தனது காதலியின் காதை கடித்து துண்டாக்கி அவரின் தொண்டையினூடாக குடையொன்றை உட்செலுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மினேஸோரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மைக்கேல் திருடியு (51 வயது) என்ற மேற்படி நபர், தனது காதலியின் (42 வயது) பூனைக்கு தீ வைத்து அதன் தலையை கத்திரிக்கோலால் வெட்டி துண்டித்ததாகவும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவ தினம் மைக்கேல் வாக்குவாதமொன்றையடுத்து காதலியை தாக்குதவதற்கு அணுகிய போது, அவரது விரலை கடிக்க காதலி முயன்றுள்ளார். இதனையடுத்து மைக்கேல் காதலியின் காதை கடித்து துண்டாக்கி அவரது தொண்டையினூடாக குடையை செலுத்த முயற்சித்துள்ளார்.
எனினும் காதலி ஒருவாறு உயிர்தப்பி பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பொலிஸார் அங்கு வந்த போது காதலி குருதி பெருக்கெடுத்தோட உடல் நடுங்கியவாறு இருந்துள்ளார்.
விசாரணையின் போது 3 வாரங்களுக்கு முன்னர் மைக்கேல் பூனையை கொன்றமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மைக்கேல் பூனைக்கு தீ வைத்து அது எரிந்து கொண்டிருக்கையில், அதை இறக்கும் வரை இரு கைகளாலும் குத்தியுள்ளார். அதன்பின் இறந்த பூனையின் தலையை வெட்டி துண்டித்துள்ளார்.
மைக்கேல் திருடியு (51 வயது) என்ற மேற்படி நபர், தனது காதலியின் (42 வயது) பூனைக்கு தீ வைத்து அதன் தலையை கத்திரிக்கோலால் வெட்டி துண்டித்ததாகவும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவ தினம் மைக்கேல் வாக்குவாதமொன்றையடுத்து காதலியை தாக்குதவதற்கு அணுகிய போது, அவரது விரலை கடிக்க காதலி முயன்றுள்ளார். இதனையடுத்து மைக்கேல் காதலியின் காதை கடித்து துண்டாக்கி அவரது தொண்டையினூடாக குடையை செலுத்த முயற்சித்துள்ளார்.
எனினும் காதலி ஒருவாறு உயிர்தப்பி பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பொலிஸார் அங்கு வந்த போது காதலி குருதி பெருக்கெடுத்தோட உடல் நடுங்கியவாறு இருந்துள்ளார்.
விசாரணையின் போது 3 வாரங்களுக்கு முன்னர் மைக்கேல் பூனையை கொன்றமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மைக்கேல் பூனைக்கு தீ வைத்து அது எரிந்து கொண்டிருக்கையில், அதை இறக்கும் வரை இரு கைகளாலும் குத்தியுள்ளார். அதன்பின் இறந்த பூனையின் தலையை வெட்டி துண்டித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக