வெள்ளி, 24 செப்டம்பர், 2010

இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது

சண்டிலண்ட்ஸ் க்ரோவ், ஹைடவுன் பகுதியை சேர்ந்தவர் ஹினா படேல். 37 வயதாகும் இவர் மேரிசைடு ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பாடசாலையில் பயிலும் மாணவர்கள் இருவரை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நடந்து வந்த சில இந்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பாடசாலை நிர்வாகம் ஹினா படேலை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது. 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவில் ஆசிரியரே ஈடுபட்டுள்ளதால் இது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.

விசாரணைகளுக்கு பாடசாலை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அந்த பாடசாலையின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நன்மை கருதி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல