வெள்ளி, 5 அக்டோபர், 2012

டுபாயில் தாஜ்மஹால்

டுபாய் நகரில் தாஜ்மஹால் போன்ற கட்டிடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்திற்கு ‘தாஜ் அரேபிய கட்டிடத் தொகுதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கட்டடத் தொகுதி தாஜ் மஹாலை விடவும் பல மடங்கு பெரிதாக அமைக்கப்படவுள்ளது. இதில் 30 அறைகள் கொண்ட ஹோட்டல், கடைகள், வணிக தொகுதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளதாக இந்தக் கட்டிடத் தொகுதி செயற்பாட்டாளர் அருண் மெஹ்ரா குறிப்பிட்டார். எதிர்வரும் 2014ஆம்ஆண்டு இந்த கட்டிடத் தொகுதியை முழுமை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் தாஜ் மஹால் 350 ஆண்டுகளுக்கு முன் மொகாலய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜுக்காக கட்டப்பட்டதாகும். 20 ஆண்டுகள் செலவு செய்து கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக பாரம்பரிய சொத்துகளில் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல