வெள்ளி, 30 மார்ச், 2012

முகச்சவரம் செய்வதில் உலகசாதனை (படங்கள் இணைப்பு)

கிறீஸில் தெஸ்ஸலோனிகி நகரில் 2,150 ஆண்கள் ஒன்றுகூடி ஒரே சமயத்தில் முகச் சவரம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். அவர்கள் இதற்கு முன் இந்தியாவில் 1,863 ஆண்கள் ஒரே சமயத்தில் முகச்சவரம் செய்து நிரைசவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளனர்.

ஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு

சராசரி வாரத்திற்கு நான்கு செய்திகளாவது இப்படி வந்து விடுகின்றன. "பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வாலிபர் கைது" என்று. இந்த அயோக்கியத்தனத்தை படித்த, படிக்காத என்று அனைவரும் பாகுபாடின்றி செய்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் பெண் போன்று வேடமிட்டு வந்த போராளி கைது (படங்கள்

ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்திலுள்ள கார்ஹாயி மாவட்டத்தில்
பெண் போன்று மாறுவேடமிட்டு வந்த தலிபான் போராளியொருவரை அந்நாட்டு புலனாய்வுப் படையினர் புதன்கிழமை கைது செய்து அழைத்துச் செல்வதைப் படத்தில் காணலாம்.

அல்பிரெட் அயன்ஸ்டீனின் மூளை முதன்தலாக பிரித்தானியாவில் காட்சிக்கு வைப்பு

பிரபல கணிதவியலாளர் கலாநிதி அல்பிரெட் அயன்ஸ்டீனின் மூளையானது முதல் தடவையாக பிரித்தானியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அல்பிரெட் அயன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு தனது 76 ஆவது வயதில் மரணமானார்.
இந்நிலையில் அவரது மூளை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு போமல்டிஹைட் இரசாயன திரவத்தில் பேணப்பட்டது.

தன்னுடன் மதுபானம் அருந்திய நண்பரை கொன்று சமைத்து உண்ட ரஷ்யர் கைது

ஆவணப்படம்

நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய நபரொருவர், நொறுக்குத் தின் பண்டங்கள் முடிந்ததால் தன்னுடன் மதுபானம் அருந்திய ஒருவரை கொன்று உண்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

“பேஸ்புக்' இணையத்தளத்தில் தொடர்பை ஏற்படுத்திய நிலையில் பெண் தற்கொலை

தாய்வானிய பெண்ணொருவர் “பேஸ்புக்' இணையத்தளத்தில் நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்த வேளையில் நச்சுப் புகையை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளயர் லின் “பேஸ் என்ற மேற்படி பெண் தனது 31 ஆவது பிறந்த தினத்தன்றே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டபோது 9 நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

உலகின் மிகவும் சிறிய நாய்க் குட்டி

உலகிலேயே மிகவும் சிறிய நாய்க்குட்டி என்ற பெயரை அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் எல் டொராடோ ஹில்ஸ் எனும் இடத்தில் பிறந்த “பெயொன்ஸ்' என்ற நாய்க்குட்டி பெறுகிறது.கடந்த 8 ஆம் திகதி பிறந்த இந்த நாய்க் குட்டியின் நீளம் 4 அங்குலம் மட்டுமேயாகும்.

வியாழன், 29 மார்ச், 2012

உலகில் இதுவரை ஒரு போதும் மேற்கொள்ளப்படாத புரட்சிகர முகமாற்று அறுவைச் சிகிச்சை

இதுவரை ஒருபோதும் மேற்கொள்ளப்படாத புரட்சிகரமான முகமாற்று அறுவை சிகிச்சையொன்றை அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்துள்ளனர்.

மணப்பெண்ணே இது உங்களுக்கு மட்டுமே

‘மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்” என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

காலில் விழுந்தும் பயனில்லை

அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை நேரில் அழைத்து விளக்கம் கோருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார்.

தாய் வெளிநாட்டில், 8 வயது மகளை ஆபாச படம்காட்டி கெடுத்த காமத்தந்தை கைது!

தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம்கெட்ட தந்தை ஒருவர் ராகம - கல்வலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வருக! வருக!

இந்திய அனைத்து கட்சி பாராளுமன்ற குழு ஏப்ரல் 16ம் திகதி இலங்கை வருகிறது

அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்த நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது.

தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்!

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.
தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

தனிமைப்பட்டு நிற்கும் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்மொழிந்து இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் முழுமையானதாகவும் மனநிறைவு அளிப்பதாகவும் இல்லை என்பது உண்மை.

சிவப்புக் கலர் உணர்ச்சியை தூண்டுமா!!!!!!!

சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ, காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சென்னை பெண்மணிக்கு வலது பக்கத்தில் இதயம்

மனிதனின் உடலில் இதயம் முக்கியமான உறுப்பு ஆகும். ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பும் முக்கியமான வேலை செய்கிறது. நாம் உறங்கினாலும் இது தூங்காது. 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டு இருக்கும். மூளை உள்பட மற்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்கும். ஆனால் இதயத்துக்கு ஓய்வு கிடையாது. அந்த அளவுக்கு இதயம் முக்கிய உறுப்பாக உள்ளது. இதயமானது மனிதனுக்கு இடது பக்கம்தான் இருக்கும். இதுதான் படைப்பு.

பொம்மை போல் உள்ள டீனேஜ் பெண் (படங்கள் இணைப்பு)

லண்டனைச் சேர்ந்த 15 வயது யுவதி இயற்கையிலேயே ஒரு பொம்மை போல காட்சியளிக்கும் இவளது பெயர் வீனஸ் ஏஞ்சலி. இவள் ஒரு அசல் பொம்மை போல பார்ப்பவர்களை அப்படியே வியக்க வைக்கிறாள்.இவளது குரலும் அவளைப்போலவே இனிமையாக இருக்கிறது.

“வசந்த காலங்களில் மட்டும்தான் குயில்கள் கூவும் வானொலிக் குயிலுக்கோ வருடமெல்லாம் வசந்தம்''

வானொலியில் குரலைக் கேட்டு வயது பதினாறு என்றல்லவா எண்ணினேன் என்றாராம் சிவாஜி. வயசுக்கும் வொய்ஸூக்கும் சம்பந்தமில்லாதவர் தான் ராஜேஸ்வரி

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக் கூட்டம் அதிசயம். வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம். துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம். குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்! ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற மேற்படி பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் கவிஞர் வைரமுத்து.

குயில் என்றால் கூவும் (பாடும்) பறவை என்று மட்டும் அர்த்தமல்ல. சொல், கோகிலம், மேகம் என்றும் குயிலுதல் என்றால் சொல்லுதல், ஒலிக்குதல், அமைத்தல், பதித்தல், செறித்தல், இழைத்தல், நெய்தல் என்றும் அர்த்தங்களாகும்.

முடிந்தவர்கள் உதவுங்கள்

பிரித்தானியாவில் தெற்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெற் ஒன்றில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டமையால் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடமாட முடியாத பேரவலத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இலங்கைத் தமிழ் சிறுமி துஸா கமலேஸ்வரனின் வைத்திய சிகிச்சைக்காக மனிதாபிமான நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றது லண்டன் பொலிஸ். துப்பாக்கி சுட்டு அனர்த்தம் இடம்பெற்று ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் துஸா வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றார்.

எதிராளியை சுத்தியலால் தாக்கிக் கொன்று அவரது மாமிசத்தை சமைத்து உண்ட கொடூரம்

சேர்பிய ஆயுதக்குழுவொன்று தமது குழுவைச் சேர்ந்த எதிராளி ஒருவரை சுத்தியலால் தாக்கிக் கொன்று கூரிய கத்தியால் அவரது உடலிலுள்ள தோலை உரித்து எலும்பை நீக்கி தசைப்பகுதிகளை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் அரைத்து உண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

தோலை உரித்து முகமூடி தயாரிப்பு

தகப்பனாகும் தகுதி யாருக்கு?

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

குடும்பத்தை இணைத்த “பேஸ்புக்'

 தனது 6 வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்த சிறுவன் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை “பேஸ்புக்' வலைத் தளத்தின் உதவியினால் சந்தித்த நெகிழ்ச்சிக்குரிய ம்பவம் ஒன்று மத்திய பிரதேசம் அருகே இடம்பெற்றுள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர்.

அழகிய நவநாகரிக யுவதிகளை உறுப்பினர்களாக கொண்ட கடத்தல் குழுவைச் சேர்ந்த மூவர் கைது

கடைகளுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சென்ற 54 பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் அழகான பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட கடத்தல் குழுவொன்றைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்களை பிரேசில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்படி மூவரும் “புளொன்டெஸ்' என்றழைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களாவர்.

கர்ப்பம் தரித்த பெண்கள் தினசரி 2 கிண்ணம் சூடான தேநீர் அருந்தவும்

பெண்கள் தினசரி இரண்டு கிண்ணம் சூடான தேநீர் அருந்தினால் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிப்பதாக பிரித்தானிய பிந்திய ஆய்வொன்று கூறுகிறது.

நியாயமான தீர்ப்பு

நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த பெற்றோருக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த முஸ்லீம் தம்பதிகளுக்கு சுவிஸில் 1400 சுவிஸ் பிறாங் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. சுவிஸ் பாசல் நகரில் வாழ்ந்து வரும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் பெற்றோர் தங்களது மகளை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக அளிக்கப்பட்ட நீந்தல் பயிற்சிக்கு அனுப்ப மறுத்ததால் 1400 சுவிஸ் பிறாங்க தண்டப்பணம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இப்படி நடக்கும் என்று இவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் (காணொளி இணைப்பு)

பிரித்தானியாவில் நபர் ஒருவரை பிடிப்பதற்கு 5 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒன்று அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கே நின்ற புல்-டோக் எனப்படும் நாய் (அதுவும் அதன் பெயர் "பொஸ்ஸின்") அவர்கள் ஐவரையும் பலமாகத் தாக்கியுள்ளது. முதலாவதாக காலில் கடி வாங்கி சதையை பிய்த்துக்கொண்ட பொலிஸ் ஆபிசர் காரில் ஓடிப் போய் ஒளிந்துகொண்டார், மற்றைய ஒரு பொலிஸ்காரரின் கையைக் கடித்த நாய், மற்றைய பொலிஸ்காரர்களையும் மாறிமாறி கடிக்கத்தொடங்கி விட்டது.


அமைச்சர் மேர்வின் பாணியில் யாழில் இமெல்டா அட்டகாசம்! நீதிமன்றம் அழைப்பாணை

யாழ். கொட்டடி மாட்டு இறச்சிக்கடை உரிமையாளரினால் யாழ். அரச அதிபருக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாட்டினைத் தடுத்தி நிறுத்தியமைக்கான தகுந்த காரணம் சமர்ப்பிக்குமாறு கோரியே யாழ்.அரச அதிபருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

புதன், 28 மார்ச், 2012

பெண்ணின் மார்பகம் வெடித்தது

காட்டில் நெருக்கடிகளுக்கு மத்தியில் தாக்குப்பிடித்தல் தொடர்பான நிகழ்வொன்றில் பங்குபற்றிய பெண்ணொருவரின் மார்பகம் மல்யுத்த போட்டியொன்றின்போது வெடித்த சம்பவம் மலேஷியாவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க, இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துன்புறுத்துவது நியாயம்தானா?

நியூஸ் வீக் என்ற சர்வதேச அமெரிக்க சஞ்சிகையில் மார்ச் மாதம் 27ம் திகதி வெளிவந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு

1968ல் தென் வியட்னாமில் சுமார் 500 அப்பாவி மைலாய் கிராமத்து மக்களை படுகொலை செய்த அமெரிக்க படையின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட்
வில்லியம் கெலி.

1968ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதியன்று வியட்னாமில் உள்ள அமெரிக்க படைகளின் 23வது அணியைச் சேர்ந்த சாலி கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு படையணி தென் வியட்னாமின் மை லாய் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்திற்குள் புகுந்து அங்கு மறைந்திருப்பதாக கூறப்படும் வியட்கொங் கெரில்லா போராளிகளை துவம்சம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

வயதை குறைத்துக் காட்டும் சல்வார்!

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
  • பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
  • நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.
  • ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.

உலகின் மிகப் பெரிய “அல்பினோ' குடும்பம்

வெளிறிய வெண்ணிறத் தோலைக் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பம் பிரித்தானியாவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வெளிறிய தோல் பாதிப்பு பரம் பரை ரீதியாக கடத்தப்படும் ஒன்றாக உள்ளது. தாயும் தந்தையும் வெளிறிய தோலைக் கொண்டிருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் வெளிறிய தோலுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகமாகும். பெற்றோர் வெளிறிய தோலைக் கொண்டுள்ள போதும், பிள்ளைகள் அப்பாதிப்புக்கு உள்ளாகாத நிலையில் பிறக்கும் சந்தர்ப்பங்களும் வெளிறிய தோல் பாதிப்பற்ற பெற்றோருக்கு வெளிறிய தோல் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

நபரின் காதைக் கடித்து துண்டாக்கிய வங்கி முகாமையாளர்

நபரொருவரின் காதை கடித்து துண்டாக்கிய பெண் வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
சமந்தா வில்லியம்ஸ் (28 வயது) என்ற மேற்படி வங்கி முகாமையாளர், காரி பெட்லர் (39 வயது) என்பவரை ஹோட்டல் ஒன்றின் வெளியில் வைத்து தாக்கி அவரது இடது காதின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கியுள்ளார்.

“பேஸ்புக்' இணையத்தளம் மூலம் காதலியை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

“பேஸ்புக்' இணையத்தளத்தைப் பயன்படுத்தி தனது காதலியை அச்சுறுத்தி, இணையத்தள “வீடியோ' கருவி மூலம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவரை மிரட்டிய நபரொருவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

வேலைக்கு செல்வதை தவிர்ப்பதற்கு தனது காலை வாளால் துண்டித்த நபர்

வேலைக்கு செல்வதை தவிர்ப்பதற்கு நபரொருவர் தனது இடது காலை வாளால் துண்டித்து, அதனை இறைச்சி வாட்டும் உபகரணமொன்றில் வீசிய சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.#

பலரை படுகொலை செய்து நரமாமிசம் உண்ட நபர் கைது

நரமாமிசம் உண்பதற்காக பலரை படுகொலை செய்த நபரொருவரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூமியின் மிக ஆழமான கடலில் தனியாகப் பயணித்து ஜேம்ஸ் கேமரூன் சாதனை!!

பூமியின்மிக ஆழமான கடல் பகுதியில் 11 கிமீ தூரம் பயணத்து மூன்று மணி நேரம் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

டெர்மினேட்டர், டைடானிக், அவதார் என மெகா வெற்றிப் படங்களின் இயக்குநர் கேமரூன்.

சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- 20minuten. பத்திரிகை தகவல்!

சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம் என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 27 மார்ச், 2012

காஷ்மீர் பிரச்சனையை கையில் எடுக்கும் இலங்கை !

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு தகுந்த பாடம் புகட்டப்படவேண்டும் என, ராஜபக்ஷ அன் கோவினர் எண்ணியுள்ளனர் என்ற செய்திகள் கசிந்துள்ளது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு சில நாடுகள் வாக்களித்தபோதும், 8 நாடுகள் இதில் வாக்களிக்கவில்லை. அந்த நாடுகளைப் போல மெளனமாக இந்தியா இருந்திருக்கலாம் என ராஜபக்ஷ சகோதரர்கள் கருதுவதாகவும், இதற்கு தகுந்த பாடம் புகட்ட காஷ்மீர் பிரச்சனையை வெளியுலகிற்கு கொண்டுசெல்லவேண்டும் எனவும் அவர்கள் எண்ணியுள்ளனராம். குறிப்பாக காஷ்மீரில் இந்திய இராணுவம் புரிந்துள்ள சில அட்டூழியங்கள் வெளியுலகிற்குத் தெரிந்தாலும் அதனை மேற்குலக ஊடகங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.

ஐந்து வயது துஷா கமலேஸ்வரன்

பிரித்தானியாவில் உள்ள சுப்பர் மாக்கட் ஒன்றில் ஆயுதக் குழு ஒன்றினால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பிய துஷா கமலேஸ்வரன் என்கின்ற ஐந்து வயதுச் சிறுமி பற்றி யாரும் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தீக்குளிப்பு படங்கள்


இந்தியாவுக்கு சீன ஜனாதிபதி ஹூஜிந்தாவோ விஜயம் செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு கடந்து வாழும் தீபெத்திய இளைஞரான ஜன்பெல் யெஷி (வயது 27) திங்கட்கிழமை புதுடில்லியில் தீக்குளித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்

சக்கர நாற்காலிக்கு பதிலாக புதிய சாதனம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)





Image Hosted by ImageShack.us

பொறாமையால் மனைவியினமூக்கை கடித்துத் துண்டாக்கிய கணவர்

பொறாமை காரணமாக தனது மனைவியின் மூக்கைக் கடித்துத் துண்டாக்கிய ஆசிரியரான கணவர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கழுத்து நெரித்து சாக்கடை குழியில் வீசி எரியூட்டிய கொடூரம் (படங்கள், காணொளி இணைப்பு)

18 வயது உக்ரேனிய யுவதியொருவர் குழுவொன்றால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு சாக்கடை குழிக்குள் போடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் அரசாங்க அதிகாரிகள் இருவரின் மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் வித்தியாசமான கோப்பிக்கடை (படங்கள் இணைப்பு)

மரக்கட்டைகளால் அலங்கரிக் கப்பட்ட உலகின் மிகவும் வித்தியாசமான கோப்பிக் கடையொன்றை ஜப்பானைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

டிஜிட்டல் அப்பாவிகளின் அந்தரங்கம்!

இணையத்தில் உலவுகிறீர்களா? அப்படியெனில் உங்களது பெயர், வயது, பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது, பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.

நித்தியானந்தவின் பேட்டி (வீடியோ இணைப்பு)

சாமியார் வேடம்போட்டு சல்லாபத்தில் ஈடுபட்டதால் சர்ச்சையில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா சுவாமி அண்மையில் சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டி

திருமண ஆடை அவிழ்ந்து வீழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த மணமகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)

உலகில் திருமண வைபவங்களின்போது மணமகன், மணமகள் ஆகியோருக்கு மிகவும் விலை உயர்ந்த ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். இவ்வாறு அணிவித்த ஆடை ஒன்று ரஷ்யாவில் இடம்பெற்ற திருமணவைபத்தில் அவிழ்ந்து விழுந்ததால் மணமகள் உட்பட அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மாவோயிஸ்ட் குழுவுடன் இணைந்து இலங்கையர் குழுவொன்று செயற்படுவதாக கர்நாடகா அரசு தெரிவிப்பு

ஆந்திராவின் மேற்கு பகுதி காடுகளில் செயற்பட்டு வரும் மாவோயிஸ் குழுக்களுடன் இணைந்து சிறிய இலங்கை குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 26 மார்ச், 2012

புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க

புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் போர்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம்.

ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு

கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல