இவர்களுக்கு
இடப்பட்ட பட்டமெனினும்
வீற்றிருக்கிறார்கள்
வெறும் வேலைக்கார்களாய்
பிள்ளை எனும்
பெயரோடு
பிறந்த வீட்டில்
சிறை கிடந்தவர்கள்
மனைவி எனும்
மகுடம் மாட்டப்பட்டு
சிறை மாறுகிறார்கள்
புகுந்த வீட்டிற்கு
பேசி முடிக்கப்பட்ட
சீதனத்தொகை
செலுத்த முடியாமல்
மாமியார் வார்த்தை கேட்டு
மரண வேதனையை
நித்தமும் சுமக்கும்
நெருப்பு வாழ்வு
தந்தையாகும் தகுதி
கணவனுக்கு இல்லாவிடினும்
பரிசீலிக்காமலே
பலர் சொல்லிவிடுகிறார்
அவளை ‘மலடி’ என்று
வீட்டுவளாகம் தவிர
வெளியிடம் ஏதுமறியா
வேதனை நிலை
பேசாமல் அவளிருந்தால்
வாயில் பிட்டா என
வசைபாடும் புகுந்தவிட்டார்
வாய் திறந்து பேசிவிட்டால்
வாய்க்காரி என
வைக்கிறார் பட்டம்
குடும்பம் என்பது
கோயிலா...?
இல்லை... இல்லை
இவர்களுக்கு இது
சாத்தான் வீடு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக