செவ்வாய், 19 அக்டோபர், 2010

கொங்கோவில் பாலியல் வன்றைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பாலியல் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு முதல் பெண்மணி ஒலிவ் லெம்பே கபிலா தலைமையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தினர். பல வருட காலமாக கொங்கோ இராணுவமும் ஆயுதக் குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்ட புகாவு நகரிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மேற்படி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம் பெற்ற நகரில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நூற்றுக் கணக்கானோர் போராளிகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டனர்.

கடந்த வருடம் அங்கு 15,000 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கொங்கோவிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத் தலைவர் மொனுஸ்கோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந் தார்.

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் “பாலியல் பயங்கரவாதம் வேண்டாம்' என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச்சென்றனர். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல