புதுமாத்தளன் பிரதேசத்திற்கு 200க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் செல்ல உள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு புதுமாத்தளன் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய செயற்பட்ட அந்த இராணுவ அதிகாரி இவர்களுக்கு தேவையான உச்சளவிலான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இந்த முக்கியஸ்தர்களில் அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதனும் ஒருவர்.
இந்த விஜயத்தின் போது, கே.பியின் பயண பொதியை விமானப்படைச் சிப்பாய் ஒருவரே சுமந்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, படையினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நிகழ்வில் குமரன் பத்மநாதன் வட மாகாணத்தின் எதிர்கால முதலமைச்சர் என்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அந்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக