திங்கள், 1 நவம்பர், 2010

வன்னி மக்களின் கதறல்

வடபகுதியில் காணாமல்போன தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு வன்னி மக்கள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கதறியழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தபொழுதே மக்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

தமது மக்கள் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் இல்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் குறித்து விபரங்கள் தந்தால் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அவர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி தர நடவடிக்கையெடுப்பதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல