வெள்ளி, 22 அக்டோபர், 2010

டுபாயில் இலங்கையருக்கு 3 மாத சிறைத் தண்டனை

இலங்கையை சேர்ந்த பஸ் சாரதி ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனையும், தண்டனை முடிந்ததும் நாடு கடத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.

31 வயதான இலங்கையை சேர்ந்த பஸ் சாரதி, பஸ்ஸில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்னொருவரை அவர் ஒருவர் மாத்திரம் பஸ்ஸில் இருந்த போது பாலியல் நோக்கத்துடன் தொட்டார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீதிமன்றில் சாரதி குற்றத்தை மறுத்துள்ளார். அப்பெண் பஸ்ஸில் தனிமையில் அழுது கொண்டிருந்ததாகவும் அவரை ஆறுதல்படுத்தும் நோக்குடன் அவரது தோலில் மாத்திரம் கைவைத்து அழைத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை குற்றம் சுமத்திய பெண்னின் வழக்கறிஞர் முற்றிலும் மறுத்து பெண்மைக்குரிய உடல்பாகங்களை தொடமுயற்சித்தார் என நீதிமன்றில் வாதிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல