சனி, 3 ஜூலை, 2010

சென்னைக்கு இடம்மாறிய அனுஷ்கா

வேட்டைக்காரன் விரக்தியில் ஆழ்த்தியதால் வருத்தத்தில் இருந்த அனுஷ்கா சிங்கம் ஹிட்டாகியுள்ளதால், தனது மார்க்கெட் உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னையில் ஒரு பங்களாவைப் பிடித்து சென்னைக்கு மாற்றிவிட்டார்.

ரெண்டு என்ற தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்த அனுஷ்கா அதன் பின்னர் தெலுங்குக்கு தாவினார். அங்கு ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் அருந்ததி படம் மூலம் சூப்பர் ஹிட் நாயகியானார்.

இந்த நிலையில் அவரைப் பிடித்து தமிழுக்கு மீண்டும் கொண்டு வந்தனர். விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரனில் நடிக்க வைத்தனர். விஜய்யுடன் ஜோடியாக நடிப்பதால் தனக்கு தமிழில் மீண்டும் மார்க்கெட் கிடைக்கும், தமிழிலும் முன்னணிக்கு வந்த விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் துருதிர்ஷ்ட வசமாக வேட்டைக்காரன் படுத்துவிட்டதால் அப்செட் ஆனார். ஆனால் தற்போது சிங்கம் வந்து அவரைக் காப்பாற்றியுள்ளது.

சிங்கம் படம் ஹிட்டாகியுள்ளதால் அனுஷ்காவும் குஷியாகியுள்ளார். ராசியில்லாத நடிகை என்று தன்னை முத்திரை குத்திவிடாமல் காப்பாற்றிய படம் என்பதால் சிங்கத்தின் வெற்றி அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

இதையடுத்து தன்னைத் தேடி நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் சென்னையில் ஒரு பங்களாவை வாடகைக்குப் பிடித்து இங்கு இடம்மாறியுள்ளார்.

இனி தான் சென்னையில்தான் தங்கி இருக்கப் போவதாகவும் தகவலை பரப்பியுள்ளாராம்.

எனவே அனுஷ்காவைப் புக் செய்ய நினைக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஹைதராபாத் போய் கஷ்டப்பட வேண்டியதில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல