வியாழன், 11 நவம்பர், 2010

நாவற்குழியில் குடியேறச் சென்ற தமிழ் மக்கள் திருப்பப்பட்டனர்

நாவற்குழிப்பகுதியில் குடியேறச் சென்ற தமிழ்க்குடும்பங்கள் நேற்று பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் தெரிவித்தார். 1995 வரையான காலப்பகுதியில் இங்கு குடியிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் அருகில் இருந்த உறவினர்களின் வீடுகளிலேயே வாழ்ந்துவந்தனர். குறித்த அரச காணி ஏற்கனவே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இப்குதியில் ஏற்கனவே அவர்கள் குடிய மர முற்பட்ட போதும் அப்பகுதிக் கிராம அலுவ லர் அதற்கான அனுமதியை மறுத்துவிட் டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில் சிங்கள மக்கள் குடியேற் றப்பட்டமை தொடர்பில் அச்சம் கொண்டி ருந்த அவர்கள் தமது காணிகள் பறிபோவ தாக எண்ணி நேற்றுக்காலை அங்கு குடியே றுவதற்கு தயாரான நிலையில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பொருட்டு அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் அவர்களை விரட்டியுள்ளனர். அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அப்பகு தியிலுள்ள படை முகாமின் முன்னால் குவிந்து நின்றனர். படையினர் உரிய நடவடிக்கை எடுப் பதாக வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து அவர்கள் ஏற்கனவே அடைக்கலம்புகுந்தி ருந்த உறவினர் வீடுகளுக்குத் திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல