வியாழன், 25 பிப்ரவரி, 2010

புலி ஒன்று பூனை ஆனது

சீன விலங்கியல் பூங்கா ஒன்றில் காளை மாட்டின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் புலி ஒன்று மிரண்டுபோன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

அந்த விலங்கியல் பூங்காவில் அரியவகை புலி ஒன்று வளர்க்கப் பட்டு வருகிறது. கூண்டு புலியான அதற்கு வேட்டையாடும் உணர்வை ஏற்படுத்துவதற்காக காளை மாடு ஒன்றை அதன் கூண்டிற்குள் அனுப்பி வைத்தனராம்.

புலி மாட்டை அடித்து விருந் தாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க் கப்பட்டதற்கு மாறாக காளையை பார்த்ததும் புலி மிரண்டு போய் விட்டதாம். அதுமட்டுமல்லாமல் காளை மாடு புலியின் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தி அதனை நிலைகுலைய வைத்திருக்கிறதாம்.

இந்த காட்சியை பார்வையாளர்கள் நம்பமுடியாத வியப்போடு பார்த்து ரசித்தனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல