`ஹரிபொட்டர்' கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 7 நாவல்கள் எழுதி புகழ்பெற்றவர், ஜே.கே.ரவுலிங். இவரது 4-வது நாவலான `ஹரிபொட்டர் அண்ட் தி கோப்லட் ஆப் பயர்', மறைந்த எழுத்தாளர் அட்ரியன் ஜேக்கப்ஸ் எழுதிய `வில்லி தி விசார்ட்' என்ற நூலை காப்பியடித்து எழுதப்பட்டதாக, அட்ரியன் ஜேக்கப்சின் குடும்பத்தினர் நியுயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஷிரா ஷென்ட்லின் நேற்று தள்ளுபடி செய்தார். இரு கதைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், அவற்றை ஒப்பிடுவது தவறு என்றும் நீதிபதி கூறினார்.
சனி, 8 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக