வியாழன், 25 பிப்ரவரி, 2010

காதலாகி – கடுப்பாகி

“ஹலோ கவிஞரே

இங்க வாங்க

இது நீங்க எழுதுன புத்தகம்தானே?





” ஆமாம் என்னோடதுதான்

காதல் கவிதைகள்”





“சரி உங்க வாயாலே

கொஞ்சம் வாசிங்க கேக்கலாம்..”




“நீ

நானகி

உன்னிடம்

முத்தம் பெற்று பார்

இந்த உலகம்

எவ்வளவு அழகானது

வாழ்க்கை

எவ்வளவு சுவாரஸ்யமானது

உன் முத்தம்

எவ்வளவு வலிமையானது

என்று தெரியும்.

நானாக சொன்னால் பொய் என்பாய்.

இது

உன் காதல் பிதற்றல் என்பாய்

நீ

நானாகி

உன்னிடம்

முத்தம் பெற்றுபார்…





நிறுத்து…நிறுத்து

அட நிறுத்துங்க…

கொஞ்சமாவது

நியாயமா இருக்கா

நீங்க பண்றது?

உங்க காதலிக்கு

எழுதறதா இருந்தா

15 பைசா

போஸ்ட் கார்டு

வாங்கி எழுதியனுப்ப வேண்டியதுதானே.

உங்க அந்தரங்கத்தை எழுதி

புக்கு போட்டு விக்கிறது

அசிங்கமா இல்லை?





உங்களுக்கு

அழகியல் உணர்ச்சியே இல்லை




எது

உங்க காதலிய பத்தி

ஊரே தெரிஞ்சுக்கிறதுதான்

அழகியல் உணர்ச்சியா?

காதல்

காமம்

இதெல்லாம்

எவ்வளவு பிரத்தியேகமானது

அந்தரங்கமானது

தெரியாதா உங்களுக்கு.

30 ரூபா கொடுத்து

புத்தகம் வாங்கி

நாலு விஷயம்

தெரிஞ்சிக்கலாம்னு

பார்த்தா…

அடுத்தவன் டைரிய

எடுத்து படிக்கிறமாதிரி

ஒரே அருவருப்பு…

நாட்டு நடப்பு

தெரியுமா உங்களுக்கு

எங்கப்பாரு

பசி

சுரண்டல்

தீண்டாமை

ஊருக்கு வெளியே சேரி

ஈழத்தில் தமிழர்களோட அவதி…





சார்… சார்…

அத பத்திக்கூட

எழுதியிருக்கேன் சார்




நிறுத்துயா

நீ

எத பத்தி வேணுனாலும்

எழுதுவே

நீதான் கவிஞனாச்சே…





அட

நீங்க வேற

காதல் பத்தி

சும்மா

எழுதி பாத்தேன்

நல்லா வந்துச்சி

புத்தகமா போட்டேன்

நம்மளுக்கு காதலியெல்லாம்

கிடையாதுங்க..




அடப்பாவி

இதென்ன

காகிதக் கரமைதுனம்



***

காதலாகி – கடுப்பாகி1998
வேதிமாறன்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல