சனி, 6 நவம்பர், 2010

ஜேர்மனியில் விபத்து இலங்கை தமிழர் உட்பட மூவர் பலி

ஜேர்மனியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வேலை முடிந்து வீடு திரும்புகையில் யார் முதலில் போவது என்ற போட்டிக்காக இரு கார்களில் ஒரு காரை மற்ற கார் விரட்டிக்கொண்டு சென்றபோது, எதிர்ப்பக்கத்தில் வந்த இரண்டு கொள்கலன் வாகனங்களுடன் ஒன்றோடு ஒன்று மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.. இறந்த இலங்கையர் யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்ட அரியநேசன்(வயது 53) என்பவர் ஆவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல