சனி, 29 மே, 2010

படுக்கப் போவதற்கு முன்பு கம்பியூட்டரை பயன்படுத்தினால் தூக்கம் வராதா?

கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு அதை பயன்படுத்தினால் அவர்கள் தூக்கத்தை பறிகொடுத்து விடுவார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு கம்பியூட்டரை அணைத்தால் தான் தூக்கம் வரும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மனித மூளையும் அதில் உள்ள தூங்கும் விதமும் கம்பியூட்டரில் இருந்து வெளிவரும் பிரகாசமான ஒளியால் குழப்பம் அடைந்து இருப்பதை அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

எலக்ட்ரோனிக் பொருள்கள் இன்னும் பகல்நேரம் தான் நீடிக்கிறது என்ற தோற்றத்தை கொடுத்து நம் மூளையை ஏமாற்றி விடுகின்றன. இதனால் தூக்கம் வராமல் தடுமாற வைக்கின்றன.

நம் உடலில் உள்ள இயற்கையான உயிரியல் கடிகாரம் இரவு 9 மணி முதல் 10 மணிக்கு எல்லாம் தூங்குவதற்கு தயாராகி விடுகின்றது. ஆனால் கம்பியூட்டர் இதை குழப்புகிறது என்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். தூக்கம் வருவதற்கு சரியான வழி புத்தகம் படிப்பது தான் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல