செவ்வாய், 26 அக்டோபர், 2010

தனக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்காதலால் தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்! (படங்கள் இணைப்பு)

சென் வய் யி என்ற தைவான் நாட்டுப் பெண் தனது இளவயது முதல் தனக்கேற்ற ஜோடியை பல வழிகளிலும் தேடிக் கிடைக்காமையால் மனமுடைந்துபோன அவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்.

எந்திரன் கதை என்னுடையது!

14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது:
எந்திரன் சினிமா, `ஜுகிபா' சிறுகதையில் இருந்து திருடப்பட்டது
போலீஸ் கமிஷனரிடம், எழுத்தாளர் புகார்

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `எந்திரன்' சினிமாவில் வரும் கதை, `14 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய சிறுகதையில் இருந்து திருடப்பட்டது' என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான பெயர்கள் நீக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. பொட்டு அம்மான் பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் தலைமறைவு

இராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் பால் அசான்ஜ் (39), தான் கைது செய்யப்படவோ, அதன்பிறகு, கொலை செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக கருதி தலைமறைவாகி விட்டார். அவர் ரகசிய ஆவணங்கள் வெளியானபோது சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தங்கி இருந்தார். பிறகு, அங்கிருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பறந்தார். அப்படி செல்லும்போது, அவரது பையும், 3 லேப்-டாப்புகளும் காணாமல் போய் விட்டன. பிறகு, பெர்லினில் இருந்தும் தப்பிய ஜூலியன் அசேஞ்ச், தற்போது லண்டனில் தங்கி இருக்கிறார்.

திங்கள், 25 அக்டோபர், 2010

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரின் மைத்துனி முஸ்லிமாக மாறினார் (படங்கள் இணைப்பு)

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரியின் ஒன்றுவிட்ட சகோதரி லாரன் பூத் (வயது 43). இவர் ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான, "பிரஸ் டிவி'யில் பணியாற்றி வருகிறார். மனித உரிமைக்காகவும் போராடக் கூடியவர். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவரான லாரன் பூத், தற்போது முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். கடந்த ஆறு வாரங்களுக்கு முன், ஈரான் நாட்டில் புனித நகரமாகக் கருதப்படும், "குவாம்' நகருக்குச் சென் று திரும்பிய பிறகு இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரிஷானா மனு நிராகரிப்பு (படங்கள் இணைப்பு)

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண் ரிஷானா

சவுதி அரேபியாவில் குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நபீக்கின் மேன்முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உயர்தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்ட பூனைக்குட்டி (படங்கள் இணைப்பு)

குழந்தை ஒன்றால் மலசலகூடத்துக்குள் தூக்கி வீசப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன பூனைக்குட்டி தீயணைப்புத் துறையைச் சார்ந்த மீட்புப் படையினர் உதவியுடன் நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிர் பிழைப்பு

இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணொருவர், சில மணி நேரத்தின் பின் உயிருடன் எழுந்த விசித்திர சம்பவம் பிரான்ஸ் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

காரில் சடலத்துடன் பல மாத காலமாக பயணம் செய்த அமெரிக்கப் பெண்

பல மாத காலமாக வீடு வாசல் அற்ற பெண்ணொருவரின் சடலம் காரின் பயணிகள் ஆசனத்தில் இருக்க காரைச் செலுத்தி வந்த பெண்ணொருவர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விசித்திர சம்பவம் அமெரிக்க தென் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
வாகனம் செல்லும் பாதைக்கு முட்டுக் கட்டையாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை கிடைத்த முறைப் பாட்டையடுத்து குறிப்பிட்ட கார் சோதனையிடப்பட்டது.

ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் மனிதன்

“நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகத்து வருகிறதே தவிர குறைய வில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25).

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல