பிரசவவலி ஏற்பட்டதையடுத்து தானே காரை செலுத்திச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் நெடுஞ்சாலையோரத்தில் ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பிரசவித்த சம்பவம் அமெரிக்க உதாஹ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
டேவி மரியஹ் ஒஸ்ட்லர் என்ற மேற்படி பெண் (32 வயது) தனக்கு பிரசவவலி ஏற்பட்டதும் தனது காரில் ஏறி தானே மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்துள்ளார்.
உதாஹ் நெடுஞ்சாலையில் கார் பயணித்த வேளை அவருக்கு பிரசவவலி தீவிரம் அடையவும் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவசரசேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவசரசேவைப் பிரிவினர் டேவியை காரிலிருந்து வெளியில் தூக்கியெடுத்து அவருக்கு குழந்தையை பிரசவிக்க உதவினர்.
இதனையடுத்து டேவியும் அவரது குழந்தையும் பிறிஹாம் நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டேவி மரியஹ் ஒஸ்ட்லர் என்ற மேற்படி பெண் (32 வயது) தனக்கு பிரசவவலி ஏற்பட்டதும் தனது காரில் ஏறி தானே மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்துள்ளார்.
உதாஹ் நெடுஞ்சாலையில் கார் பயணித்த வேளை அவருக்கு பிரசவவலி தீவிரம் அடையவும் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவசரசேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவசரசேவைப் பிரிவினர் டேவியை காரிலிருந்து வெளியில் தூக்கியெடுத்து அவருக்கு குழந்தையை பிரசவிக்க உதவினர்.
இதனையடுத்து டேவியும் அவரது குழந்தையும் பிறிஹாம் நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக