள் விமர்சகர்கள்...
[ நன்றி: தினமணி ]
சாதாரணமாக பிரதமர் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளின் உயர் தலைவர்களது பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் அசோகா அரங்கத்தில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக, ஜனாதிபதி மாளிகையில் திறந்தவெளி முற்றத்தில் முன்பு வாஜ்பாய் பதவியேற்றத்தைப் போன்று, நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில், நரேந்திர மோடி தனது பதவியேற்கும் விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான `சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது, தற்போது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், "நரேந்திர மோடி தனது பிரசாரத்திலும் பேட்டிகளிலும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தது பாகிஸ்தானைத்தான். அப்படியிருக்கையில், தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரையும் அவர் அழைத்துள்ளார். இதனால், பெரும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதன் மூலம் இலங்கை ஜனாதிபதிக்கு கௌரவத்தை ஏற்படுத்துகிறார் நரேந்திரமோடி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், வைகோவும் கருதுகிறார்கள் என்றால், பாகிஸ்தானும், வங்கதேசமும் இதை வித்தியாசமாகப் பார்க்கின்றன.
``மக்களாட்சி சிந்தனை மேம்பட்டுவிட்ட சூழலில், தெரிவு செய்யப்பட்ட எந்த அரசும் தனது பதவியேற்புக்கு அயல் நாட்டு தலைவர்களை அழைப்பதோ, அவர்கள் கலந்து கொள்வதோ வழக்கமில்லை. மாறாக, மன்னராட்சியிலே மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஏனைய மன்னர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்'' என்பது அந்த நாடுகளின் கருத்து.
மொகலாய சாம்ராஜ்யம் இருந்தபோது, ஜஹாங்கீர், ஷாஜஹான், ஓளரங்கசீப் தொடங்கி மொகலாயச் சக்கரவர்த்திகளின் முடிசூட்டு விழாவுக்கு அவர்களுக்குக் கப்பம் செலுத்தும் நவாபுகளுக்கும் ராஜாக்களுக்கும் அழைப்பு விடுப்பது வழக்கமாக இருந்தது. அதுபோன்ற நடைமுறையைக் கையாள்கிறார் நரேந்திர மோடி.
தெற்கு ஆசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளான `சார்க்' நாட்டு தலைவர்களுக்கு நரேந்திரமோடி, தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத்தான் பாகிஸ்தானும், வங்கதேசமும் கருதுகின்றன.
அதனால்தான், அந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் விழாவில் கலந்து கொள்ளாமல் அதிகாரிகளை அனுப்புகிறார்கள். இந்நிலையில், `இவ்விழாவில் ஜனாதிபதி மஹிந்த கலந்து கொள்ள இசைவு தந்திருப்பதே, இலங்கை இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதன் வெளிப்பாடுதான்' என்று வர்ணிக்கின்றன பாகிஸ்தானியப் பத்திரிகைகள் சில.
உண்மையிலேயே, மோடிக்கு வெளிநாட்டுத் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருந்தால் அவர், உலக நாடுகளின் தலைவர்களை அழைத்திருப்பார். மாறாக, தெற்காசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதால்தான் `சார்க்' நாடுகளின் தலைவர்களை மட்டும் அவர் அழைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்கள்.
நரேந்திரமோடியின் தரப்பிலிருந்து இதுபற்றி எந்தவித விளக்கமோ, அறிவிப்போ இல்லை என்றாலும், பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்து இதுதான்:
``நாம் இலங்கையைப் புறக்கணிப்பதாலோ, ஜனாதிபதி மஹிந்தவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாலோ யாருக்கென்ன இலாபம்? இலங்கை மீது போர் தொடுக்கவா போகிறோம்?
நரேந்திர மோடியின் வெற்றி, ஜனாதிபதி மஹிந்தவை பயமுறுத்தி இருப்பதால்தான் அவர் உடனடியாக அழைப்புக்கு இணங்கி பதவியேற்புக்கு ஓடி வருகிறார். இதனைப் பயன்படுத்தி நமது மீனவர்களின் பிரச்சினையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர்களது உரிமையைப்பெறுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அவரை புறக்கணிப்பது அல்ல' என்கிறார்கள் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள்.
இந்நிலையில், மோடியின் ராஜதந்திரம் பலிக்குமா? இல்லையா? என்பது ஜனாதிபதி மஹிந்தவின் வருகையைப் பொறுத்துத்தான் அமையும் என்கிறார்கள் விமர்சகர்கள்...
[ நன்றி: தினமணி ]


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக