வெள்ளி, 22 அக்டோபர், 2010

பிரித்தானிய கத்தோலிக்க பாதிரியாருக்கு 21 வருடம் சிறை

20 வருடங்களுக்கு மேலாக சிறு இளைஞர்களை பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்தியமைக்காக 73 வயதான ஜேம்ஸ் ரொபின்ஸன் எனும் கத்தோலிக்க பாதிரியாருக்கு பிரித்தானியாவில், பேர்மிங்ஹாம் கிரௌன் கோர்ட் 21 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

1959 ம் ஆண்டிற்கும் 1983 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பாதிரியாராக இருந்தபோது 21 குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தார்.

1985 இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதுபற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்தியதும், இவர்  அமெரிக்கா, கலிபோனியாவிற்கு தப்பியோடிவிட்டார். சென்ற வருடம்தான் இவரை அமெரிக்கா பிரித்தானியாவிற்கு நாடுகடத்தியது.

இவ்வழக்கில் இவரால் பாதிக்கப்பட்ட 6 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல