வெள்ளி, 5 அக்டோபர், 2012

`ஊரடங்கு'!

`ஊரடங்கு' என்பது ஆங்கிலத்தில் கேர்பி(f)யூ (curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு' என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே பி(f)யூ' என்பதில் இருந்து `கேர்பி(f)யூ' வந்தது.

இதன் ஆதிகால அர்த்தம், `நெருப்பை மூடுவது' என்பதாகும். வெற்றி வீரர் வில்லியம் (Willium the Conquerer) இவ்வார்த்தையை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது நெருப்பை மூடி வைக்க வேண்டும் என்று சமிக்ஞை அளிக்கப்படும்.

நெருப்பால் ஏற்படும் பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த `கேர்பி(f)யூ' சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்தில் கேர்பி(f)யூ மணி அடிக்கப்படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல