திங்கள், 27 ஜூன், 2016

வாயிலிருந்து நெருப்பை உமிழும் பக்தர்

இந்தியாவின் அகமதாபாத் நகரில், ரதயாத்திரைக்கான ஒரு ஒத்திகையின்போது, இந்து பக்தர் ஒருவர் தீயை தனது வாயிலிருந்து உமிழ்கிறார்.

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

வன்னியின் காடுகளைப் பற்றிய அனுபவம் கொண்ட ஒரு தளபதி இந்த உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
எப்படியிருந்தபோதும் இயக்கம் எதிர்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில் ஆழ ஊடுருவும் அணியினர் தமது கைவரிசையைக் காண்பித்துப் பல அதிர்ச்சி வைத்தியங்களைச் செய்தார்கள்.
இறுதிப்போரின் கடைசிக் கட்டம்வரை ஆழ ஊடுருவும் அணியினரின் நடவடிக்கைகளைப் புலிகளால் தடுத்துநிறுத்த முடியவில்லை.

தலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24)

• ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் சிதைந்து, நாடிப்பகுதி உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது.
• 2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும் நிலப் பிரதேசங்களை ஆக்கிரமித்தபடி வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.

• தலைவரைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் இழப்பு ஒரு பேரிழப்பாக இருந்தது. தலைவரின் எந்தக் கருத்தையும் மறுகேள்வி கேட்காமல் செயற்படுத்தும் உயர் விசுவாசம் கொண்ட போராளியாக அவர் இருந்தார்.

தொடர்ந்து……

ஞாயிறு, 26 ஜூன், 2016

8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்!


ஈரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர்கள், நீதிமன்றத்தை நாடிய நெஞ்சை பிளக்கும் சம்பவம் தமிழகத்தின் அண்டை மாநில ஆந்திர நகரமான சித்தூரில் நடந்துள்ளது.

புதன், 22 ஜூன், 2016

லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!!

லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ்.
இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 17 ஜூன், 2016

மனதை அமைதிப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்க இந்த 2 இடத்துல அழுத்துங்க...

அனைவரும் அக்குபிரஷர் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சிகிச்சையின் ஸ்பெஷலே, உடலின் தீர்க்கரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. அக்குபிரஷர் போன்றே அக்குபஞ்சர் என்ற சிகிச்சை ஒன்று உள்ளது. ஆனால் இந்த சிகிச்சைக்கு ஊசி பயன்படுத்தப்படும்.

செவ்வாய், 14 ஜூன், 2016

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு

• பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.

• பல்வேறு களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த வீரப் பெண் தளபதியின் விதுஷா உடலைக் கவனிக்க யாருமின்றித் தோல்வி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.

தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில் மரணத்தை தழுவியிருந்தார்.


தொடர்ந்து…

திங்கள், 13 ஜூன், 2016

பிரித்தானியாவின் வெளியேற்றம்: ஆம் அல்லது இல்லை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு முச்சந்தியில்!

பிரித்தானிய காலனியில் வாழ்ந்த ஒரு கிராமவாசிக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் ஆம் அல்லது இல்லை என்கிற இரண்டு ஆங்கிலச் சொற்களை மட்டும் தெரிந்து வைத்திருந்தார், அனால் அதன் ஆர்த்தம் அவருக்குத் தெரியாது. ஒருநாள் அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளி, 10 ஜூன், 2016

நண்பியுடன் இரகசிய காதல் ; கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

வியாழன், 9 ஜூன், 2016

பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லையா

திடீரென உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லையா. என்ன செய்தாலும், மீண்டும் லாக் இன் காட்சி திரை காட்டப்படுகிறதா. உங்கள் கணக்கு பெயர் மற்றும் பாஸ்வேர்டினைச் சரியாகத்தான் இன்புட் செய்து இருப்பீர்கள். இருப்பினும் கணக்கைத் திறக்க இயலவில்லை. இதற்கான காரணமும், தீர்வும்

எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாவின் கீழே கோடு: அலகுகளை மாற்றும் வழி: ஆல்ட்+ஷிப்ட் கட்டளைகள்:

டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.

வேர்ட் டிப்ஸ்.. வேர்ட் டேபிளைப் பிரிக்க: மாறுதலாகப் பக்க எண்கள்: டேபிளை முழுமையாக அழிக்க:

வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்துவிடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள்.

உங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்தவர்கள்

பேஸ்புக் தளத்தை நமக்கென உருவாக்கி, நம் நண்பர்களுடன் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாம் நம் பேஸ்புக் கணக்கில் உள்ள தளம் சென்றால், நம் நண்பர்கள் பதிவு செய்தவை எல்லாம் வரிசையாகக் கிடைக்கின்றன. சில வேளைகளில், நம் நண்பர்கள் பெயர்களில் கிளிக் செய்து, அவர்களின் தளம் சென்று, அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அவர்களின் Timeline பக்கத்தைப் பார்க்கிறோம்.

பேஸ்புக்கின் பாதுகாப்பு மையம்

பேஸ்புக் தளத்தில் முக்கியமான செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற ஒரு மையம் இயங்குகிறது. இதனை பேஸ்புக் Support inbox என அழைக்கிறது. இதில் நாம் கொடுத்துள்ள புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் டிபண்டர்

விண்டோஸ் இயக்க முறைமையில், அதன் இயக்கத்தினைப் பாதுகாக்கும் வகையில் தரப்பட்ட செயலியே 'விண்டோஸ் டிபண்டர்'. நம் கம்ப்யூட்டருக்குள், நமக்குத் தெரியாமல் நுழைந்து நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் புரோகிராம்களின் வருகையையும், செயல்பாட்டினையும் கண்காணிக்கும் புரோகிராம், விண்டோஸ் டிபண்டர். இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்டது.விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10ல், விண்டோஸ் டிபண்டர் செயலி, மால்வேர் புரோகிராம்களையும் தடுக்கும் வகையில் விரிவு படுத்தப்பட்டுத் தரப்பட்டது.

வாள்வெட்டுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து தகவல் தரக் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஷ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.

புதன், 8 ஜூன், 2016

வெளிநாடு சென்ற எனது மகளை மீட்டுத் தாருங்கள்!

கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தானுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவுமில்லை. இப்போது எதுவித தொடர்புகளும் இல்லை. ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தனது மகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என யுவதியின் தாய், அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செவ்வாய், 7 ஜூன், 2016

இது வீரப்பனின் கதை அல்ல... வீரப்பன் சொன்ன கதை...!

து 1997 ம் ஆண்டு. ஒரு முறை சந்தனக் கடத்தல் வீரப்பன், தவறுதலாக கானுயிர் புகைப்படக்காரர்கள் குருபகர் மற்றும் செனானியையும், வங்காளப் பேராசிரியர் மைத்தியையும்அரசு உயரதிகாரிகள் என்று தவறுதலாக நினைத்து கடத்திவிடுகிறான். இரண்டு வாரங்கள் கழித்து இருவரையும் விடுவிக்கிறான். சில மாதங்கள் கழித்து, வீரப்பனுடன் இருந்த 14 நாட்கள் அனுபவங்களை ‘சுதா’ என்னும் கன்னட வார இதழில் தொடராக எழுதுகிறார்கள். பின், “Birds, Beasts Bandits 14 Days With Veerappan” என்ற தலைப்பில்  2011 ம் ஆண்டு புத்தகமாக வருகிறது.

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் புலிகளின் பிரதிநிதிகளால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்வைத்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதை இயக்கம் தவிர்த்துக்கொண்டது.

திங்கள், 6 ஜூன், 2016

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

ஞாயிறு, 5 ஜூன், 2016

கிராமத்து மீன் குழம்பு

கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள்.

சனி, 4 ஜூன், 2016

புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தமக்கு உயிராபத்து- தமிழினியின் கணவர்

 தமிழினி, ஜெயகுமார் மகாதேவன்
விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் பொறுப்பாளரான காலஞ்சென்ற தமிழினியின் கணவர் ஜெயகுமார் மகாதேவன், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 2

(பகுதி – 2)

கேணல் தமிழினி மார்ச் 2009ல், வன்னி கிழக்கு போர்முனையில் ஈடுபட்டிருந்த எல்லா அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களும் சமூகமளித்திருந்த கடைசிக் கூட்டத்தை கையாண்டிருந்தார். அது ஒருகாலத்தில் வடக்கில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் நடைபெற்றது, இந்தக் கூட்டம் இயக்கத்தின் மரபுவழி போராடும் திறன் உடனடி வீழ்ச்சி அடைந்திருப்பதை நன்கு வெளிப்படுத்தியது. தனது மூத்த சகாக்களை கலந்து கொள்ளும்படி அழைப்பனுப்பிய ஒரு இறுதி மாநாட்டில், பொட்டு அம்மான் ஒரு அதிசயத்தின் ஊடாகவே யுத்தகளத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றியை அடைய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டார்.

தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 1

 image source: google   Col. Vithusha
(பகுதி - 1

சரணடையும் பொதுமக்களைச் சுட விதுஷா உத்தரவிட்டார்

மாலதி படைப்பிரிவின் தளபதி விதுஷா, கேணல் தமிழினி தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்ட உடனேயே அழ ஆரம்பித்தார். இந்தச் சந்திக்கும் வாய்ப்பு கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதிக்கு கிழக்கே எஞ்சியிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் கடைசிக் கோட்டைகளில் ஒன்றான சுகண்டிபுரத்தில் இடம்பெற்றது. கேணல் தமிழினி, விதுஷாவை மேற்கோள் காட்டி அவள் தன்னிடம் தெரிவித்ததாகச் சொல்லியிருப்பது, இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது தனக்கு சங்கடமாக இருக்கிறது என்று. இராணுவத்திடம் சரணடைய விரும்புவோரை முங்காலுக்கு கீழே சுடும்படி உயர்மட்ட தலைமையிடம் இருந்து தனக்கு உத்தரவுகள் கிடைத்து வருவதாக விதுஷா வெளிப்படுத்தினாள். அந்த கட்டளைகளையிட்டு அவள் ஆத்திரமடைந்து இருந்தாலும் நிலமையைப் பற்றி சில அங்கத்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தாள். அவர்கள் அவளிடம் எப்படி தங்கள் சொந்தங்களைச் சுட முடியும், அதைவிட நாங்களே எங்களைச் சுட்டுவிடுவது சிறந்தது என்று சொன்னார்கள்.

வெள்ளி, 3 ஜூன், 2016

இப்படியும் ஒரு கொடுமை... சித்தியால் கொரடூரமாக சித்திரவதைக்குள்ளான இரு சகோதர சிறுமிகள்!!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் சின்னம்மாவினால் சித்திரவதைக்குள்ளான இரு சகோதர சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

புதன், 1 ஜூன், 2016

இணையத்தைக் கலக்கிய மாயத் தோற்றத்திற்கான விடை....

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’

மாயத்­தோற்­றங்­களை ஏற்­படுத்தும் சில புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது இணை­யத்தில் பரவி வரு­வ­துண்டு. தற்­போது ஒரு இளம் ஜோடி பரஸ்­பரம் அர­வ­ணைத்­துக்­கொண்ட நிலையில் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று இவ்­வாறு பர­வி­யுள்­ளது.

சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி சொல்வது என்ன தெரியுமா?

வ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும். சில கோட்பாடுகளில் கைவிரல்கள் ஒருவரின் குணநலன்களைப் பற்றி சொல்வதாக கூறப்பட்டுள்ளது.

எக்ஸெல் 2003 ல் தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகுவதை நிறுத்த

எக்ஸெல் 2003 ல் அனைத்து ஒர்க் புக்குகளுக்கும், தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகின்றன. நீங்கள் விரும்பும் ஒர்க்புக்கிற்கு மட்டும், பேக் அப் பைலை உருவாக்கி வைக்க வழி முறை:

இமேஜ் வியூவர் போட்டோ வியூவர்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வரும் இமேஜ் வியூவரைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு இமேஜ் புரோகிராம் அல்லது பழைய விண்டோஸ் போட்டோ வியூவரை திரும்பப் பெற்று, இன்ஸ்டால் செய்ய...

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க

இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.

எக்ஸெல் டிப்ஸ்... செல்களைச் சுற்றி கோடுகள்: படுக்கை / நெட்டு வரிசை மாற்றம்:

செல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

வேர்ட் டிப்ஸ்... மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் பேக் அப் காப்பி: புல்லட் பாய்ண்ட்ஸ்:

மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.

பேஸ்புக் கணக்கினைப் பாதுகாக்க

நீங்கள் வழக்கமாக 'பேஸ்புக்' அக்கவுண்ட் பயன்படுத்துபவரா? ஒரு நாள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், எதனையோ பறிகொடுத்தது போல் உள்ளதா? அப்படியானால், அதனைச் சரியாகப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு நல்லது? அதற்கான பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமல்லவா?

பழைய நகைகள் புதுசுபோல் ஜொலிக்க என்ன செய்யலாம்?

நீங்கள் உங்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள். அதற்காக தினமும் பல மணிநேரம் செலவிடுகிறீர்கள். அத்துடன் உங்கள் நகைகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள்.

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்...

வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைபுலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் நடை பெற்று வருகின்றன என பிரதேச பொது மக்களால் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

• தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா??

• ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர யுத்தம்’ முன்னெடுக்கப்பட்டது.

• முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.

…..முன்னயை தொடரின் தொடர்ச்சி…

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் ‘உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி’ என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல