சனி, 12 ஜூன், 2010

ஏதாச்சும் புரியுதா?

தற்கொலை செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற்கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமாகப் படித்தால்தான் விஷயம் புரியும்)

……நான் ஒரு கைம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே அவளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண்ணை எனது தகப்பனார் காதலித்துத் தமது மனைவியாக்கிக் கொண்டார். இதன்மூலம் என் அப்பா எனக்கு மருமகன் ஆனார். என் தகப்பனாரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஒன்று விட்ட மகள் எனக்குச் சித்தியாகவும் ஆனாள்*

என் மனைவி ஓர் ஆண் சிசுவைப் பெற்றெடுக்க அவன் என்னுடைய அப்பாவுக்கு மைத்துனன் ஆனான். என் சித்தியின் சகோதரன் என்ற முறையில் எனக்கோ தாய்மாமன் ஆனான்*

என் தகப்பனாரின் மனைவி ஒரு மகனுக்குத் தாயானாள். அவன் எனக்குச் சகோதரன். மற்றும் பேரனுமானான். (என் மகளின் மகனல்லவா?)

இப்போது என் மனைவி எனக்குப் பாட்டியானாள். (என் சித்திக்குத் தாய் என்ற உறவில்) நான் என் மனைவிக்குப் பேரனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று* ஒருவனு டைய பாட்டிக்குக் கணவனாயிருப்பவன் அவனுக்குத் தாத்தா ஆகிறhன் அல்லவா? இதன்படி நான் எனக்கே தாத்தா ஆகிவிட்டேன், இக்குழப்பமே எனது தற் கொலைக்குக் காரணம்*††

(புரியாவிட்டால் மீண்டும், மீண்டும் ஊன்றிப் படியுங்கள்... புரியும் வரை)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல