புதன், 27 அக்டோபர், 2010

சதாமின் கூட்டாளியை தூக்கில் போட வத்திக்கான் எதிர்ப்பு

ஈராக்கில் சதாம் ஹூசெயின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தாரிக் அஸிஸ், பதவியிலிருந்தபோது சியா பிரிவினரை கொன்று குவித்ததற்காக, அவருக்கு ஈராக் நீதிமன்றம் நேற்று முன்தினம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பிற்கு, வத்திக்கான் பாப்பரசரின் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வத்திக்கான் செய்தித்தொடர்பாளர் பெடரிகோ லொம்பர்டி கூறுகையில், `மரண தண்டனை குறித்த வத்திக்கானின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததுதான். எனவே, தாரிக் அஅஸிஸுகு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்று நம்புகிறோம். இதனை தடுத்து நிறுத்துவதற்காக, நாம் அனைத்து வகையான ராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

இந்த தண்டனை கைவிடப்பட்டால்தான், ஈராக்கில் சமாதானமும், அமைதியும் தழைக்க முடியும்' என்றார்.

சதாம் ஹூசெயின் ஆட்சியில் இருந்த அமைச்சர்களில் இவர்மட்டும் தான் கிறிஸ்துவ மதத்தைச்சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல